சனி, 15 ஜூன், 2013

இனமானத் தந்தை ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!

தமிழின விரோதிகள் 70,90 அகவைகளை கடந்தும் இருக்கையில் ஐயா மணிவண்ணன் அவர்களின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பு...

அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் !!!


உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அறியாத பாமரன்.
பயமொன்றை அறியாது உள்ளத்தில் உள்ளதை பகிரங்கமாக அறிவிப்பதில் இவர் ஒரு கரும்புலி...

பொதுவுடைமை சிந்தனைவாதி...
 
புலித்தோல் போர்த்திய வேங்கை
 

 வீரவணக்கம்...!!!
இழப்பதற்கு எதுவும் இல்லை என்றீர்..
உங்களையே இழந்து தவிக்கும் எங்களுக்கு இனி என்ன இருக்கிறது இழப்பதற்கு?!!!

உன்னதக் கலைஞனை அறிமுகம் செய்ததற்காக பெருமைப்படாது பாரதிராஜா என்கிற பொறம்போக்கு
தூற்றிய போதும் நன்றி மறவாது கண்ணீர் சிந்தும் உன் மனிதம்
இங்கு எத்தனை பேருக்கு உண்டு?

ஐயா மணிவண்ணனின் அமைதிப்படை -2 பார்க்க திரைஅரங்கு சென்றேன்.ஒரு வாரத்திற்க்குள்ளே படத்தை எடுத்து விட்டார்கள். நேற்று தான் பார்த்தேன். நிறைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அந்த படம் வெற்றி பெற்று இருந்தால் கூட அந்த மகிழ்ச்சியில் நீண்ட வருடம் நம்முடம் இருந்திருப்பார்...உண்மையில் அவர் இழப்பு நெஞ்சை பிழிகிறது.