ஞாயிறு, 30 நவம்பர், 2014

பழைய எண்:தமாக- புதிய எண்:தமாக(மூ)




தேசியக் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரியத் தொடங்கினால் உடனே ஒரு குட்டி போட்டு அதற்கு மறைமுகமாக தாங்களே தலைவர்களை நியமித்து, அது ஏதோ முற்றிலும் தனக்கு விரோதமான கட்சி போன்ற மாயையை மக்களிடம் தோற்றுவித்து தங்களுக்கு இருக்கும் மிச்ச சொச்சம் வாக்களர்களை தக்க வைத்துக் கொள்ளும் சம்பிரதாயம் தான் இந்த தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) உதயம். 

இது கொக்கோ கோலாவும் ஸ்பிரைட்டும் வேறு வேறு என்று காட்டிய விளம்பர உத்தி. 

1996இல் தோன்றி 2002 இல் சில அமைச்சர் பதவிக்கு பேரம் பேசி அதற்கு விலையாக அவர்களே அதை மண்ணுக்குள் போட்டு கல்லறைக்குள் புதைத்ததை புதிய வர்ணம் பூசி இத்துப்போன மிதிவண்டியில் ஏற்றி மறதி மிக்க தமிழர் சந்தையில் விற்பனை செய்ய முனைந்து இருக்கிறார்கள் இந்த நவயுக அரசியல் வியாபாரிகள். 2009இல் தாங்கள் சார்ந்த காங்கிரசு கட்சி தமிழர்களை முள்ளிவாய்க்காளில் இனப்படுகொலை செய்து புதைத்த போது வராத வீரியம், 650 தமிழ் மீனவர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது வராத கோவம், ஐ.நா வில் ஆதரவாக இந்தியா வாக்கு அளித்த போது வராத ஆத்திரம், திடீரென்று வந்துள்ளது என்றால், காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? 

வலிமையான பாரதமாம்..!!! தமிழன் குருதியை உரிந்து குடித்து அது நன்றாக கொழுத்துப் போய் தான் உள்ளது. தமிழன் தான் சப்பாணியாக இருக்கிறான். இந்த அடிப்படையை கூட உணராத இவர்கள் தமிழர்களுக்காக போராட போகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் இருந்த போது தமிழனை நட்டு நிமிர்த்து விட்டார்கள்..இப்போது தூக்கி நிமிர்த்தப் போகிறார்களாம்!!! 

2016இல் ஒரு சில தொகுதிகளை வென்றெடுத்த பிறகு தாய்க்கட்சியோடு இணைந்து விடும் இந்த பன்றிகள் கூட்டம். ஒன்று மட்டும் சொல்லிகொல்கிறோம்...

இனி காங்கிரசு தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகள் போட்டாலும்...அதற்கு தமிழன் பரிசாக தருவது கள்ளிப்பால் மட்டுமே...!!!

tamil manila congress(moopanar) TMK GK VASAN G,K.Vasan new party 

குஷ்புவிற்கு பதிலடி



கட்டியவன் முன்னே கண்டவனையும் கட்டி அணைக்கும் நடிப்பை தொழிலாக கொண்ட உனக்கு, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தன் மகன்களை, குடும்பத்தை வளமான வாழ்வை தியாகம் செய்த தேசியத் தலைவரை இறைவனாக கொண்டு நடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்  பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தொழில் செய்து சம்பாதித்ததை காப்பற்ற, மாறி மாறி அரசியல் களம் புகும் உனக்கு , 
  • "இலட்சியத்தை விட்டுவிட்டால் இயக்கத்தை தடை செய்யவில்லை என்றபோது, இலட்சியம் இல்லை என்றால் இயக்கம் எதற்கு?" என்று தமிழின விடுதலை என்கிற ஒரே  கொள்கைக்காக இறுதிவரை உறுதியாக இருந்த 
  • முதலமைச்சர் பதவி தேடி வந்த போதும் கூட, தமிழின விடுதலை என்கிற ஒற்றை தாரக மந்திரத்தை விட்டு நழுவாத தலைவனின்

 விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேச சிறு தகுதி கூட இல்லை.  எது பேசினாலும் தமிழன் கண்டுகொள்ள மாட்டான் என்று நினைத்தனையோ? அந்த காலம் மலை ஏறி விட்டது. பேசிய வார்த்தைகளுக்கு உன்னை மன்னிப்பு கேட்க வைக்கும் காலம் வரும்.


திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று சொன்ன நீ, கட்டிய கணவன் அனுமதியோடு செய்தால் விபச்சாரமும் வியாபாரம் தான் என்றும் சொல்வாய்.

இந்த பிடாரிக்கு கோயில் கட்டி காட்டேரியை கருவறைக்குள் வைத்த அந்த முட்டாள் தமிழர்களுக்கு இதுவும் தேவை தான்...!!!