சனி, 10 டிசம்பர், 2011

மின்னஞ்சல் அனுப்புங்கள்-த.தே.பொ.கட்சி தோழர்களை விடுவிக்க..

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தோழர் அருணபாரதி தலைமையில் சென்னை தியாகராய நகரில் மலையாளிகளின் ஜோசு ஆலுக்காஸ் நகைக் கடை முன்னே 07.12.2011 அன்று அமைதியான முறையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

அன்று மாலையே தோழர் அருணபாரதி மற்றும் த.தே.பொ.கட்சித் தோழர்கள் இதர ஐவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது தமிழக அரசின் பொறுப்பான,"வெப்பன் சப்ளையர்" என நரிக்குறவர் திரு.சேகர் அவர்களை தாம்பரத்தில் கைது செய்த அதே கடமை தவறாத சீர்மிகு காவல் துறை.

இதற்கிடையில் சைதாப்பேட்டையில் மலபார் உணவகம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் உண்மையானவர்களை கண்டுபிடிக்க முடியாததால் சிறையில் உள்ள நமது தோழர்களின் மீது அந்த குற்றச்சாட்டை சுமத்தி சிறை வாசத்தை நீட்டித்து உள்ளது தமிழக காவல் துறை.

தோழர்களே...

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான,இட்டுக் கட்டிய,ஜோடிக்கப்பட்ட வழக்கு. செய்த குற்றத்திற்கு சிறை செல்ல தயங்காதவர்கள் நமது தோழர்கள்.ஆனால் செய்யாத குற்றத்திற்காக த.தே.பொ.கட்சித் தோழர்களை சிறையில் தள்ளியதை கண்டித்து,அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசின் முதல்வர் செல்லுக்கு உடனடியாக மின்னஞ்சல் அனுப்புங்கள். 

தமிழர்களுக்காக,மூவர் உயிர்காப்பு,அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை காப்பு அன தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடத்தி வரும் நமது கட்சி,சிறைவாசம் அனுபவிக்கும் தோழர்களை பிணையில் வெளிக் கொண்டுவரக் கூட முடியாத பொருளாதார சிக்கலில் உள்ளது. எனவே தாங்கள் அனுப்பும் மின் அஞ்சல் பேருதவியாக இருக்கும்.
------------------------
***************************************************************
பெறுதல்:  cmcell@tn.gov.in

பொருள்: பொய் வழக்கில் சிக்குண்ட தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை விடுவிக்கக் கோரி.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,


முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக அமைதியான முறையில் 07.12.2011 அன்று தி.நகரில் முற்றுகை போராட்டம் நடத்திய தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் அருணபாரதி உட்பட ஆறு பேர் , சைதாப்பேட்டை மலபார் உணவகம் சேதப்படுத்தப் பட்ட வழக்கில் பொய்யாக புனையப்பட்டு புழலில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை தாங்கள் தலையிட்டு விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு 

_____________

*******************************************************************

இதை அப்படியே நகல் எடுத்து உடனடியாக மின்னஞ்சல் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பின் நிகழ்வு:15-12-2011
ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம்- த.தே.பொ.கவினருக்கு ஜாமீன்:

இதற்கிடையே சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் நிபந்தனை 
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பில், மலையாளிகளை வெளியேறக்கோரி சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு க.அருணபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப் போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து சிறைக்காவல் ஆணை பெற்றனர்.

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே 7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூறையாடியதாகவும், அக்கடைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக்காயம் உண்டாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப் பொய்யானது, வேண்டுமென்றே காவல்துறையினரால் புனையப்பட்டது என்று ழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையினான வழக்கறிஞர் குழு 14.12.2012 எழும்பூர் நீதிமன்றத்திலும், சைதை நீதிமன்றத்திலும் வாதிட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கற்புக்கு விலை நிர்ணயம்-தமிழக அரசின் புதிய சாதனை

தமிழக பெண்களின் கற்புக்கு தமிழக அரசின் புதிய விலை நிர்ணயம்

காவல்துறையால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட இருளர் இனப் பெண்கள் நால்வருக்கு தலா ரூ.ஐந்து லட்சம் விலை பேசி தமிழக பெண்களின் கற்புக்கு அம்மா அவர்கள் புதிய விலை நிர்ணயம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிவாரணத்தை தமிழக அமைச்சர் அளித்த பொழுது அந்த அப்பாவிப் பெண்கள் தமிழக முதல்வர் "புரட்சி" தலைவிக்கு நன்றிகள் கூறிய பொழுது "நீதி" நிலைநாட்டப்பட்டதைக் கண்டு உண்மையிலேயே கண்கலங்கியது.

விவசாயியின் விளை பொருள்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய முடியாத வக்கற்ற நாடாக இந்தியா உள்ளது என கவலையுற்றிருந்தேன்.ஆனால் மாண்புமிகு தமிழக முதலவர், பெண் இனக் காவலர் தமிழக பெண்களின் கற்புக்கு ஒரு நல்ல விலை நிர்ணயம் செய்து உள்ளது பாராட்டத்தக்கது.


மக்கள் அனைவரும் சமம் எனக்கூறும் கேடுகெட்ட இந்திய சனநாயக நாட்டில் இது தான் நிவாரணமோ? 

  • நிவாரணம் அளிக்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. யாருடைய பணத்திலிருந்து இது அளிக்கப்படுகிறது? இந்த அப்பாவிப் பெண்களுக்கு யாரால் பாதிப்பு வந்ததோ அவர்களின் ஊதியத்தில் இருந்து, சொத்துக்களை பறிமுதல் செய்து அல்லவா இந்த நிவாரணம் அளிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை,காணொளிகளை விளம்பரம் செய்து இதில் கூட தங்களின் வருமானத்தைப் பார்க்கும் ஊடகங்கள்,குற்றம் சுமத்தப்பட்ட காவலர்களின் முகங்களை வெளியிடவில்லையே,ஏன்?
  • குற்றம் செய்த காவலர்கள் பணி இடை நீக்கம் மட்டும். அய்யகோ...குற்றம் சாட்டப்பட்ட தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழன் வாழ்ந்த நாட்டில் இவ்வளவு கொடிய தண்டனையா?காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அம்மா அவர்களே..மறுபரிசீலனை செய்து அவர்களுக்கு பதவி உயர்வு தாருங்கள்.
முன் நிகழ்வுகள்:
இருளர் இனப் பெண்கள் மீது பொலிஸார் வன்புணர்வு-நன்றி BBC-தமிழோசை 
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் அண்மையில் போலீசாரில் வன்புணர்ச்சிக்குள்ளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இச் சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்கியிருக்கிறது. ஆயினுங்கூட அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, மத்திய புலனாய்வுத் துறை, சிபிஐயின் விசாரணை வேண்டும் எனக்கோரி பொதுநலவழக்கொன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அது நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
போலீசாரால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறும் 20 வயதான லட்சுமி என்ற பெண், தன் கணவர் காசியை கடந்த நவம்பர் 22 அன்று ஒரு திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் முதலில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் குடிசையை சோதனையிடுவதற்காக வந்தவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்றதாகவும், காட்டுப் பகுதியில் லட்சுமி, மற்றும் அவர்களது குடும்ப்ப் பெண்கள் மூவரை, நான்கு காவலர்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனுச் செய்திருக்கிறார்.
''ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, காயம் ஏற்படுத்துதல், திருட்டு” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கச் சென்றபோது, லட்சுமியையும் மற்றவர்களையும் இரவெல்லாம் போலீசார் விசாரித்த்தாகவும், மிரட்டியதாக்வும், ஆனால் அவர்களை மருத்துவபரிசோத்னைக்கு அனுப்பவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கூறுகிறது.