செவ்வாய், 22 டிசம்பர், 2020

இருதலைக் கொள்ளி

 



பிஞ்சு குழந்தையை

அள்ளி அணைக்க

துடிக்கும் 

ஆசை மனதுக்கு

தடை போட்டது

அக்கறை! 

வெள்ளி, 18 டிசம்பர், 2020

திருவெம்பாவை 3


 

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

காகிதப்பூ

நீ கைதேர்ந்த

விவசாயி

மலட்டு நிலத்திலும்

மல்லிகைப்பூ வாசம்

கண்ணீரில் கரைந்த

காகிதம்

என்னுள் ஒளிந்த ஓவியம்

சமரில் பூத்த சிறு அலர்

வைகறைத் துயில்

சில்வண்டின் சிலுசிலிர்ப்பு

கவிதையை பிடிக்க வைத்த 

புதிர் நீ 

கண்ணின்  ஒளி 

இறுதியாக 

கண்ணீரின் வலி 

 

குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?





 குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

அள்ளி அணைக்க 

துடிக்கிறது 

பிள்ளை  மனம் .. 

ஆலமரத்தை 




வெள்ளி, 4 டிசம்பர், 2020

இன்பத் தமிழ் -சேக்கிழார் உவமை நயம்

அறுபது மூவர் வாழ்க்கை வரலாற்றை ஒரு வரலாற்று அறிஞராக வடவேங்கடம் முதல் தென்குமரி வரை ஆய்வு செய்த ஆய்வறிஞர்- தில்லைச் சிற்றம்பலத்தை பொன்னால் வேய்ந்த 2ஆம் குலோத்துங்க சோழனின் முதன்மைஅமைச்சர் தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரிய புராணத்தில் = திருநின்ற சருக்கத்தில் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் எனை ஈர்த்த அழகிய கற்பனை நயமிக்க பாடல்
மலர்ச் சோலையின் மரங்கள் அவள் கரங்கள்.
அவற்றைச் சுற்றிச் சூழும் கருவண்டு குலம், அவள் கரங்களில் குலுங்கும் நீல வளையல்களாம், 
மரங்களின் செந்தளிர்கள் அவள் விரல்கள்.
நகங்கள் தளிர்களில் நீண்டு ஒளிரும் நகங்கள்.
மரங்கள் வானளாவி ஓங்குதல், நிலமகள் தன் கையை நீட்டி வானுறு மதி எனும் கண்ணாடியை அணைத்தல் தன் மெய்யொளியின் நிழற்காணுதல் பொருட்டாம்.