ஞாயிறு, 6 டிசம்பர், 2020

காகிதப்பூ

நீ கைதேர்ந்த

விவசாயி

மலட்டு நிலத்திலும்

மல்லிகைப்பூ வாசம்

கண்ணீரில் கரைந்த

காகிதம்

என்னுள் ஒளிந்த ஓவியம்

சமரில் பூத்த சிறு அலர்

வைகறைத் துயில்

சில்வண்டின் சிலுசிலிர்ப்பு

கவிதையை பிடிக்க வைத்த 

புதிர் நீ 

கண்ணின்  ஒளி 

இறுதியாக 

கண்ணீரின் வலி 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக