ஞாயிறு, 19 மே, 2019

ஐயா கோ.நம்மாழ்வார் & ஐயா நெல்.செயராமன் நினைவேந்தல் விழா


இயற்கை விவசாயத்திற்காக, மக்களை ஐட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பேராபத்துகளில் இருந்து மீட்க தன் இன்னுயிரை ஈந்த போராளி ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கும் பண்டை நூல்களை ஊர் ஊராக சென்று திரட்டிய உ.வே.சா போல பாரம்பரிய நெல் வகைகளை காக்க மீட்டெடுக்க போராடிய, அதில் வெற்றியும் பெற்ற ஐயா நெல் செயராமன் அவர்களுக்கும் சமூக ஆர்வலர் திரு சோமு இளங்கோ அவர்களின் தலைமையில் அவரின் மற்றும் விவசாய பெருமக்களின் முன்னெடுப்போடும் நினைவேந்தல் விழா தலைஞாயிற்றில் 19.05.2019 சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் இருவரின் வரலாறும் அவர்கள் போராட்ட வாழ்க்கை பற்றியும் இனி விவசாயிகள் தேர்ந்தெடுத்து செல்லக்கூடிய வழிகள் பற்றியும், ஒற்றுமையுடன் போராட வேண்டிய அவசியம் பற்றியும், விளைவிக்க கூடிய விவசாயி ஏன் கடனாளி ஆகிறார் என்பது பற்றியும் கடலூர் முதல் இராமநாதபுரம் வரை அமைய இருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை நம் மண்ணில அனுமதிக்க கூடாது என்கிற வழிவகைகள் பற்றியும் பங்கு கொண்ட அனைவரும் பேசினார்.




இறுதியாக நம்மாழ்வார் பெயரில் விவசாய பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும், நெல் செயராமன் பெயரில் ஆராய்ச்சி நிறுவனம் வேண்டும், அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் இம்மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விழா நிறைவுற்றது 
விதை நெல் கோட்டை


புதன், 1 மே, 2019

#TamilnaduJobsForTamils

மே 3 காலை 8 முதல் #TamilnaduJobsForTamils இது தான் உலகு பேசு பொருளாக இருக்கவேண்டும். மீண்டும் ஓர் இணையப்புரட்சி வழி தூங்கும் புலிகளை # கொண்டு தட்டி எழுப்புவோம்
தலைப்பைச் சேருங்கள்