புதன், 10 ஜூன், 2015

தேசியத் தலைவர் சிலை அகற்றம்- கைது நடவடிக்கை ஏன்?




நாகப்பட்டிணம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூரில் தமிழினத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு 2015 சூன் திங்கள் 6ம் தியதி அன்று கோயில் ஒன்றில் சிலை வைக்கப்பட்டது. இதை உடனே அறிந்த நமது சீர்மிகு செயல்வீரர்கள் நிறைந்த தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்தது. இறுதியில் அவர்களாகவே சூன் 8 அன்று சிலையை அகற்றினார்கள் என்று மனு தர்மம் கக்கும் தமிழக பத்திரிக்கைகள் செய்தி போட்டனர்

இருவது பேரை கொன்றவர்கள் மீது ஒரு நடவைக்கையும் இல்லை; தருமபுரி வங்கியில் கொள்ளை அடித்த வடநாட்டு போக்கிலிகளை துப்பு துலக்க வக்கில்லை; நாள்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு என்ற செய்திகள்..ஆனால் ஒருவனையும் இதுவரை பிடித்தது இல்லை. ஆனால் தமிழினத்திற்கு ஆதரவாக ஒரு நிகழ்வு நடந்தால் போதும்..இரவோடு இரவாக அதிரடி நடவைக்கை எடுத்து இடித்து தள்ளுவதில் மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுகிறது தமிழக அரசும் அதன் ஏவல் துறையும் ...முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செயல்பட்டதைப் போல.

இதைக் கண்டித்து நாகையில் நேற்று காலை மதிமுக ஆர்பாட்டம் செய்தது. அனைவரையும் கைது செய்தது காவல் துறை .

மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் முறையாக அனுமதி பெற்று தெரு முனை பிரச்சார முறையில் அமைதியாக தங்கள்  எதிர்ப்பை தெரிவிக்க கூடி இருந்தனர், கூடி இருந்த தோழர்களை விட அங்கு இருந்த காவல் துறையினரே அதிகம். அவ்வளவு காவல் துறையினருக்கு அங்கு ஒரு வேலையும் இல்லை.அது ஒரு பிரச்சாரக் கூட்டம்,அவ்வளவே.  ஒலி பெருக்கி கூடாது என்றது காவல். அதையும் கேட்டு நடந்து கொண்டனர் தோழர்கள்.

முறையாக அனுமதி பெற்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? போர்க்களம் போல காவல் துறையினரை குவித்து மக்களுக்கு பீதியூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஒன்றும் புரியவில்லை. இறுதியில் அனைவரையும் கைது செய்தது காவல் துறை. சிறிதும் கலங்காமல் காவலர்கள் கட்டுப்பாடையும் மீறி தேசியத் தலைவர் வாழ்க; தமிழீழம் வெல்வோம் என உரக்க கூவினர் தோழர்கள்.

நாளொரு ஆர்ப்பாட்டம்; பொழுதொரு  ஆர்ப்பாட்டம் என இந்த நடுவண் மற்றும் மாநில அரசும்  தமிழர்களை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருப்பது ஏன்? நாம் எந்த ஆயுதத்தை எடுக்கிறோம் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்று தலைவர் சொன்னது முற்றிலும் சரி.