திங்கள், 31 ஜனவரி, 2011

நாகப்பட்டிணம் நாம் தமிழரின் வீர வணக்க பொதுக்கூட்டம்-முதல் தகவல் அறிக்கை

இடம்:நாகப்பட்டிணம் நாள்: 30.01.2011
மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர்களுக்கு சொல்வது எனன?
1. தலைவன் வருவான்,தகர்த்து எறிவான்
2. சூனியக்காரி சோனியாவின் குடும்ப குழுமம் காங்கிரசை வேரறுப்போம்
3. பேரறிவாளன் உள்ளிட்டோரை சிறையிலிருந்து மீட்போம்
4. தமிழனுக்கு என்று ஒரு நாடு மீட்டு எடுப்போம்






தாமரையின் கடிதத்தை படித்த பிறகு நானும் ஒரு தமிழனாய் மனதில் குழப்பங்களோடு பேரணி தொடங்குவதாக அறிவித்த பிற்பகல் 3.00 மணிக்கே மாநாட்டு திடலுக்கு சென்றடைந்தேன்.மாநாட்டு திடலில் இளைஞர் பாசறையை சேர்ந்த தோழர்கள் விழா ஏற்பாட்டை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்..இருக்கை வசதிகளை ஒழுங்கு படுத்தி கொண்டு இருந்தார்கள். செல்லப்பா பாட ஆரம்பித்தார். தலைவர் நலமாக உள்ளார்;வருவார் ; 1200 கரும்புலிகளோடு இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற நம்பிக்கையூட்டும் பாடல் பாடினார்.பேரணி 4.30 க்கு புறப்பட்டு மாநாட்டு திடலை 6 மணிக்கு வந்தடைந்தது

இளைஞர்கள் ஆதிக்கம்
20,000 இருக்கைக்கு மேல் போட்டு இருந்தார்கள். மூன்று மணிக்கு இருந்த நிலையை பார்த்த பொழுது அத்துணை பேர் வருவர்களா என்று எண்ணினேன்; ஆனால் பேரணி திடலை வந்து அடைந்ததும் அங்கு நிற்பதற்கு கூட இடம் இல்லாது போனது.இதே திடலில் தான் சென்ற மாதம் திமுக மாநாடு நடந்தது. அன்று காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்.இன்று ஒரு நல்ல cause க்காக திரண்டு வந்த கூட்டம். மிக மகிழ்ச்சி தரக்கூடியதாக நான் கண்டது..வந்திருந்த பார்வையாளர்களில் 90 % பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

மேடையை அலங்கரித்தவர்கள்
முத்க்குமாரின் தந்தை, தமக்கை, பேரறிவாளன் தாயார், "தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாத உனக்கு எதற்கு வேட்டி சட்டை" என்று சிதம்பரத்திற்கு பூவும் போட்டும் வளையலும் வழங்கிய வழக்குரைஞர் கயல்விழி,மனித உரிமை ஆர்வலர் பால் க்யுமன் . பேராசிரியர் தீரன்,சாகுல் ஹமீது வந்து இருந்தனர்.

புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமாரை சிங்கள நாய்கள் கொன்ற நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டினர். தோழர் திலீபன் சூடாக கேட்டார் "மீனவர்கள் இறந்தால் நிதி குடுப்பதை நிறுத்து..உயிரைக் காப்பாற்று. இதே கடலில் ராகுல் காந்தியை கட்டு மரத்தில் அனுப்பு.அவன் இறந்தால் சோனியாவிற்கு ஒரு லட்சம் நிதியும்,சத்துணவில் ஆயா வேலையும் போட்டு குடுப்பியா நீ?' என்று கேட்ட போது திடலே அதிர்ந்தது.

இந்தியா ஏன் இலங்கையை ஆதரிக்கிறது?
தனி மனித உரிமைகளுக்காக போராடுவது தீவிரவாதம் அல்ல..அப்படி பார்த்தால் அமேரிக்கர்கள் கூட தீவிரவாதிகள் தான் என்ற பால் க்யுமன் இந்திய ஏன் இலங்கையை ஆதரிக்கிறது என்ற கருத்தையும் சொன்னார். "இலங்கை தமிழர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து தனிநாடு தந்து விட்டால், இந்தியாவில் இப்பொழுது தனி நாடு கோரி போராட்டம் நடைபெறுகின்ற நாகலாந்து,மணிப்பூர்,அஸ்ஸாம்,காஷ்மீர் இங்கெல்லாம் போராட்டம் இன்னும் வலுப்பெற்று விடும் என்ற அச்ச உணர்வு காரணமாகவே தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது" என்றார்

செந்தமிழன் சீமான் உரை
அண்ணன் செந்தமிழன் சீமான் உரை இரவு 9.00 மணிக்கு ஆரம்பித்தது. இது முத்துக்குமாரின் வீர வணக்க பொதுக்கூட்டமாகவும் அதிமுகவிற்கு ஆதரவா என்று கேட்டவர்களுக்கு கொள்கை விளக்க கூட்டமாகவும் அமைந்தது. "என் மக்களை மண்ணுக்குள் புதைத்த காங்கிரசை வேரறுப்போம்,அதற்காக ரெட்டை இல்லை எனன ஒரு மொட்டை இலையை கூட ஆதரிப்போம்" என்றார்.

'அதிமுகவிற்கு ஆதரவா என்று பதை பதைக்கிறீர்களே. நான் சொன்னேனா?.சன் டிவிகாரன் சொன்னான். எண்ட கேளுங்க நேருக்கு நேராய். என்ன இத்தனை கேள்வி கேக்குறீங்களே..இதே கேள்விய விஜயகாந்துகிட்ட ஏன் கேக்குறது இல்ல? ஏன்ன அவர் கேக்குறது இல்லை" என்று கேள்வியிலேயே பதிலை தந்தார்

பனிக்கட்டி அல்ல புலிக்குட்டி
"அங்கு போகாதீங்க, கரைஞ்சுடுவீங்க, காணாம போய்டுவீங்க என்று சொல்கிறார்கள்.. கரைஞ்சு போக நாங்க ஒன்றும் பனிக்கட்டி அல்ல..புலிக்குட்டிகள்" என்றார்

"சீமானை நம்புங்கள்..அவன் ஒரு போது ஏமாற்ற மாட்டான்:இலக்கை அடையும் வரை ஓயமாட்டான்; லட்சிய பாதையில் இருந்து விலக மாட்டான், காங்கிரசை வேரறுக்க யாரை வேண்டும் ஆனாலும் ஆதரிப்பேன். இது இந்திய அமைதிப்படையை விரட்ட தலைவர் பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்தது போல. எங்கள் இலக்கு 2016 தேர்தல் தான். இலக்கை அடைய செல்லும் பாதையில் உள்ள நீரோடையில் கை கால் கழுவி ஆசுவாசப் படுத்திக்கொள்வோமே அதுபோல தான் இந்த தேர்தல். முதல் எதிரி காங்கிரஸ்.அதை தமிழகத்தில் போட்டி இடும் அத்தனை தொகுதியிலும் வைப்புத் தொகை இழக்கும் வகையில் தோற்கடிப்போம்..அதற்காக தான் இந்த இந்த வியூகம்'என்று தெளிவு படுத்தினார்.

புலிகள் 2000 கோடி கொடுத்தார்களாமே?
"சீமானுக்கு புலிகள் 300 கோடி கொடுத்தார்கள்,2000 கோடி கொடுத்தார்கள் என்கிறார்கள்..அட முட்டாப் பசங்களா..என்ட்ட கொடுத்த பணத்தை ராஜபக்ஷேவிடம் கொடுத்திருந்தால் இந்தாங்கடா உங்க நாடுன்னு நாட்டை கொடுத்துட்டு ஓடிருப்பானே.. நாங்களே பணம் இல்லாம தான் சென்ற வருடம் நடந்த மதுரை மாநாடு குறுந்தகடு, மாநாட்டு மலர் வெளியிட பணம் இல்லாமல் இப்பொழுது தான் வெளியிடுகிறோம்.அதை விற்று தான் இந்த கூட்டத்துக்கு நடந்த செலவை சரி செய்யணும்" என்றார். நானும் ஒரு குந்தகடும்,விழா மலரும் ரூ.250 க்கு வாங்கினேன்.

தனி நாடு வெல்வோம்
ஒன்றரை கோடி சிங்கள நாய்களுக்கு தனி நாடு இருக்கும் போது, 12 கோடி தமிழர்களுக்கு என்று ஏன் ஒரு நாடு இல்லை? நம்மை அடிமைப் படுத்த நினைக்கும் களவாணிகளை அடையாளம் காண்போம்..விழித்தெழுவோம்...

3000 ஆயிரம் ஆண்டுகளாக போராடிய யூதர்களுக்கே இப்பொழுது தான் தனி நாடு கிடைத்துள்ளது. நமது போராட்டத்திற்கு 60 வயது தான் ஆகிறது. உறுதியாக நமக்கு என்று ஒரு நாடு வெல்வோம்..அதில் புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்..அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வீடு வந்து சேர்ந்தேன்..

சனி, 29 ஜனவரி, 2011

மலேசிய அரசே..அப்துல்லா ஹுசைனின் "INTERLOK" புதினத்தை தடை செய்..


மலேசியாவின் ஒரு பகுதியாக உள்ள தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் ஹுசைன் அப்துல்லா எழுதிய இண்டர்லோக் நூலை தடை செய்...






BBC-தமிழோசை 

மலேஷியாவில் புத்தகத்தால் சர்ச்சை
மலேஷியப் பள்ளி ஒன்றில் மாணவர்கள்
மலேஷியப் பள்ளி ஒன்றில் மாணவர்கள்
மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்திய வம்சாவழி மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அந்நாட்டில் ‘ஓ’ லெவல் படிக்கும் மாணவர்களுக்கு மலாய் இலக்கியப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், மலேஷியாவில் குடியேறியுள்ள இந்திய வம்சாவழி மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கீழ் சாதி மக்கள் என்று பொருட்படும் வகையில் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக் கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது.
“ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறும் போது அது மலேஷியாவில் வசிக்கும் மலாய், சீன மற்றும் இந்தியர்கள் என்கிற மூவின மக்களின் ஒற்றுமையை பாதிக்கின்றது” என்று கோலாலம்பூரிலுள்ள வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பசுபதி சிதம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் சர்ச்சைகுரிய “இண்டர்லாக்” எனும் அந்தப் புதினத்தை எழுதியுள்ள 85 வயதான ஹுசைன் அப்துல்லா, சரித்திர சான்றுகளின் அடிப்படையில் தனது புத்தம் எழுதப்பட்டது எனவும் அதன் காரணமாக சர்ச்சைகுரிய பகுதிகள் நீக்கப்படாது எனவும் தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகக் கூற்படும் நிலையில், சரித்திர ரீதியிலான இலக்கியம் என்பதால் அதிலிருந்து எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது என மலாய் எழுத்தாளர்கள் வாதிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மலேஷிய அரசு சர்ச்சைகுரிய பகுதிகளை நீக்குவதாகவும் ஆனால் புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
மலேஷிய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் மூவின மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், இப்புத்தகம் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.
கல்வி, சமூக, கலாச்சாராம் மற்றும் பொருளாதார ரீதியாக மலேஷியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மாணவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற ரீதியிலேயே இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
நன்றி:BBCTamil.com
LINK:http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110128_malaysia_bookissue.shtml



வெள்ளி, 28 ஜனவரி, 2011

இலங்கை இலக்கிய விழா-புறக்கணித்தார் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்


காலி இலக்கிய விழா
தென்னாபிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்
தென்னாபிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்
இலங்கையின் காலி நகரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு புத்தக பிரியர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். ஆனால், அந்த விழாவை புறக்கணிப்பதாக அங்கு வந்திருந்த தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட் அறிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிலைமையை காரணம் காட்டி அவர் அந்த விழாவை புறக்க்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

பாரிசை தளமாகக் கொண்ட செய்தியாளர்களுக்கான அமைப்பான ரிப்போர்ட்டர் சான் பிரண்டையர்ஸ் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையின் செய்தியாளர்கள் அமைப்பு ஒன்று ஆகியன வெளியிட்ட விழாவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை தாமுன் ஹல்கட் கவனத்தில் எடுத்திருக்கிறார். இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து சில பிரபல எழுத்தாளர்களும் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.

விழா ஆரம்பித்தவுடனே, பிரபல எழுத்தாளர் தாமுன் ஹல்கட் விழாவைப் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.

இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்கள் அடக்கப்படுவதால், அங்கு இந்த நிகழ்வை நடத்துவது உகந்ததல்ல என்று அந்த விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியவர்கள் கேட்டிருந்தனர்.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட விழாவின் ஏற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஷியாம் செல்வதுரை, ஒரு இலக்கிய விழாவை நிறுத்துவது அதற்கான பதிலாகாது என்று கூறினார்.

வேறு இரண்டு முக்கிய எழுத்தாளர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அது இந்த எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டதல்ல என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனால், தமது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக புறக்கணிப்பவர்கள் கூறுகிறார்கள்

நன்றி

South African novelist and playwright Damon Galgut,winner of the Commonwealth Writers' Prize in 2003, on Thursday withdrew from a literary festival at Galle in Sri Lanka to support a boycott call from two rights groups Paris-based Reporters Without Borders (RSF) and Journalists for Democracy in Sri Lanka last week which requested foreign writers to boycott the Galle Festival, which opened on Wednesday. They accuse Sri Lanka's government of stifling freedom of speech and the right to dissent.

எங்கோ உள்ள தாமுன் ஹல்கட்டுக்கு இருக்கின்ற மனித நேய உணர்வு, பணத்திற்கும் பிரபல்யத்திற்கும் அலையும் இந்திய பிரஜையான தீபிகா ஷெட்டி போன்றவர்களுக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது..

வியாழன், 27 ஜனவரி, 2011

சீமானுக்கு கவியரசி தாமரையின் ஆதங்க மடல்-தமிழனுக்காக போராடுபவன் திராவிடக் கட்சிகளுக்கு கால்பந்து ஆகலாமா?

கடந்த ஆண்டு இன அழிப்பு போரின்போது பொதுவுடைமைக் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்காக வீதிக்கு வந்து குரல் கொடுத்தனர். தமிழர்களுக்கு ஒரு புதிய விடிவு பிறக்கும் என்று நினைத்தோம்.தேசிய கட்சியானதால் அவர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை. முரசு கொட்டி விஸ்வரூபம் எடுத்தார் 'விருத்தகிரி' விஜயகாந்த். ஆகா..தமிழனை காக்க தலைவன் வந்துவிட்டான் என்று கொடி பிடித்தேன். இலங்கை தமிழர்களுக்காக நீர்த்து போன பேரணியை தவிர வேறு ஒன்றும் புதிதாக செய்யாமல் குடும்ப அரசியலில் மூழ்கி, கையா,இலையா என கணக்கு போட ஆரம்பித்து விட்டார். சரி..திருமாவளவன் எதையாவது சாதிப்பார் என்று இருந்தோம்..இன அழிப்புக்கு வித்திட்ட காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுகவை ஆதரித்து நம் நம்பிக்கையில் மண் அள்ளி போட்டார்; போர் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது,திருச்சி மாநாட்டில் சூனியக்காரி சோனியாவுடன் பகிர்ந்து கொண்ட மேடையில் அடக்கி வாசித்து கூட்டணி தர்மத்தை நிலை நாட்டினார். பின்பு பாட்டாளி மக்கள் கட்சி,புதிய தமிழகம் என அனைத்திடமும் வரிசையாக ஏமாந்து நின்றபொழுது விடிவெள்ளியாய் முளைத்தது 'நாம் தமிழர்' எழுச்சி உணர்வு. ஆனால் அதிமுகவிற்கு ஆதரவு என்ற போது நீர்த்து போய்விடுமோ இந்த உணர்வு என மனம் சஞ்சலப் படும்பொழுது,நமது மன உணர்வுகளுக்கு சகோதரி 'கவிதாயினி' தாமரை சொல் வடிவம் தந்தது போல் இருந்தது அவர் அண்ணனுக்கு எழுதிய இந்த மடல்..இது வரை ஸ்வரங்களுக்கு வரி வடிவம் தந்த கவியரசி இப்பொழுது நாம் தமிழர் மனங்களுக்கு சொல் வடிவம் தந்துள்ளார் என்றே தோன்றுகிறது..











30 சனவரி 2011 அன்று நாகப்பட்டினத்தில்  நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன். அண்ணன் சீமான் உரையை கேட்ட பிறகு எனக்கு இருந்த அச்ச உணர்வு முழுவதும் நீங்கி விட்டது.அதனால் இந்த இடுகையை நீக்கி விட்டேன்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

தமிழ் பாமாலை-காணொலிகள்-தமிழ் சுப்ரபாதம்&...

தமிழ் சுப்ரபாதம்


கந்த சஷ்டி கவசம்-சூலமங்கலம் சகோதரிகள்





சொற்பொழிவுகள்


வாரியார் சுவாமிகள் இரு மனைவியர்
* பகுதி 1
* பகுதி 2
அரிச்சந்திரா
* பகுதி 1
* பகுதி 2




நன்றி:http://www.sivasiva.dk

வினாயகர் துதிகள்




*வினாயகர் அகவல்
*வினாயகர் அஸ்டகம்
* வினாயகர் கவசம்
* வினாயகர் ஆரத்தி


விஷேடதின நாட்காட்டி



Joomla extensions and Joomla templates by JoomlaShine.com





« < மாசி
2011
> »
ஞா தி செ பு வி வெ
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 1 2 3 4 5

அடுத்துவரும் தினங்கள்

ஞாயிறு,20 பிப், 2011
திருவள்ளுவர் குருபூசை
திங்கள்,21 பிப், 2011
சங்கடஹர சதுர்த்தி
திங்கள்,28 பிப், 2011
ஏகாதசி விரதம்
(Tamil suprabatham Tamil Suprapatham video Kandha sasti kavasam Soolamangalam Sisters Devotional Songs TMS Murugan Pillaiyar songs Thirumuruga kirubanantha variyar sorpozhivugal sorpolivu VINAYAGAR AGAVAL, VINAYAGAR ASHTAGAM, VINAYAGAR KAVASAM, VINAYAGAR ARATHTHI, TAMIL CALENDER)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

காங்கிரசுக்கு சமாதி கட்டுவோம்-தேர்தல் களம் 2011

மக்கள் விரோத காங்கிரசின் வேரறுப்போம் - 2011 தேர்தல் களத்தில்....

பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2.54 விலை ஏற்றம். காரணம் கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டதாம். கடந்த மாதம் 14 ஆம் தேதி தான் ரூ.3 விலை ஏற்றினார்கள். அந்த விலை ஏற்றத்தை ஜீரணிப்பதற்குள் அடுத்து ஒரு 4% விலை அதிகரிப்பு.

Nov-2010
Jan-2011
83
Petrol (in Rs)
52.91
62.46
கச்சா எண்ணெய் ஏறியதோ 10.44% தான். ஆனால் பெட்ரோல் விலை மட்டும் 18.04% ஏற்றம். முன்பெல்லாம் 50 பைசா ஏற்றுவது என்றால் பயந்து பயந்து ஏற்றுவார்கள். ஆனால் இப்பொழுது ரூ.3,5 என சற்றும் இரக்கமே இல்லாமல் விலை ஏற்றி ஏழைகளை சுரண்டி அம்பானிகளுக்கு சொத்து சேர்க்கிறார்கள். காரணம், அப்பொழுது பொதுவுடைமை தோழர்கள் கரம் ஓங்கி இருந்தது.இப்பொழுது,முதலாளித்துவம் அரியணையில் உள்ளது,மக்களை சுரண்டுபவன் சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறான்.

கச்சா எண்ணெய் விலை 10.44% உயர்ந்ததற்கு கவலை படுகிறார்களே...இங்கு வெங்காயம்,தக்காளி என அனைத்தும் 200%,300% உயர்ந்து எட்டாக்கனி ஆகி உள்ளதே. இதை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்கள்? அதை பற்றி இவர்களுக்கு எனன அக்கறை? மக்கள் எக்கேடு கேட்டால் எனன? இவர்களை யார் கேட்க முடியும் என்ற இறுமாப்பு.

உணவு பொருள் பணவீக்கம் 16.91%மொத்த விலை பணவீக்கம் 8.4%. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல பெட்ரோல் விலை உயர்வு.இவர்கள் பொருளாதார கொள்கையை என்னவென்று பாராட்டுவது?பெட்ரோல் விலை 4.4% உயர்வு. ஆனால் பொருட்கள் விலை 40 முதல் 50% ஏற்றுவார்கள். கை கட்டி வேடிக்கை பார்க்கும் கையாலாகாத காங்கிரசு அரசும், அண்டிப் பிழைக்கும் தோழமைக் கட்சிகளும். பதுக்கல்காரர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கோடி கோடியாய் லாபம் சம்பாதித்து கொடுக்கும் முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய ஏன் இவர்களுக்கு இன்னும் தயக்கம்? காரணம்-இவர்களும் அதில் ஒரு அங்கம். வாக்கு போட்ட மக்களுக்காக அதை தடை செய்வதா? எந்த காலத்தில் இருகின்றீர்கள் இன்னமும்..மக்களாம்..மக்கள் நலனாம்..!!!

சென்ற மாதம் வரை தி.மு.க.வை மட்டுமே குதறி எடுத்த அ.தி.மு.க.,காங்கிரசுடன் கூட்டணி என்பது இயலாத ஒன்று என்று ஆனதும்,இப்பொழுது காங்கிரசையும் வறுத்து எடுக்கிறது. இவர்களுக்கு மக்கள் நலன் எல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை...கட்ட கடைசி பட்சம்.

யாரவது ஒரு திருடனை தேர்ந்தெடுத்து தான் ஆக வேண்டும்..ஏனென்றால் இது மக்களாட்சி..நமது தலைஎழுத்து..

தோழர்களே..இவர்களுக்கு நாம் நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய தருணம் இது..நம் வீடு தேடி வரப்போகும் காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை புறமுதுகிட்டு புலியை கண்ட சொறிநாய்கள் போல ஓட வைக்க வேண்டிய தருணம். மறந்தும் இவர்களுக்கு வாக்கு அளித்து விடாதீர்கள்..பீகாரிகளுக்கு தமிழர்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய களம் இது..

சற்றும் மனசாட்சி இல்லாமல் கோடி கோடியாய் கொள்ளை அடித்ததோடு அல்லாது, வாக்கு பிச்சை இட்ட நம்மையே, நமது வயிற்றில் அடித்து பிச்சைகாரர்களாக்கும் இவர்கள் தலைவிதியை நாம் நிர்ணயிப்போம் என சூளுரைப்போம் இந்த புத்தாண்டில்....

இது வரை அடித்தும்,பொருள்களை நாசம் செய்தும் வந்த சிங்கள நாய்கள்,அப்பாவி பாண்டியனின் உயிர் குடிக்கும் அளவிற்கு துணிந்து விட்டார்கள். ஜூலை 2010 இல் வெள்ளப்பள்ளம் செல்வராஜை கொன்றார்கள். இதற்கு தமிழகத்தின் எதிர்ப்பு சட்டசபையில் நிவாரண அறிவிப்பு.(யாருக்கு வேண்டும் இந்த பிச்சை காசு? இழந்த உயிரை இவர்களால் மீட்டு தர முடியுமா? இன்னும் இழக்க போகும் உயிரை இவர்களால் காப்பாற்ற தான் இயலுமா? 2008 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி உயிர் பலி வாங்கிய அரக்கனுக்கு இந்தியா அரசின் எதிர்ப்பு- "NOTHING"-வெளியுறவு அமைச்சர் ஏதும் கண்டனம் தெரிவிக்கவில்லை..செய்தி தொடர்பாளர் எவரோ ஒருவர்,மிகவும் பவ்வியமாக,இலங்கை அரசுக்கு பயந்து தனது கவலையை மட்டும் தெரிவித்து உள்ளார்.

இவர்களுக்கு நாம் கற்பிக்க போகும் பாடம்,வரலாற்றின் பொன்னேடுகளில் பொரிக்கவேண்டிய பாடமாக அமைய வேண்டும்.
  • காங்கிரசும்,அதன் கூட்டணியும் போட்டி இட்ட அனைத்து இடத்திலும் தனது வைப்பு தொகையை இழக்க வேண்டும்;
  • குட்ட குட்ட குனிபவன் தமிழன் என்ற இழிச்சொல் நீங்க வேண்டும்;
  • பொதுவுடைமை கரங்கள் ஓங்க வேண்டும்;
  • தமிழனை சீண்டினால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை என்றென்றும் உணரும் வகையில் இருக்க வேண்டும்!!!
நம்மால் முடியும்.நம்மிடம் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்கு,இலவசம் என்ற பெயரில்,திருப்பதி உண்டியலில் காணிக்கை இடுவது போல நமக்கே தருவார்கள். ஏமாந்தவன்,நினைவு திறன் அற்றவன் என்ற அவச் சொல் நீங்க ஓங்கி குத்துவோம்-மக்கள் விரோதிகள் மண்ணை கவ்வும் வகையில் - !!!!

  1. இன வெறியை தூண்டி விட்டு பெண்டு பிள்ளைகளை இரக்கமற்று பதுங்குகுழிகளில் சமாதியாக்கியவர்களுக்கு துணை நின்ற,வெள்ளை கொடி ஏந்திசரணடைய வந்த வீரர்களை கைகளை பின்னால் கட்டி தங்கள் பேடைத் தனத்தைகாட்டிய இன அழிப்பு செய்த மஹிந்தாவிற்கு துணை நின்ற சோனியா, SM கிருஷ்ணா, சிதம்பரம், EVKS இளங்கோவன் என மாபாவிகள் சார்ந்த,
  2. 3000 பேர்களை கொன்று,இதுவரை 25000 பேர்களுக்கு மேலாக உயிரிள்ளககாரணமான போபால் விஷ வாயு கசிவிற்கு காரணமான வில்லியம்அண்டேர்சனை பத்திரமாக தப்புவிக்க உதவிய,
  3. கார்கில் போரில் உயிரிழந்த குடும்பங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வீடுகளில் கூட ஊழல் செய்த களவாணி காங்கிரசு அரசை,
  4. ரூ.1760000000000 உலக மகா ஊழல் செய்தவனை தலித் என்ற போர்வையை மூடி திசை திருப்ப முயன்ற நயவஞ்சகர்களை,
  5. கட்டும் போதே பல உயிர்களை பலி வாங்கிய, காமன்வெல்த் விளையாட்டில் ரூ.4000 கோடி ஊழல் செய்த இந்த காங்கிரசு அரசாங்கத்தை,
  6. நன்றாக லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார்மயம் ஆக்கும் முதலாளித்துவ காங்கிரசை,
  7. சீட்டு கட்டுகள் போல வரிசையாக திவால் ஆகும் அமெரிக்க வங்கிகளின் நிலைமையை கண்ணெதிரே கண்டும் காணாதது போல,இந்திய வங்கிகளையும் தனியார்மயம் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கும் முட்டாள் இயக்கம் காங்கிரசை
எதிர்வரும் தேர்தல் களம் 2011 இல் புறமுதுகு காட்டி தலை தெறிக்க ஓடச் செய்வோம் என்று ஒவ்வொரு தமிழனும் சூளுரைப்போம்!!!!

மேலும் படிக்க:
  1. காமன்வெல்த் பற்றி தினமணி தலையங்கம்: தேசத் துரோகிகள்
  2. மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கைக்கு ராமேஸ்வரம் வழியாகமின்சாரம் - CPI-கண்டனம்

  3. பெட்ரோல் விலை உயர்வு-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – சீமான் கண்டனம்


petrol price hike vote against anti people government vote against DMK,vote against congress

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

தென்னக ரயில்வே வேலை வாய்ப்பு-2011- இறுதி நாள் 07.03.2011

EMPLOYMENT NOTICIATION NO.05/2010 DATED 15.12.2010
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கும், ITI முடித்தவர்களுக்கும் தென்னக ரயில்வே & சென்னை-ICF வழங்கும் வேலை வாய்ப்பு:
Southern Railway & Ingegral Coach Factory - Chennai Called for Application for the post of

1 Sweeper-cum-Porter Operating 
2 Sweeper-cum-Porter Commercial 
3 Helper Gr-II Electrical 
4 Helper Gr-II Mechanical 
5 Helper Gr-II S & T 
6 Helper Gr-II Stores 
7 Track Man Civil Engineering 
8 PWD (SRD) 
9 Trackman 
காலி இடங்கள்: 3592
விண்ணப்பக் கட்டணம் ரூ.40/-
விண்ணப்பிக்க இறுதி நாள் -  07.03.2011at 18.00 hrs.
வயது வரம்பு: 01.01.2011 இன் படி..
பொது: 18-33 வருடங்கள் 
OBC     : 18-36 வருடங்கள் 
SC/ST  : 18-38 வருடங்கள்
அறிவிப்பு                 

{SOUTHER RAILWAY-CHENNAI,ICF CHENNAI SWEEPER CUM PORTER POST APPLICATION DOWNLOAD,NOTIFICATION DOWNLOAD LAST DATE 07.03.2011 

செவ்வாய், 4 ஜனவரி, 2011

எப்படி Internet Explorer 9ஐ நீக்கி Explorer 8ஐ கொணர்வது?

Steps to restore Internet explorer 8 by uninstalling Internet Explorer 9 Beta
I upgraded my into with lot of expectation. But really I am fed up with ie9 Beta.

WHY I RESTORED Explorer 8:-

  • While opening the ie9,everytime it asks questions like whether to disable addons
  • Flash not wroking in some sites like http://portal.bsnl.in
  • Unable to read Tamil in some of the Scribd documents just like Opera

OK. Let us see how to uninstall ie9 beta in

  1. go to control panel
  2. click Programs and Features
  3. click "View installed updates" under head 'Tasks"
  4. go to explorer 9 & click uninstall
  5. now our user friendly internet explorer 8 (or your previous version what you had before upgrading the browser) will be restored with all our features with updated favouries,without losing password & cookies

சனி, 1 ஜனவரி, 2011

திருமலைராயன் பட்டிணம் பாலம் சேதம்-நாகை-காரைக்கால் தொடர்பு துண்டிப்பு

நாகப்பட்டினம்-சென்னை முக்கிய சாலையில் உள்ள,1890 இல் கட்டப்பட்ட T.R.பட்டிணம் பாலம் நேற்று  (31.12.2010) இரவு உடைந்தது. இதனால் நாகை-காரைக்கால் தொடர்பு துண்டிப்பு.

சுனாமியின் பொழுது உடைந்த காரைக்கால் அரசலாறு பாலத்தை 6 ஆண்டுகளாக சவ்வு போல இழுத்து சென்ற மாதம் தான் நடுவண் உள் துறை மந்திரி திறந்து வைத்தார். அதற்கு முன்பே அதன் அருகில் இன்னொரு பாலம் கட்டி இருந்தார்கள்.இது இரண்டாவது பாலம் ஆகும்.இதை கட்டிய இந்த வெண்ணைகள், முன்கூட்டியே சேதாரம் அடைந்த T.R.பட்டிணம் பாலத்திற்கு தொலை நோக்கு பார்வையில் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது உள்ள அரசாங்கம் பிரச்சனைகள் உண்டான பிறகு கூட கவனிப்பது இல்லை.

இந்த வழியில் Marg துறைமுகம், ONGC,CPCL இவைகளால் கனரக வாகன போக்குவரத்து அதிகம் ஆகிவிட்டது.இது போதாது என்று விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க மண் ஏற்றி செல்லும் சரக்குந்துகள் வேறு..பழைய பாலமாயிற்றே என்ற பொது நல அக்கறை இல்லாத PRN,திருமுருகன்,மூகாம்பிகை (காரைக்கால்-மன்னார்குடி) போன்ற பேருந்துகள் குறைந்த பட்சம் 45-60 கி.மீ. வேகத்தில் தான் பாலத்தை கடப்பார்கள். நேற்று காலையிலேயே பாலத்தின் மத்தியில்  பெரிய குழி உருவாகி இருந்தது. அப்பொழுதே கவனித்து இருந்திருந்தால் சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இதனால் இரு & நான்கு சக்கர வாகனங்கள் படுதார் கொல்லை,பனங்காட்டூர் வழியாக காரைக்காலுக்கு 15 கி.மீ.சுற்றி செல்லும் அவலம்.நாகூர் வெட்டாறு பாலம் 2001 இல் உடைந்தது.பிறகு காரைக்கால் பாலம் 2004 இல் உடைந்தது. இப்பொழுது T.R.பட்டிணம் திருமலையன் ஆற்று பாலம். எப்பொழுது தான் இந்த அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட கற்றுக்கொள்வார்களோ?