செவ்வாய், 22 டிசம்பர், 2020

இருதலைக் கொள்ளி

 



பிஞ்சு குழந்தையை

அள்ளி அணைக்க

துடிக்கும் 

ஆசை மனதுக்கு

தடை போட்டது

அக்கறை! 

வெள்ளி, 18 டிசம்பர், 2020

திருவெம்பாவை 3


 

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

காகிதப்பூ

நீ கைதேர்ந்த

விவசாயி

மலட்டு நிலத்திலும்

மல்லிகைப்பூ வாசம்

கண்ணீரில் கரைந்த

காகிதம்

என்னுள் ஒளிந்த ஓவியம்

சமரில் பூத்த சிறு அலர்

வைகறைத் துயில்

சில்வண்டின் சிலுசிலிர்ப்பு

கவிதையை பிடிக்க வைத்த 

புதிர் நீ 

கண்ணின்  ஒளி 

இறுதியாக 

கண்ணீரின் வலி 

 

குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?





 குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

அள்ளி அணைக்க 

துடிக்கிறது 

பிள்ளை  மனம் .. 

ஆலமரத்தை 




வெள்ளி, 4 டிசம்பர், 2020

இன்பத் தமிழ் -சேக்கிழார் உவமை நயம்

அறுபது மூவர் வாழ்க்கை வரலாற்றை ஒரு வரலாற்று அறிஞராக வடவேங்கடம் முதல் தென்குமரி வரை ஆய்வு செய்த ஆய்வறிஞர்- தில்லைச் சிற்றம்பலத்தை பொன்னால் வேய்ந்த 2ஆம் குலோத்துங்க சோழனின் முதன்மைஅமைச்சர் தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரிய புராணத்தில் = திருநின்ற சருக்கத்தில் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் எனை ஈர்த்த அழகிய கற்பனை நயமிக்க பாடல்
மலர்ச் சோலையின் மரங்கள் அவள் கரங்கள்.
அவற்றைச் சுற்றிச் சூழும் கருவண்டு குலம், அவள் கரங்களில் குலுங்கும் நீல வளையல்களாம், 
மரங்களின் செந்தளிர்கள் அவள் விரல்கள்.
நகங்கள் தளிர்களில் நீண்டு ஒளிரும் நகங்கள்.
மரங்கள் வானளாவி ஓங்குதல், நிலமகள் தன் கையை நீட்டி வானுறு மதி எனும் கண்ணாடியை அணைத்தல் தன் மெய்யொளியின் நிழற்காணுதல் பொருட்டாம்.









வியாழன், 26 நவம்பர், 2020

தலைவர்66

தமிழினத்தின் ஒரே தலைவன்
தரணி போற்றும் மாமனிதன்
வாழ்க பல்லாண்டு

எடுத்தவுடன் ஆயுதத்தை எந்திடவில்லை. போதுமான அவகாசம் கொடுத்தார் சமாதானத்திற்கு. ஆயுதத்தை பன்னாட்டு உலகத்தின் முன்னிலையில் சமர்ப்பித்து நிராயுதபாணியாக நின்றார் இந்த வஞ்சக உலகத்தை நம்பி.

இந்தியத்தின் சூழ்ச்சியால் உலகமே ஓர் அணியில் திரண்டு 2009இல் எங்கள் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது கூட இயன்றவரை காக்க முயன்றது புலிகள் அமைப்பு. அப்பாவிகளை கொன்ற அரசாங்கம் செய்தது சரியாம். காக்க முற்பட்ட புலிகள் தீவிரவாதிகளாம்.










புதன், 25 நவம்பர், 2020

கொரானா சதியா இல்லை வியாதியா?


கொரானா காலத்தில் மட்டும் ப்ளூம்பெர்க் பட்டியலில் உள்ள உலக பணக்காரர்கள் சொத்துமதிப்பு 23% உயர்ந்துள்ளது. முதல் 500பேர் 96லட்சம் கோடி சொத்துக்கள் சேகரித்து உள்ளனர். இப்ப சொல்லு...கொரானா ஏழைகளை ஏழையாக்கும் நோயா? லட்சாதிபதிகளை கோடீஸ்வரனாக்கும் சதியா?

நதி எங்கே போகிறது?


 

வெள்ளி, 20 நவம்பர், 2020

சத்திய சோதனை

தன்மையானவர்களிடம் இருந்து
அன்பையும்,
வெறுப்பேற்றுபவர்களிடம் இருந்து
பொறுமையையும்
கற்றுக்கொள்!!! 

 

வெள்ளி, 13 நவம்பர், 2020

பாடசாலைக்கு போகாதே என்றாள் என் அன்னை ...?!

 பள்ளி திறப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பாம்.

 

இந்த போராளிகள், கொரனா ஒரு அரசியல்/ பொருளாதார சுரண்டல் என்று இத்தனை நாள் வாய்கிழிய கத்தி, போராடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளையும் இலகுவாக மக்களைக் கொண்டே முறியடித்த அரசியல்வாதிகளை மெச்சுவதா? இல்லை,இந்த ஆட்டுமந்தை கூட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போவதா? வாயில் துணியை அடைத்தால் கிருமி உள்ளே போகாது என்று நம்பும் இந்த அறிவாளிகளுக்கா நீங்கள் அடிப்படை மாற்றத்தை கட்டியமைக்கப் போகிறீர்கள்?

ஞாயிறு, 1 நவம்பர், 2020

அன்னைமடி நிழலே

 

ஆயிரம் பீரங்கிகள் அளிக்க முடியாத

பாதுகாப்பு  

அன்னையின் அரவணைப்பில்.

இவன் நிம்மதியான உறக்கத்திற்கு  காரணம்

இயற்கையின் மடியா?

இல்லை தாயின் கூரைப்புடவையின்

கதகதப்பா?

திங்கள், 26 அக்டோபர், 2020

பெண்கள் வேலைக்குச் செல்வதும் சமுதாயச் சிக்கலும்

        "பெண்கள் எல்லாம் வேலைக்குச் செல்வதால் தான் ஆண்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் எவள்  சங்கிலியை அறுக்கலாம், கடை எப்போ திறப்பான் மற்றும் அதற்குப் பிறகான சமூகச் சிக்கலுக்கும் அடித்தளம்; நீ போய் சம்பாத்தித்து விட்டு வாடா என்று சொல்வது தான் பெண்ணிற்கான அதிகாரம்"  என்று ஒரு தோழரிடம் சொன்னேன். "பெண் என்பவள் இல்லத்தரசி;இல்லாள். இல்லத்தை ஆள்கின்ற இந்த கடமையில் இருந்தும் ,  தன் மகனை நல்ல  குடிமகனாக கண்காணித்து வளர்ப்பதில் இருந்தும் தவறுவதால் தான் இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கும் பெண்ணே காரணம் ஆகிறாள்" என்றேன் 

                    அப்படிப் போய் சம்பாதிக்க ஆண் தவறினால்? என்று எதிர் கேள்வி கேட்டார். எந்த சட்டங்களும் விதி விலக்குளை கொண்டு உருவாவது இல்லை. வினையே ஆடவர்க்கு உயிரே என்பது தான் தமிழர் கோட்பாடு.  கணவன் கொண்டு வந்து கொடுக்கின்ற பொருளில் குடும்பம் நடத்துபவளே சிறந்த நிர்வாகி 

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

                           வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இவள் ஒரு பெரிய கற்பனைக் கோட்டையை கட்டிக்கொண்டு அதற்கு அவனை செக்கு மாடாக மாற்றுவாள் ஆனால் அங்கு மகிழ்ச்சி தங்காது; தர்க்கத்தில் தொடங்கும் வாழ்க்கை தகராறில் தான் முடியும். 

   பெரும்பாலான மண முறிவிற்கு. நவீன நுகர்வுப் பழக்கங்களை வாழ்வியலாக மாற்றி அதற்கான முகவர்களாக பெண்களை தூண்டி கணவன்மார்களின் நச்சரிப்பு எந்திரங்களாக பெண்களை மாற்றும் பெருங்குழும சூழ்ச்சிகளும் உளவியல் காரணம். 

        ஓர் ஆண் சம்பாதிக்கத் தவறினால், அசம்பாவிதம் காரணமாக குடும்ப தலைமைப் பொறுப்பை  பெண்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வேலைக்குச் செல்வதில் தவறு இல்லை. அப்போது  படித்த பெண்கள் சும்மா இருக்க வேண்டுமா? பெண்களுக்கு படிப்பு தேவை இல்லையா என்றால் கல்வி என்பது வேலைக்கான திறவுகோல் என்பது புதிய உலகத்தின் வணிக சதி. கல்வி அறிவின் வாசல். இருண்ட வீட்டில் குடும்ப விளக்கை எற்றுவதற்கு பெண் கல்வி அவசியம்.

           பெண்கட்குக் கல்வி வேண்டும்
          கல்வியைப் பேணுதற்கே -பாரதிதாசன் 

   வேட்டையாட கற்றுக்கொள்வது காட்டில் செல்லும்போது தாக்க வரும் மிருகங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே. அதைவிடுத்து நாட்டில் உலாவும் போதும் தான் வேட்டையாடக் கற்றுக்கொண்டேன் என வித்தை திறமையை காட்டினால்? ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதும், பக்கத்துக்கு வீட்டில் வேலையில்லாமல் திண்டாடுவதும் எப்படி ஒரு சமதர்ம சமுதாயத்திற்கு வழிகோலும்?

            ஆங்கிலேயர்களைப் போல நாம் பெண்களை வீக்கர் செக்ஸ் என அடையாளம் குத்துவதில்லை. அவர்களுக்கான அதிகாரமும் பங்களிப்பும் சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. சங்கப் புலவர்களில் கால் விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் பெண் புலவர்கள். மன்னனுக்கு அறிவுரை சொல்லவும், அவன் தவறுங்கால் இடித்துரைக்கவும், தன் ஒரே மகனை, வீட்டில் அனைவரும் போரில் மடிந்த பின்னும், போருக்கு செல்வது உன் கடமை என வீரத் திலகமிட்டு அனுப்பி வைத்த, நாடும் வீடும் வேறு வேறல்ல என்று எண்ணிய ஆளுமை உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்கள் சமுதாயம் நமது 

            அப்போ பெண்கள் பொதுத் தளந்திற்கு சமூக சேவை ஆற்றக்கூடாதா?
     வீடு உயர குடி உயரும்; குடி உயர நாடு உயரும். நற்குடிமகன்களை உருவாக்கும் தன் முதன்மைக் கடமையில் இருந்து வழுவி நீ எந்த ஒரு பணி செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீரே, அந்த கடமை செய்து நேரம் இருந்தால் சமூக சேவை ஆற்ற வா. முதன்மைக் கடமையிலே  சமூக சேவையும் அடங்கிவிடுகிறது. காலப்போக்கில் அது தேவை அற்றதாகவும் ஆகிவிடும் 

,,,இந்த பதில்களை கேட்டு மெளனமாக சென்றார் அவர், திரும்பி வந்து ஆணாதிக்கம், பிற்போக்காளன் எனத் தாக்குவோரோ எனத் தெரியவில்லை., அந்தத் தோழர் நீங்களாக இருந்தால்?


சனி, 10 அக்டோபர், 2020

பிரச்சனை குழந்தை அல்ல..

 

கேட்டதில் பிடித்தது:

இன்று கொடைக்காணல் வானொலியில் குழந்தை மன நல மருத்துவர் ஒருவர் பேசினார். நேயர்கள் அனைவரும் அருமையான கேள்வி கேட்டார்கள். அதற்கு மிகச் சிறப்பான பதில் தந்தார் அந்த அம்மையார். (பெயர் தெரியவில்லை )

அவருடைய ஆசிரியர் சொல்வாராம் "YOU ARE NOT PROBLEM; PROBLEM IS PROBLEM" என்று. குழந்தைகள்,  பிரச்சனை அல்ல. அவர்களின் பிரச்சினை தான் இடர்பாடு.. நாம் அணுகி தீரவு காணவேண்டியது குழந்தைகளின் பிரச்சினையையே. குழந்தைகளை பிரச்சனையாக பார்த்தால் ஒரு போதும் தீர்வு கிடைக்காது என்று 

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இந்திய ஒன்றியம் கொண்டுவந்துள்ள 3 உழவர் விரோத அவசர சட்டங்களின் பின் விளைவுகள்

 

1. "பஞ்சத்திற்கு காரணம் விளைச்சல் பற்றாக்குறை அல்ல-பதுக்குதலே" - அமர்தியாசென். ஆனால் புதிய சட்டம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் முதலியவற்றை இன்றியமையாத பொருளில் இருந்து நீக்கி பதுக்கலை அங்கீகரிக்கிறது

2. வேளாண் வருமானமும் இனி வருமான வரி வரம்பில் அடக்கம்

3. குறைந்தபட்ச ஆதார விலை இனி இல்லை. இந்திய உணவு கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இழுத்து மூடப்படும். இறுதியாக நியாயவிலைக் கடைகள் காணமல் போகும்.

4. பண்ணை விவசாயம் முறையில் உழவர் மேலும் கடனாளி ஆக்கப்பட்டு நிலத்தை பண்ணை குளுமங்களிடம் இழந்து சொந்த மண்ணை விட்டு அகதிகளாக போகும் அபாயம்

5. குழுமங்கள் சொல்வதை தான் விவசாயி விளைவிக்க வேண்டும். உற்பத்தி பொருளுக்கான விலை முதலிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுவிடும். ஆனால் உற்பத்தி பொருள் தரம் இல்லை என அடிமாட்டு விலைக்கு குறைக்கப்படும். பெரிய கார்பொரேட்டுகளை எதிர்த்து நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு நடத்த முடியுமா? நீதி தான் கிடைக்குமா?

6. மரபணு மாற்றப்பட்ட விதைகள் தாரளாமாக புழங்கும். நாட்டு விதைகள் மாயம் ஆகும். நிலம் மலடாகும். மக்கள் நோயாளிகள் ஆவர்.

7. வங்கிகள் விவசாய கடன் அளிப்பதில் இருந்து இன்னும் விலகிப் போகும். அந்த இடங்களை பெருங்குழுமம் ஏற்றுக்கொள்ளும். கந்துவட்டி கட்டி கடனாளி ஆக வேண்டும். கட்ட முடியாதவர்கள் உத்தரத்தில் தூக்கு கயிறை கட்டும் அவலநிலை உண்டாகும்

8.இதுவரை மாநில அதிகாரத்தில் உள்ளவற்றை நடுவண் அரசு எடுத்துக்கொள்ளும். இந்த முறை மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண் துறையை நேரடியாக தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் உழவர்கள் கார்போரேட்டுக்கு அடிமையக்கப்படுகிறார்கள்.

9. பீகார், குஜராத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் இல்லை.அங்கு மண்டி எனும் தனி நபர் வியாபாரிகள் . அவர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விலைக்கே கொள்முதல் செய்கிறார்கள். அந்த நிலை நாடெங்கும் இனி எதிர்காலத்தில் ஏற்படும்

 

-காவிரி உரிமை மீட்புக் குழு 
-தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

வியாழன், 17 செப்டம்பர், 2020

#BanNEET

 

இன்று தாலி
நாளை இரவிக்கை
#BanNEET

திங்கள், 14 செப்டம்பர், 2020

#BanNeet #MuteNeet

 


நீட்டி முழக்க ஏதுமில்லை இனி,
பற்றி எரிகிறது தமிழ்நாடு
எங்கள் தம்பி தங்கைகளின் 
சிதைகளோடு
மலர வேண்டிய மலர்கள் 
போதிலே கருகுகிறது  
வீதிக்கு வீதி பறையோசையை மீறி
கேட்கிறது 
ஆரியர்களின் எக்காலச் சிரிப்பு மயிரு
விதையாக வேண்டியவரை  சிதைத்தது
விதி அல்ல.
ஆரியனின் சதி 
இனியும் ஒடுங்கி கிடந்தால் 
யாருக்கோ என ஒதுங்கி நடந்தால் 
நாளை 
உன் பிள்ளைக்கும் இது தான் கதி 




ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

#ஹிந்தி_தெரியாது_போடா

 


உங்களுக்கு தான் இங்கிலிஷ், எங்களுக்கு அது ஆங்கிலம்

உங்களுக்கு தான் ஹீப்ரு, எங்களுக்கு அது எபிரேயம்

இப்படி மொழிகளையே தமிழ்ப்படுத்திய எங்களுக்கு

#ஹிந்தி_தெரியாது_போடா

வியாழன், 3 செப்டம்பர், 2020

கொரானா-வங்கி வாடிக்கையாளர்கள் நிலை என்னவாகும்?

வங்கிகளில் நடப்பு பற்றுக் கணக்கு (OD/CC) வைத்திருப்பவர்களுக்கு செப் ஒன்றாம் தேதி ஆறு மாத வட்டி ஒரே நாளில் பற்று வைக்கப்படும். அப்படி சேர்க்கப்பட்ட வட்டியை 30செப் க்குள் கட்டத் தவறினால் அது வாராக்கடனாக மாறும். அதற்காக மேலாளர்களுக்கு இந்த ஆறு மாத வட்டியை ஆறு தவணைகளாக மாற்றி 31.03.2021க்குள் கட்ட வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய சொல்லி உள்ளது. கடந்த ஆண்டு பொரூளாதார மந்தம் காரணமாக தவறிய தவணையை தனிக்கணக்காக மாற்றி தள்ளி வைத்தார்கள். இப்போது வட்டியை தள்ளி வைக்க சொல்கிறது அரசும் சேமநல வங்கியும்.

இதனால் பொருளாதாரமும், வங்கிகளும் வீழ்வதோடு வாடிக்கையாளர்களை திரும்ப திரும்ப கடனில் சிக்கவைக்கப்பட்டு இந்த நாடு நாசமாக போகும் சூழல் மிக அருகில். 2008அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தது போல இந்திய வங்கிகள் வீழும். முன்பாவது வங்கிகள் சிறு சிறு வங்கிகளாக தனித் தனியாக இருந்தது. ஆனால் வங்கி இணைப்பு என்ற பெயரில் 27 வங்கிகள் 12 வங்கிகளாக மாறியுள்ள நிலையில் அரசுத் துறை வங்கிகள் வீழ்ச்சி கண் இமைக்கும் நொடியில் அமையப் போகிறது

புதன், 17 ஜூன், 2020

இந்தியா சீனா போர்

மகாபலிபுரம் சுவரில் அடிச்ச வண்ண பூச்சு கூட காயலே. ஜின் பிங் வந்தபோது இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை என்ன, துண்டறிக்கை கூட விடவில்லை. ஏன் வந்தார் எதற்கு வந்தார் என்கிற மர்மமே விலகலே. அதுக்குள்ளே போரா? என்னடா உங்களோட அக்கப்போரா இருக்கு.
சங்கி : போர் வந்தா தெரியும். சோத்துக்கு சிங்கி அடிப்பே

 தம்பு: ஆமா..இப்ப மட்டும் நாங்க கோட்டை கட்டி ஆண்டுக்கிட்டு இருக்கோம். போவியா

ஞாயிறு, 17 மே, 2020

#துரோகதிமுக வை மறக்க முடியுமா?

அவர்கள் வாதத்திற்காக திராவிடத்திலிருந்து தான் தமிழினம் வந்தது என்று வைத்துக்கொண்டால் கூட, எந்த ஒரு தாயும் அவள் காட்டேரியாக இருந்தால் கூட, தன் மகவை டம்ளர் என்று அழைப்பதோ, எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அழிக்கவோ நினைக்க துணியாது. 

 அப்படி என்றால் இந்த திராவிடம் எவ்வளவு கொடியது என்பதை உணருங்கள் உபிக்களே. அவர்கள் உணராத பட்சத்தில் அவர்கள் மனைவிமார்களோ, மகள்களோ விழிப்போடு இருங்கள். ஆட்சியை பிடிக்க உங்களை அடகு வைக்க கூடத் தயங்க மாட்டார்கள் படுபாதக துரோகிகள் #துரோகதிமுக

வியாழன், 14 மே, 2020

#கொரோனா சதிச் செயலா ?

இது மருந்து குழுமங்களின் சதி என்கிறார்கள்.. பில் கேட்ஸ், உ.சு.நிறுவனத்துடன் கைகோர்த்து வராத நோய்க்கு தடுப்பூசியை 7பில்லியன் மக்களிடமும் திணிப்பது என்கிறார்கள். 5ஆம் அலைக்கற்றை பரிசோதனை என்கிறார்கள்.


இவைகளை தாண்டி இன்னொரு காரணம், 2016இல் அரங்கேறிய நாடகத்தின் இரண்டாம் பாகம். 10000கோடி கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது என 12லட்சம் கோடி 500.1000 ஐ தடை செய்தார்கள் அல்லவா? அப்போது சொன்ன இன்னொரு காரணம் மக்களை பணத்தை நேரிடையாக பயன்படுத்துவை மாற்றி மின்னணு டிஜிட்டல் முறைக்கு மாற்ற. அந்த காரணத்தை தான் இப்போது இரண்டாம் முறையாக வெற்றிகரமாக திணிக்கிறார்கள் . எல்லோரையும் வீட்டிலேயே முடக்கி கைப்பேசி, இணையவழி வங்கி பயன்பாடு, இணையவழி பொருள் வாங்கல்/விற்றல் , ஏடிஎம் பயன்பாடு,சாலையோர வியாபாரிகளை தவிர்த்தல் என்கிற திட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்த்திச் செல்கிறார்கள்

ஞாயிறு, 3 மே, 2020

உலங்கு ஊர்தி மூலம் மலர் தூவல்- தொடரும் நாடகம்

மருத்துவ உயர்படிப்புகளில் இடஒதுக்கீடு கேட்ட மருத்துவர்கள் போராட்டங்களை காவல்துறை கொண்டு அடக்கி, உளவுத்துறை மூலம் பொதுமக்கள் மத்தியில் எள்ளிநகையாட வைத்து, போராட உரிமை இல்லை என்று உரிமை பறிப்பு தீர்ப்புகள் எழுதவைத்து, செவிலியர் போராட்டங்களை கொடூரமாக அடக்கி அதில் ஒரு நிபந்தனையும் ஏற்கப்படாமல் அடக்கிவிட்டு இன்று அவர்கள் சேவையை மெச்சி துருப்பிடித்த உலங்கு ஊர்திகள் மூலம் மலர் தூவுகிறார்களாம். இது என்ன அரசாங்கமா? இல்லை சரஸ்வதி நாடக சபாவா? 

உரிமைகளை பறித்து அடக்கம் செய்து விட்டு மலர்வளையம் சூடுகிறது ஏகாதிபத்தியம். இதையும் நம்பி எம் மக்கள் கை தட்டுவார்கள்; அரசனின் புகழ் பாடுவார்கள் 

காவிரி எங்கள் உரிமை- மே 7,2020- விண்ணதிர முழங்குவோம்

=======================
காவிரி காக்க எழுவோம்!
=======================
இந்திய அரசே,
காவிரி மேலாண்மை ஆணையத்தின்
தன்னதிகாரத்தைப் பறிக்காதே!
உன் அதிகாரத் துறையில் சேர்க்காதே!
தனியே முழுநேரத் தலைவர் அமர்த்து!
===================================
கனிவான வேண்டுகோள்!
===================================
பேரன்புடையீர்,
வரும் 7.5.2020 வியாழன் மாலை 5 மணி
முதல் 5.30 மணி வரை.. அவரவர் வீட்டுவாசலில் குடும்ப உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு நின்று மேற்படி கோரிக்கைகள் கொண்ட பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் 15 நிமிட நேரம் கையில் ஏந்துங்கள்! வலைத்தளங்களில் நேரலை செய்யுங்கள்!
படமெடுத்துப் பதிவு செய்யுங்கள்!
தொடர்புக்கு - 90804 17120, 85258 00820
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 90251 62216, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

வெள்ளி, 1 மே, 2020

உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் 2020

கடந்த 133ஆண்டுகளில் இந்த உழைப்பாளர் நாளை உலகம் ஒருநாளும் மறக்காது 

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கையை தட்டுங்கள்


கையை தட்டுங்கள்...
  • கெயில் குழாயை த.நா. விவசாய நிலத்தில் பதிக்க உத்தரவிட்ட மோடியை பாராட்டி
  • ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்னோலின் வாயில் சுட்ட வீரத்தை மெச்சி
  • காவிரியில் தண்ணீரை திறந்து விடாத கர்நாடகத்தின் நீதிமன்ற அவமதிப்பை ஆமோதித்த இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக
  • ஐட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் விளைநிலத்தை மலடாக்கும் அரசாலும் மன்னர்களின் நாடாளும் திறனை பாராட்டி
  • சோறு, தண்ணீர் இல்லாமல் 1200கி.மீ தூரத்தை கால்நடையாக நடக்க இயலும் இந்த மக்களால் என்பதை உலகுக்கு உணர்த்திய அவரின் சாமர்த்தியத்தை பாராட்டி
  • தமிழை ஒளித்து இந்தியை திணிக்கும் அவரின் முயற்சிகளை அங்கீகரித்து
  • கீழடி உண்மைகளை புதைக்கும் ஆரிய அடிவருடிதனத்தை புகழ்ந்து
  • வர்ணாசிரம தருமத்தை நிலைநாட்டும் அவரின் முன்னெடுப்புகளை மனமுவந்து...
  • முழு ஒத்துழைப்புடன் முடிந்த சுய ...


வெள்ளி, 27 மார்ச், 2020

சாதியின் புதிய பெயர்


எதுவும் நிகழலாம் உங்கள் வாழ்வில்


"சாலையில் நடந்தால் தடியடி,கைது " என சென்ற வாரம் இந்நேரம் யாரேனும் சொல்லி இருந்தால் "போடா கிறுக்குப் பயலே" என்று கடந்து சென்றிருப்போம். 

 அடுத்த வாரம் சுட்டு அல்லது அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்களை வீட்டிலேயே இருக்க சொல்வது உங்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. நம்மால் நம்மை மறைமுகமாக ஆள்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதே காரணம். 

அது நிகழாமல் இருக்க எதுவும் நிகழலாம் உங்கள் வாழ்வில்.👉