வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவ கல்லூரிக்காக தேவையா போராட்டம்?

"நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி 12.12-2019 அன்று. போராட்டமாம்"

போராடி?
நம்ம வாழிடங்களை‌ விளைநிலத்தை தாரைவார்த்து, 
நம் வரிப்பணம் இந்திய அரசு கருவூலத்திற்கு சென்றுவிடுவதால். குடிகாரர்கள் தங்கள் குடும்பத்தை அழித்து தரும் பாவக்காசை வைத்து கட்டப்படும் கல்லூரியில் உன்பிள்ளையோ என்‌பிள்ளையோவா படிக்கப்போகுது? 
அதில் 99% - 
பணத்தை வாரி இறைத்து நீட்டுக்கு படித்த மேல்தட்டு மக்களும், தில்லு முல்லு செய்த தேர்வேறிய வடநாட்டானும் படிக்கப் போகிறார்கள். நம்ம பசங்க நீட் தேர்வு எழுதவே இங்கு இடம் இல்லையாம். ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும் தூக்கி அடிக்கிறானுங்க. இங்க எழுதுபவர்கள் தாலி சங்கிலி முதற்கொண்டு கழட்டி மன உளைச்சலில் உள்ளாக்கி தேர்வு கூடத்திற்கு அனுப்புகிறார்கள்
இந்த லட்சணத்தில கட்டட நிதி. அங்கு பணியாற்ற வரும் வந்தேறிகளுக்கு சம்பளம். என தேவையற்ற நிதிச்சுமை. அதை சமாளிக்க நம்ம வீட்டுக்குள்ளேயே டாஸ்மாக் திறப்பாங்க,
எச்சரிக்கை மக்கழே

செவ்வாய், 3 டிசம்பர், 2019

வெங்காயம்

நமக்கெதுக்குங்க
இந்த அரசியல்
என
ஒதுங்கி போனவர்களையும்
கிலோ 150க்கு வாங்க வைத்தது
வெங்காயம்