ஞாயிறு, 17 மே, 2020

#துரோகதிமுக வை மறக்க முடியுமா?

அவர்கள் வாதத்திற்காக திராவிடத்திலிருந்து தான் தமிழினம் வந்தது என்று வைத்துக்கொண்டால் கூட, எந்த ஒரு தாயும் அவள் காட்டேரியாக இருந்தால் கூட, தன் மகவை டம்ளர் என்று அழைப்பதோ, எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அழிக்கவோ நினைக்க துணியாது. 

 அப்படி என்றால் இந்த திராவிடம் எவ்வளவு கொடியது என்பதை உணருங்கள் உபிக்களே. அவர்கள் உணராத பட்சத்தில் அவர்கள் மனைவிமார்களோ, மகள்களோ விழிப்போடு இருங்கள். ஆட்சியை பிடிக்க உங்களை அடகு வைக்க கூடத் தயங்க மாட்டார்கள் படுபாதக துரோகிகள் #துரோகதிமுக

வியாழன், 14 மே, 2020

#கொரோனா சதிச் செயலா ?

இது மருந்து குழுமங்களின் சதி என்கிறார்கள்.. பில் கேட்ஸ், உ.சு.நிறுவனத்துடன் கைகோர்த்து வராத நோய்க்கு தடுப்பூசியை 7பில்லியன் மக்களிடமும் திணிப்பது என்கிறார்கள். 5ஆம் அலைக்கற்றை பரிசோதனை என்கிறார்கள்.


இவைகளை தாண்டி இன்னொரு காரணம், 2016இல் அரங்கேறிய நாடகத்தின் இரண்டாம் பாகம். 10000கோடி கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது என 12லட்சம் கோடி 500.1000 ஐ தடை செய்தார்கள் அல்லவா? அப்போது சொன்ன இன்னொரு காரணம் மக்களை பணத்தை நேரிடையாக பயன்படுத்துவை மாற்றி மின்னணு டிஜிட்டல் முறைக்கு மாற்ற. அந்த காரணத்தை தான் இப்போது இரண்டாம் முறையாக வெற்றிகரமாக திணிக்கிறார்கள் . எல்லோரையும் வீட்டிலேயே முடக்கி கைப்பேசி, இணையவழி வங்கி பயன்பாடு, இணையவழி பொருள் வாங்கல்/விற்றல் , ஏடிஎம் பயன்பாடு,சாலையோர வியாபாரிகளை தவிர்த்தல் என்கிற திட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்த்திச் செல்கிறார்கள்

ஞாயிறு, 3 மே, 2020

உலங்கு ஊர்தி மூலம் மலர் தூவல்- தொடரும் நாடகம்

மருத்துவ உயர்படிப்புகளில் இடஒதுக்கீடு கேட்ட மருத்துவர்கள் போராட்டங்களை காவல்துறை கொண்டு அடக்கி, உளவுத்துறை மூலம் பொதுமக்கள் மத்தியில் எள்ளிநகையாட வைத்து, போராட உரிமை இல்லை என்று உரிமை பறிப்பு தீர்ப்புகள் எழுதவைத்து, செவிலியர் போராட்டங்களை கொடூரமாக அடக்கி அதில் ஒரு நிபந்தனையும் ஏற்கப்படாமல் அடக்கிவிட்டு இன்று அவர்கள் சேவையை மெச்சி துருப்பிடித்த உலங்கு ஊர்திகள் மூலம் மலர் தூவுகிறார்களாம். இது என்ன அரசாங்கமா? இல்லை சரஸ்வதி நாடக சபாவா? 

உரிமைகளை பறித்து அடக்கம் செய்து விட்டு மலர்வளையம் சூடுகிறது ஏகாதிபத்தியம். இதையும் நம்பி எம் மக்கள் கை தட்டுவார்கள்; அரசனின் புகழ் பாடுவார்கள் 

காவிரி எங்கள் உரிமை- மே 7,2020- விண்ணதிர முழங்குவோம்

=======================
காவிரி காக்க எழுவோம்!
=======================
இந்திய அரசே,
காவிரி மேலாண்மை ஆணையத்தின்
தன்னதிகாரத்தைப் பறிக்காதே!
உன் அதிகாரத் துறையில் சேர்க்காதே!
தனியே முழுநேரத் தலைவர் அமர்த்து!
===================================
கனிவான வேண்டுகோள்!
===================================
பேரன்புடையீர்,
வரும் 7.5.2020 வியாழன் மாலை 5 மணி
முதல் 5.30 மணி வரை.. அவரவர் வீட்டுவாசலில் குடும்ப உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு நின்று மேற்படி கோரிக்கைகள் கொண்ட பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் 15 நிமிட நேரம் கையில் ஏந்துங்கள்! வலைத்தளங்களில் நேரலை செய்யுங்கள்!
படமெடுத்துப் பதிவு செய்யுங்கள்!
தொடர்புக்கு - 90804 17120, 85258 00820
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 90251 62216, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

வெள்ளி, 1 மே, 2020

உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் 2020

கடந்த 133ஆண்டுகளில் இந்த உழைப்பாளர் நாளை உலகம் ஒருநாளும் மறக்காது