வியாழன், 3 செப்டம்பர், 2020

கொரானா-வங்கி வாடிக்கையாளர்கள் நிலை என்னவாகும்?

வங்கிகளில் நடப்பு பற்றுக் கணக்கு (OD/CC) வைத்திருப்பவர்களுக்கு செப் ஒன்றாம் தேதி ஆறு மாத வட்டி ஒரே நாளில் பற்று வைக்கப்படும். அப்படி சேர்க்கப்பட்ட வட்டியை 30செப் க்குள் கட்டத் தவறினால் அது வாராக்கடனாக மாறும். அதற்காக மேலாளர்களுக்கு இந்த ஆறு மாத வட்டியை ஆறு தவணைகளாக மாற்றி 31.03.2021க்குள் கட்ட வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய சொல்லி உள்ளது. கடந்த ஆண்டு பொரூளாதார மந்தம் காரணமாக தவறிய தவணையை தனிக்கணக்காக மாற்றி தள்ளி வைத்தார்கள். இப்போது வட்டியை தள்ளி வைக்க சொல்கிறது அரசும் சேமநல வங்கியும்.

இதனால் பொருளாதாரமும், வங்கிகளும் வீழ்வதோடு வாடிக்கையாளர்களை திரும்ப திரும்ப கடனில் சிக்கவைக்கப்பட்டு இந்த நாடு நாசமாக போகும் சூழல் மிக அருகில். 2008அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தது போல இந்திய வங்கிகள் வீழும். முன்பாவது வங்கிகள் சிறு சிறு வங்கிகளாக தனித் தனியாக இருந்தது. ஆனால் வங்கி இணைப்பு என்ற பெயரில் 27 வங்கிகள் 12 வங்கிகளாக மாறியுள்ள நிலையில் அரசுத் துறை வங்கிகள் வீழ்ச்சி கண் இமைக்கும் நொடியில் அமையப் போகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக