ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தமிழினத்தின் தாய் பார்வதி அம்மாளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!



 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் இன்று 2011 பெப்ரவரி திங்கள் 20 ஆம் தியதி காலையில் யாழ்.வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமானார். 

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நோய்வாய் பட்டிருந்த அவர் தனது 81 ஆம் அகவையில் இன்னுயிர் நீத்த அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திப்போம்!!!

கடந்த வருடம் மே மாதம் சிகிச்சைக்காக தமிழகம் வந்த அவரை சோனியா அரசாங்கமும், அவருக்கு ஊழியம் செய்யும் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி அரசும் சிகிச்சைக்கு அனுமதி மறுத்து விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிய வரலாற்றின் கசப்பான பக்கங்களை  நாம் யாவரும் மறந்துவிட்டிருக்க மாட்டோம். அதன் பின் சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் எங்கு வேண்டும் என்றாலும் அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள அரசு அனுமதி  வேண்டும் என்று ஆணை இட்டதையும் அதற்கு மாநில மத்திய அரசு அடிபணிந்து பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்ததையும்,அதை அந்த வீரத் தாய் மறுத்து விட்டதையும் யாவரும் அறிவோம்.
 


தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை

பார்வதியம்மாளுக்கு சீமான் தலைமையில் இரங்கல் கூட்டம்


பார்வதி அம்மாவை திரும்ப அழைத்து வர வேண்டும்! - சிபிஎம்
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன?- உயர்நீதிமன்றம் கேள்வி
பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு... பழ நெடுமாறன் கடும் கண்டனம்

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்! - மத்திய , மாநில அரசுகள் பதில்
(LTTE Leader Prabakaran's mother Parvathi ammal passes away Pazha.nedumaran condemns)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக