சனி, 4 டிசம்பர், 2021

புதிய உலகு செய்வாம்- பாரதிதாசன் கவிதை

 

புதிய உலகு செய்வாம்

புதியதோர் உலகம் செய்வோம் -- கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். 

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம். 

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் 

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
'ஒருபொருள் தனி,எனும் மனிதரைச் சிரிப்போம்! 

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக