திங்கள், 18 ஏப்ரல், 2011

மதுரை ECHS-முன்னால் இராணுவத்திற்கான மருத்துவமனையில் காலாவதி மருந்து விற்பனை-எச்சரிக்கை

முதல் தகவல் அறிக்கை-18 ஏப்ரல் 2011


மதுரையில் உள்ள முன்னாள் இராணுவத்திற்கான மருத்துவமனை(ECHS)யில் முதியவர்களுக்கு பெரும்பாலும் காலாவதியான மருந்துகளே வினியோகிக்கப்படுகின்றன. 

இதுபற்றிய மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.இதனால் நேரடியாக  பாதிக்கப்பட்டோர் தங்கள் கருத்துக்களை நமது வலைப்போவில் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!!!

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நடேசன்-உயிருடன் தீயிட்டு சித்திரவதை;தமிழினத்தை அழித்த காங்கிரசு+திமுகவை கருவறுப்போம்!!!


ஆதாரம்: 
உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின்
உடல்:புது ஆதாரம் !
12 April, 2011 by admin
2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.

முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. இறந்த பின்னர் உடலத்தை எடுத்துச் சென்று புதைக்க இருந்த இடத்தில் நின்ற இராணுவத்தினரால் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

மேற்படி எமக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை நாம் ஐ.நா வுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி ஊடாகவே குறித்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் ஆதாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

சமாதானச் சூழல் ஒன்றை உருவாக்குமாறும், போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும், ப.நடேசனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரக்கமற்ற கலைஞர் அரசும், மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரசுமே, இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க மறுத்துள்ளது. அதனால் நடந்த பேரவலத்தில் பெருந்தொகையான புலிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் இறந்துள்ளனர். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் !




சனி, 9 ஏப்ரல், 2011

தமிழ் மொழியை காத்திட காங்கிரசு,பா.ஜ.க.வை ஒழிப்போம்!!!

தேர்தல் களம் 2011

தமிழ் இனத்தை அழித்த காங்கிரசு-தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்போம் என்று சூளுரையை சிரமேற்கொண்டு இந்த தேர்தலை அனைத்து மானமுள்ள தமிழர்களும் சந்திக்கிறோம்.

அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணி குழப்பங்களை பயன்படுத்தி சில தேசிய கட்சிகள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் இந்தி ஆதிக்கக் கட்சிகள் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பார்க்கின்றன.

தமிழர்களான நம்மையும், நமது அடையாளமான தமிழையும் காப்பது நமது கடமை. நமது வாக்கை அளிக்கச் செல்லும் முன் சில கசப்பான நடப்புகளையும், அவைகள் இனி நடக்காமல் தடுப்பதற்கான வழிவகைகளையும் காண்பது அறிவு.

வங்கி,ரயில்வே,வருமானவரி,தொலைத் தொடர்பு,ராணுவம், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் என நடுவண் அரசு வசம் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியின் ஆதிக்கம் மேலோங்குகிறது. அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு இந்தி அடிப்படை அறிவு என்பது அவசியம் என்ற வகையில் தீவிரமாக இந்தியை திணிக்கிறார்கள். ஒவ்வொரு ஊழியர்களும் தங்களுக்கு அந்த மொழியில் அடிப்படை ஞானம் உள்ளது என்று உறுதி அளிக்க வேண்டும்.அப்படி இல்லாதவர்கள் இந்தியை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிபந்தனைகளை வைக்கிறார்கள். இந்த மொழித் திணிப்பை நடைமுறைப் படுத்த "ராஜபாஷா" என்ற ஒவ்வொரு அலுவலகத்திலும் தனித் தனி துறைகள்..இவைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு. சாதாரணமாக நீங்கள் வங்கிக்கு பணம் செலுத்தும் படிவத்தில்,காசோலை புத்தகத்தில்  கூட நமது தமிழ் மொழி இருக்காது..ஆனால் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்பது நடுவண் அரசு ஆணை.

இப்படி இவர்கள் மொழியை திணித்து, தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் கூட  தமிழ் என்பதே இல்லை என்ற அவல நிலை. இத்துணைக்கும் காரணம் காங்கிரசும், இந்தித் தீவிரவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சியும். இவர்களை தமிழகத்தில் வளர விட்டால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூட தமிழ் புறந்தள்ளப்பட்டு இந்தி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடும். 

தென்னிந்தியாவில் ஆந்திரா,கர்நாடக வரை தனது அக்டோபஸ் கரங்களை விரித்து அனைத்து பண்டைய மொழிகளையும் கபளீகரம் செய்து விட்டது இந்த அரை நூற்றாண்டு மொழி.இப்பொழுதே அனைத்து தனியார்  பள்ளிகளிலும் , "கேந்திரிய வித்யாலயம்"களிலும் இந்தி மொழி கட்டாயப் பாடம் ஆகிவிட்டது.  காங்கிரசையோ,பா.ஜ.க.வையோ அல்லது பஹுஜன் சமாஜ் கட்சி போன்ற இந்திக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளை  தமிழ்நாட்டில் வேரூன்ற விட்டால் தமிழ் மொழி என்பது சமஸ்க்ரிதம், கிரேக்கம் போன்று கன்னிமராவிலும், தஞ்சை சரபோஜி நூலகத்திலும் மட்டுமே பார்க்க முடியும்.

தமிழர்களை கொன்று குவித்த சூனியக்காரியின் காங்கிரசை எப்படி தோற்கடிக்க போகிறோமோ,அதை போன்றே பா.ஜ.க.வையும் வைப்புத் தொகை இல்லாகும் வகையில் விரட்டி அடிப்போம்; தமிழ் மொழியை காப்போம்!!

இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு திராவிடக் கட்சி நம்மை சுரண்டி விட்டு போகட்டும். பொறுத்திருப்போம் 2016 பொதுத் தேர்தல் வரை-"நாம் தமிழர்" வழிகாட்டும் நம்மை!!! 



ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உங்கள் தேர்தல் பணி இட முகவரி அறிந்துகொள்ள- LIST OF POLLING STATIONS

தேர்தல் பணியில் ஈடுபடும் தமிழக அரசு பணியாளர்கள் தங்களுக்கான தேர்தல் மைய எண்ணை(Polling Station Number) கொண்டு தேர்தல் மையத்தின் முகவரியை  (POLLING STATION ADDRESS) அறிய கீழ்காணும் இணைய தளமுகவரியை அழுத்தவும் 

(tamilnadu government employees- to know your polling station http://www.elections.tn.gov.in/ http://www.elections.tn.gov.in/polling_station.htm list of polling staion)

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

புறக்கணிப்போம்-இனவெறியன் வருகை தரும் உலகப் பந்து இறுதி ஆட்டத்தை!!!





அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் நியதிகளை மீறி நயவஞ்சகமாக பெண்டிரையும் குழந்தைகளையும் கொன்று குவித்த இனவெறியன் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பா???

மட்டை பந்து இறுதி ஆட்டம் காண வரும் அவனுக்கு காதறுந்த காலணிகளை  பரிசளிப்போம்!!!

இனமானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் ராஜபக்சே நாய் பங்குபெறும் மட்டை பந்து இறுதி ஆட்டத்தை பார்க்காமல் புறக்கணிப்போம் என்று சூளுரைப்போம்!!!


ராஜபக்ஷே கரம்பிடித்த சோனியாவின் ரத்தக் கரை படிந்த "கை' தமிழ்நாட்டில் இன்னொருமுறை ஓங்காமல் காங்கிரசை ஒழித்துக்கட்டோவோம்_ மறவாதீர்கள் - தேர்தல் நாள் ஏப்ரல் 13!!!!