புதன், 11 ஜூலை, 2012

இந்தியாவை சிதற வைக்கும்...தண்ணீர் போர்

தண்ணீர் தர முடியாது என ஒரு மாநிலம் மறுக்கிறது உச்ச நீதிமன்றம்,நடுவர் மன்றம் போட்ட ஆணைகளை சல்லிக் காசுக்கு கூட மதிக்காமல். அதை நடுவண் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது,வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு.
இந்தியா,இறையாண்மை,சட்டம்,அமலாக்கம் எல்லாம்....வெறும் ஏடுகளில் படிக்கும் வாசகங்கள் ஆகிவிட்டது. தனக்கு மிஞ்சி போனால்,தனது பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் வந்தால் கழிவு நீரைப் போல திறந்துவிடுகிறான் கன்னடக்காரன். இதோ காவிரி நீரை கொண்டு வந்துவிட்டோம் என தண்டோரா போடுகிறான் திராவிடக்காரன். கேவலமாக இல்லை...?!

"மக்கள் 15 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க விரும்பும்போது, ஒரு கிலோ அரிசி அல்லது ஒரு கிலோ கோதுமையை ஏன் ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க விரும்புவதில்லை" நடுவண் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்


காலணியால் அறை வாங்கியும் காலம் கற்பித்த பாடத்தை மறந்துவிட்டான்.

தண்ணீரை 15 ரூபாய் கொடுத்து வாங்க கூடிய இழிநிலைக்குகொண்டு வந்தது உங்களுடைய சாதனை என மார்தட்டி கொள்கிறாயா?இப்பொழுது எல்லாம் நகராட்சி தண்ணீர் பாத்திரம் விளக்கவும் குளிக்கவும் மட்டுமே பயன்படுகிறது. குடித்தால் காலரா போன்ற தோற்று வியாதிகள் வந்துவிடுமோ என்று பயந்து அடித்தட்டு மக்கள் கூட பயன்படுத்துவது இல்லை. அரசு இயந்திரம் இவ்வளவு நம்பிக்கையற்று போனதற்காக எந்த அரசியல்வாதியும் வருந்தியது இல்லை.

ஒரு கிலோ அரிசி எவ்வளவு என கேளுங்கள்..ஒரு ருபாய் என சொல்லுவார்கள் இவர்கள். யார் இப்போது எல்லாம் நியாய விலைக்கடையில் கொடுக்கும் அரிசியை வாங்குகிறார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

  •  மாடு வைத்திருப்பவர்கள் வாங்குவர்...காரணம்-மாட்டுத்  தீவன விலை ஏற்றம்.(இல்லை என்றால் அவர் கூட அதை வாங்க மாட்டார்). 
  • இன்னொருவர் அரசியல்வாதிகளோட பினாமிகள். அந்த ஒரு ருபாய் அரிசியை வாங்கி தீட்டி மெருகேற்றி நமக்கு 16,20 ரூபாய்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்ப்பார்கள். 
நடுத்தர வர்க்கம் மட்டும் இல்லை,இவர்கள் வரையறுத்த 28 ருபாய் தினக்  கூலி பெரும் பணக்கார பிச்சைக்காரன் கூட வெளிச்  சந்தையில் 35 ரூபாய்க்கு விற்கும் அரிசியை தான் வாங்கி உண்கிறான். காரணம் நியாய விலைக்கடை அரசி, மாடுகள் கூட தீவன விலையேற்றத்தின் காரணமாக தங்கள் முதலாளிகளால் இயலாமை காரணமாக தங்கள் மீது திணிக்கப்பட்ட புழுத்துப் போன அரிசி . 

கூட்டணி அமைத்து உர விலையை பன்னாட்டு குழுமங்கள் ஏற்றிய பொது கண்டுக்காத அரசு ஒரு ருபாய் அரிசி விலையை ஏற்றி அதை விவசாயிக்கு நெற்றிப் பொட்டில் வைக்கப் போகிறார்களாம் . நல்லா இருக்குடா உங்க கரிசனம். கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு அவல நிலைக்கே இந்திய தேசியம் பேசும் ஒவ்வொரு காங்கிரசுகாரனும் நாண்டுகிட்டு சாக வேண்டும்,மானமுள்ளவனாக இருந்தால் தன்னால் தானே இந்த நிலைமை என்று குற்ற உணர்வால். 

தண்ணீர் தராத மாநிலங்களில் இருந்து உற்பத்தி ஆகும் அரிசியை வாங்காமல் நாம் ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டு அரிசியை மட்டுமே வாங்குவோம். புரட்சி ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கட்டும். இனி இந்திய தேசியம் பேசும் ஒருவனும் தமிழ்நாட்டில் இருந்து சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர் ஆகாது பார்த்துக் கொள்வோம்..

வாழ்க தமிழ் தேசியம்...