சனி, 30 ஏப்ரல், 2022

மூன்று சக்கர சைக்கிள் பெற்றுத் தந்து உதவ முடியுமா இப்பெரியவருக்கு?


நாகப்பட்டினம்- நாகூர் முதன்மைச் சாலையில் வெளிப்பாளையம்- ஏழைப் பிள்ளையார் கோயிலை கடந்து செல்பவர்கள் இவரை பார்க்காமல் கடந்து சென்றிருக்க முடியாது.

கால்கள் செயல் இழந்த, நடமாட முடியாத உறவினர்கள் யாருமற்ற இந்த பெரியவர் வெயிலிலும் மழையிலும் போக்குவரத்து மிகுந்த சாலையில் கைகளை ஊன்றி தவழ்ந்து யாசகம் பெற்று வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருகிறார் 

சமீபமாக தான் இந்த கட்டைவண்டி. அதில் அமர்ந்து கரடு முரடான சாலையில், தெருவில்   பசிக் கொடுமையோடு உடல் தளர்ந்த அவர் கைகளை ஊன்றி இந்த  வண்டியை தள்ளி இடம்பெயர்வது என்பது பெரும்பாலும் கடினமான ஒன்று. இந்த சாலை வழியாகத் தான் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தினமும் போகிறார்கள். அருகிலேயேதான் போக்குவரத்து காவலர்கள் நிற்கிறார்கள். யாராவது ஒருவர் இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவருக்கு உதவ மாட்டார்களா என்று நினைத்துள்ளேன்

ஓராண்டு காலமாக இவரை பார்க்கிறேன். இவரை அணுகி இவருடைய பிரச்சனையை கேட்க நானும் பல நாள் நினைத்துள்ளேன். ஆனால் இவர் பெரும்பாலும் சாலையின் ஒட்டிலேயே அமர்ந்து இருப்பதால் வண்டியை நிறுத்தி அவரை அணுகுவது இயலாததாக இருந்தது. இன்று தான் மூடிக்கிடந்த  கடையின் வாசலில் படுத்துக்கொண்டு இருந்தார்.

மூன்று சக்கர சைக்கிள் இருந்தால் உங்களுக்கு போக வர வசதியா இருக்குமல்லவா என்று கேட்டேன். ஆமாய்யா.. இப்ப ஒண்ணுக்கோ வேறு எதுக்குமோ ஒதுங்க கூட முடியலய்யா...யாருமில்லாத சாக வழியில்லாம அனாதையா கிடக்கேன் என கண்ணீர் மல்க அவர் சொன்னது நெஞ்சை பிழிந்தது. 

அந்த மாதிரி வண்டி உங்களால ஓட்ட முடியுமா என்று கேட்டேன். முடியும் என்றார். யாரும் உங்களுக்கு உதவ வந்தார்களா என்று கேட்டதற்கு "நாலாயிரம் கேட்டாங்கய்யா..என்னால அவ்வளவு பெரிய தொகை எப்படிய்யா பொறட்ட முடியும்?" என்றார்.

நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கேட்போம். ஏதும் அடையாள அட்டை இருக்கா என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்றார். 

ஆட்சியரை அணுகி பார்ப்போம். இயலாத பட்சத்தில் பணம் கொடுத்தாவது மூணு சக்கரவண்டியை வாங்கிடுவோம் என்று அவருக்கு நம்பிக்கை அளித்து விட்டு வந்தேன். கண் கலங்க கைகளை தூக்கி கும்பிட்டு அடுத்த புதன் கிழமை போலாமாய்யா என்று கேட்டார். நான் விசாரித்து விட்டு வந்து அழைத்துப் போகிறேன் என்று நம்பிக்கை அளித்தேன். 

தோழர்களே... உங்களால் எதுவும் அவருக்கு உதவ முடிந்தால் அவரை சந்தித்து உதவியை பெற்றுத் தாருங்கள். என்னால் முடிந்ததை நானும் முயல்கிறேன் 

சனி, 23 ஏப்ரல், 2022

இளையராஜா | தமிழினத்தின் உணர்வு | யாராலும் அழிக்க இயலாத அடையாளம்




#இளையராஜா என்னும் மாபெரும் தலைமை. தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம். இந்த உலக அரங்கில் தமிழினத்திற்கு என்ற வரலாற்றில் அவருக்கான பக்கங்கள் மானுடத்தின் கலை நுணுக்கங்கள்.

இந்த நாட்டின் பல தேசிய இனங்களின் தாய்மொழிக்கு பதிலாக ஒற்றை மொழியை கொண்டுவர அரசியல் சாசனம் எழுதிய #அம்பேத்கரும், அதே நிலைப்பாட்டில் மொழிகளை அழித்து இந்திய திணிக்கும் மோடிக்கும் என்ன பெரிய வேறுபாடு?

இதுதான் தருணம் என்று ஆரிய, தெலுங்கு,கன்னட இனவெறியர்கள் நம் தமிழினத்தில் கலந்து காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொண்டு தங்களை #திராவிடர்களாக, தமிழின விரோதிகளாக வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர்களைப் பிரித்து நம் கண்ணை நம் கையாலேயே குத்த நடக்கும் ஆரிய சூழ்ச்சியை முறியடித்து தமிழினப் பெருமைகளோடு கை கோர்ப்போம்

 

#தமிழ்மது

24/04/2022

மேற்கண்ட பதிவை இளையராஜா குழுவில் பதிந்திருந்தேன். 
https://www.facebook.com/groups/meastroilayaraja/posts/10161966132167516/?comment_id=10161967620157516&notif_id=1650745127769019&notif_t=group_comment&ref=notif

இசைஞானிக்கு சமூக்கக்டமை என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லுங்கள் என்று ஒருவர் கருத்து போட்டிருந்தார்.

ஏது..காட்டை காக்கும் தமிழின பூர்வ குடிகள் குறவர் இனத்தவருக்கும், மகாராட்டிரத்தில் இருந்து குருவி சுட வந்தவர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அவர்களை அழைத்தும், அவர்கள் இல்லத்திற்கு சென்றும் சமூக நீதி நாடகம், மாணவர்களை அழைத்து மெகா சீரியல் செய்வது தான் சமூக கடமையா. இல்லை,, நாட்டை கூறு போட்டு கம்பெனிக்காரனுக்கு விற்றுவிட்டு வார்கோலை பிடித்து தூய்மை செய்வதாக நாடகம் ஆடுகிறார்களே. அதுவா?

சமூகக் கடமை என்றால் என்ன என்று வாக்குக்கு காசு வாங்கி தங்கள் உரிமைகளை விற்கும், வாங்கும் இவர்களுக்கு தான் தமிழ்த் தேசியர்கள் நாங்கள் பாடம் நடத்த வேண்டும். 

தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று திராவிட போர்வையில்  தெலுங்கர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது (காரணம் 1920 தொடங்கி இன்று வரை வேற்று இனத்தாரை ஆள வைத்து அழுது கொண்டு இருக்கும் தமிழினம் https://en.wikipedia.org/wiki/List_of_chief_ministers_of_Tamil_Nadu ) தமிழர்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கான எல்லா கதவுகளும் அடைபட்டு கிடந்த போது தன் திறமையால் மேலே வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவர் வந்த பிறகு தான் பல திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நம்பிக்கையுடன் வெற்றிபெறுவோம் என்று கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடிலிருந்து எல்லாம் சென்னைக்கு  லாரி ஏறி (திருட்டு ரயில் அல்ல) வந்தார்கள். 

தான் உச்சத்தை தொட்ட போதும் தெலுங்கு மலையாள மக்களை அரவணைத்து தான் சென்றார் இசைஞானி. திறமை கொண்டவர்களை ஜென்சி, ஸ்வர்ணலதா, மனோ என்று மற்ற இன மக்களுக்கு வாழ்வளித்தார். அது தான் தமிழர் தன்மை. அதே நேரத்தில் பல தமிழ் இனத்தவர்களை அவர் கரையேற்றவும் செய்தார். சமூகப் பொறுப்பு என்பது தம்பட்டம் அடித்துக் கொண்டு செய்வது அல்ல. உள்ளே இருந்து சத்தம் இல்லாமல் புரட்சி செய்தவர். அதை அவரால் முன்னுக்கு வந்த கலைஞர்கள் நன்கு அறிவார்கள். 


தான் தமிழருக்கு பிறந்தோமா திராவிடனுக்கு பிறந்தோமா என்றே தெரியாத திரிபு தலைவரை மேடையில் வைத்து சாதியை வைத்து பெரியாரின் பேரன்  திட்டுகிறான் என்றால் இதில் வெளிப்படுவது சாதி திமிர் மட்டும் அல்ல..இனவெறியும் 

தங்கள் இன ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டார் என்கிற ஐம்பது ஆண்டு காலமாக உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொண்டு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நரிகள் உறங்கிக் கிடக்கின்றன தமிழினப் போர்வையில் என்பதை இந்த தருணம் நன்றாக உணர்த்துகிறது