சனி, 10 மார்ச், 2018

ஏர்செல்லில் இருந்து பி எஸ் என் எல் க்கு மாற..(NUMBER PORTABILITY FROM AIRCEL TO BSNL)

நீண்டகால ஏர்செல்(Aircel) வாடிக்கையாளர்களும் அந்த இணைப்பை விட்டு வேறு இணைப்பிற்கு செல்லவேண்டும் என்பதே மனதிற்கு ஒவ்வாத ஒன்றே. ஆனால் மாறியே ஆகவேண்டிய கசப்பான கட்டாயம். வேறு வழியில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றிலும் மறைந்து போகும். அதற்குள் நாம் அதே எண்ணை தக்கவைத்துக் கொள்ள வேறு இணைப்பிற்கு மாறியே ஆகவேண்டும். மாற வேண்டிய இணைப்பு எது என்பது தான் கேள்வி. வோடபோனும் ஏர்டெல்லும் போட்டி போட்டு ஏர்செல் வாடிக்கையாளர்களைக் கவர திட்டங்களை அறிவிக்கிறார்கள்...முள்ளில் புழுவை வைத்து மீனைப் பிடிப்பது போல. 

என்னைக் கேட்டால் பி எஸ் என் எல்(BSNL) க்கு மாறுவதே சாலச் சிறந்தது என எண்ணுகிறேன். ஓரளவு நியாயமான விலைகள்; வெளிப்படைத் தன்மை; தனியாருடன் போட்டி போடும் அளவிற்கு நல்ல திட்டங்கள். மேலும் தமிழ்நாட்டில் அங்கு  வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். அவர்கள் நட்டத்தின் காரணமாக ஆள்குறைப்பு, பணி இடமாற்றம் என்கிற அச்சுரத்தல்களில் இருக்கிறார்கள். சேலம் உருக்காலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட நிலை பி.எஸ்.என்.எல்லிற்கு ஏற்படாமல் காக்க பொதுத்துறையை காக்கின்ற ஒரு கடமையை நாம் செய்தவர்களாகவும் ஆவோம்.

பி எஸ் என் எல் க்கு மாற..PORT XXXXXXXXXX  என்று 1900 க்கு அனுப்பவும். (XXXXXXXXXX - உங்கள் 10 இலக்க அலைபேசி எண்) போர்ட் எண் வந்ததும் அதையும் அது வந்த தேதியையும் குறித்துக்கொண்டு உங்கள் ஆதார் எண்ணை (ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கிவிட்டார்கள்) எடுத்துக் கொண்டு பி எஸ் என் எல் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும்.

குறிப்பு:
1. உங்கள் ஏர்செல் யார் பேரில் இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் யாருடைய ஆதார் அட்டையை கொண்டு செல்கிறீர்களோ அவர் பெயருக்கு புதிய பி எஸ் என் எல் அதே எண்ணுடன் ஆதார் அட்டை கொடுத்த நபரின் பெயரில் பதிவு ஆகிவிடும்.  புகைப்படம் எதுவும் தேவை இல்லை.
2. ஆதார் அட்டைதாரர் பி எஸ் என் எல் அலுவலகத்திற்கு நேரில் சென்று கைரேகை வைக்க வேண்டும். 
3. ஒரு சிம்மின் விலை ரூ.60.மட்டுமே.
4. பி எஸ் என் எல் சிம்மை நீங்கள் உங்கள் கைப்பேசியில் போட்டே வைத்து இருக்கலாம். ஒரு வார காலத்திற்கு பிறகு பி எஸ் என் எல் செயலுக்கு வரும்.
5. செயலுக்கு வந்த பிறகு ரூ.25 க்கு கடையில் சென்று (இணையதளத்தில் அல்ல ) ரீ சார்ஜ் (செறிவு) செய்யவேண்டும். பிறகு தான் உங்கள் புது பி எஸ் என் எல் செயலுக்கு வரும். அது வரை உள் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மட்டுமே வரும்.
5. தரவு சேவையை செயல்படுத்த "START" என 1925க்கு அனுப்பவேண்டும்.
6. வாடிக்கையாளர் சேவைக்கு எண் 1503 ஐ அழைக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- உலகில் தகுதியானவர்கள் நிலைபெறுவார்கள் என்பதும் வலிமையற்றவர்கள் அழிவார்கள் என்கிற பரிணாம கோட்பாடு சற்று மாறி பலம் குன்றியவர்களை அழித்து வலிமை பொருந்தியவர்கள் மட்டுமே ஆள்வார்கள் என்கிற முதலாளித்துவ பொருளியல் முறைமைக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு ஜியோ, ஏர்டெல்லின் ஏகாதிபத்திய நிலைபெறுத்தலும் யூனிநார், எம்.டி.எஸ். மற்றும் தற்போதைய  ஏர்செல் அழிப்பும்.

1ஜிபி தரவை ரூ.197க்கு விற்று நம்மை ஏமாற்றியவர்களை ஜியோ அடையாளம் காட்டியதற்கு நன்றி என்றாலும், களத்தில் இருப்பவர்களை காலி செய்து அனைவரும் இல்லாத முடியாட்சி நிலைக்கு வந்த பிறகு தான் சொல்வது தான் விலை, அதை வாங்கியே தீரவேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் என்கிற மோசமான கட்டத்தை நோக்கி நம்மை காய் நகர்த்தி இட்டுச் செல்லும் ஜியோவின் இந்த பாணி 1994இல் ஓர் அழைப்பு ரூ.8 என்கிற நிலையில் இருந்த போது வெறும் 40காசுகள் என மூலை முடுக்கு எல்லாம் விளம்பரம் செய்து கால் ஊன்றிய அவரின் தந்தை திருபாய் அம்பானியின் சூத்திரமே இது என்பது ஆரம்ப கால அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு நன்கு விளங்கும்.

தமிழன் கையில் இருந்த  ஏர்செல்லின் பங்குகளை  திருட்டு திராவிடம் முறைகேடாக குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்று, அந்த நிறுவனம் இப்பொதி திவால் ஆகிவிட்டது என கடையை மூடிச் சென்றது தான் நிலவரம்.