செவ்வாய், 30 நவம்பர், 2010

Wikileaks



பெரியண்ணா அமெரிக்காவை நடுங்க வைக்கும் wikileaks இணைய தளம். உலகெங்கும் இதே பேச்சு..அப்படி என்ன தான் இருக்கு? நமது சிவப்பு துண்டு போட்ட பொதுவுடைமை தோழர்கள் பெஞ்ச் மேல நின்று தெருமுனை பிரச்சாரம் பண்ணினதை எல்லாம் நாம் நம்பவில்லை. இந்த விகிலீக்ஸ் Investigative Journalism னு நாம் சொல்வோமே,அதுபோன்ற இணையதள புலனாய்வு பத்திரிக்கை. யார் வேண்டும் என்றாலும் தங்களுக்கு தெரிஞ்ச ரகசியங்களை இவர்களுக்கு நேரிடையாகவோ அல்லது (மின்) அஞ்சல் வழியாகவோ தெரியப்படுத்தலாம். அதை அவர்கள் ஆராய்ந்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை வெளியிடுகிறார்கள்.

How to explore the data
Search for events that you remember that happened for example in your country. You can browse by date or search for an origin near you.

Pick out interesting events and tell others about them. Use twitter, reddit, mail whatever suits your audience best.

இங்கு 15000 க்கும் மேற்பட்ட ரகசியங்களும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களும் உள்ளது. படித்து பார்த்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்!!


திங்கள், 29 நவம்பர், 2010

வெள்ளி, 26 நவம்பர், 2010

செம காமெடி

In a Bar
A man attends a call from a ringing mobile and speaks...


Hello...tell honey
Wife:"Da'ling now I'm shopping.Shal I get Rs.1 lac jewel?"
Man:Sure honey..get it ma
Wife:"1 silk saree worth Rs.20000/- dear. Shall...I?"
Man:1 saree not enough honey,take one more da
Wife:"OK dear,Shall I use ur credit card?"
Man:Sure ma,with pleasure

All freinds ask him after he put down his mobile- "U love ur wife this much?"

Man asked, "Xcuse  me, Whose mobile is this?"

FIRST AID TO HEART ATTACK


THANKS:RAJALASKHMI RAJASEKAR

வியாழன், 25 நவம்பர், 2010

BIGGEST SCAM OF THE WORLD





ராகுல் காந்தி சேவை..தமிழ்நாட்டுக்கும் தேவை..

பீகார் 4/243= 0.016%











அப்பா மகனே அங்குசாமி..நீ மகராசன இருப்பே...ஒரு எட்டு தமிழ்நாட்டுக்கும் வந்துட்டு போப்பா..




(ஹெலோ சீமான், நீங்க எதுக்கு காங்கிரசை தோற்கடிக்க ஊர் ஊரா பிரச்சாரம் பண்ண போகணும்னு சொல்றிங்க? உங்க வேலைய தம்பி ராகுலு பார்த்துக்குவார் DONT WORRY...BE HAPPY...!!!)

திங்கள், 22 நவம்பர், 2010

பூமித் தாய் மந்தமோ ?










நேற்று பெய்த
மழைக்கு இன்று
குடை பிடிக்கிறாளே ??!!!


(எங்கேயோ கேட்டது)

வங்கிப் பணித் தேர்வு-மாதிரி வினாத் தாள்

BANK EXAM -  CLERICAL/PROBATIONARY OFFICERS- LATEST MODEL QUESTION PAPER WITH SOLVED ANSWER-TOEL BOOKS-FREE DOWNLOAD-CLICK THESE LINKS

வெள்ளி, 19 நவம்பர், 2010

QUIT SMOKING





Today its me...Because of U
But....
Tomorrow its U..because of Me...




அது ஒரு வசந்த காலம்

அது ஒரு வசந்த காலம்






கரையும் காகங்களுடன் வாயாடிக் கொண்டு...
மறைந்திருந்து குரல் கொடுக்கும்
குயிலுடன் கண்ணாமூச்சி ஆடி....
சிட்டுக்குருவியின் நெல்மணியாய்...

மண்ணை முத்தமிட பனித்துளிக்கு

விடுதலை அளித்து..

தனிமையின் ரசிகனாய் உலாவி..
ஓடித் திரிந்த என்னை...

கரம் பிடித்து தத்தி தத்தி தவழ வைத்து

என் அலைபேசியின் ஒலியாய்
மடி கணினியின் திரையாய்
இறையின் கருவாய்..

என மாயையை உருவாக்கி....




அவள் பிரிந்து செல்லும் வரை...Add Video








அது ஒரு வசந்த காலம்...

சீமான்-வழக்கு நிலவரம்


வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். 'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமா
னை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,

நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு
விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்.

'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலை
களை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?

இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.
உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன்,
இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது

இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?
ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!

அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது
என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர,

சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம், 'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம்.
"கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.

- நன்றி ஆனந்தவிகடன்

வியாழன், 18 நவம்பர், 2010

Dhoni,The cheat...!

Dhoni is 29 years and Shakshi is 21 years



But still Dhoni says v wer school frnz


Stupid boy!

10th padichitu Ist std ponnukku route vitturukkan...!!

HOW TO IMPRESS TODAY'S GIRLZ


Boy to Gym Coach: I want to impress this cute girl,which machine should I use?

Coach: Simple...Use the ATM machine outside the Gym
(நன்றி: விஜய்,திருப்பூர்)

RAJINI & VIJAY

Add Image
Dr.Vijay: Sir Ennoda Kavalkaran padam release date sollava?
Rajini: No No
Dr.Vijay: yean sir...?
Rajini: Kanna sagura naal therinja valra naal naragam aidum...

(நன்றி: ரமேஷ் தம்பதிகள்,தேவூர்)

NSE DAY TRADING TIPS- 18-11-2010

SELL:

UCOBANK
TATAPOWER sell at 1371 tgt 1330
TATAMOTORS sell at 1224 tgt 1187
ORCHIDCHEM

புதன், 17 நவம்பர், 2010

TNPSC 2011-GROUP I,II,III&IV -EXAM IN MAY 2011- LAST DATE-FEB 2011





Each and every year Tamil Nadu Public Service Commission conducts examinations for recruiting persons for various services of the State Government of Tamil Nadu, including State, Subordinate and Ministerial Services. TNPSC conducts over 170 examinations for the recruitment in these services. Notifications for these examinations are released from time to time. The applicants have to follow all sorts of rules and regulations for these examinations. The candidates have to fill an application form and submit it within the given date in order to enroll their names for these exams.
TNPSC conducts Combined Subordinate Services Examination –I(CSSE-I) for direct recruitment in a number of services under Tamil Nadu Government. The services are divided in two parts: One for which both Written and Oral Exams are conducted and one for which only written exams are conducted. Both the examination leads candidates to a government service. Number of vacancies in these services is available with the notification.

Popularity of the exams:

A large number of students from across the state of Tamil Nadu appear for TNPSC every year and the competition is quite tough. As the seats are fixed for various services, applicants have to work hard to get the job.

Eligibility criteria:

Candidate should be between 18 and 30 years of age as on July 1st 2009. Though there are certain services for which the lower and upper age limit may be different. There is no upper age limit for reserved categories. Educational Qualifications vary according to the service the candidate applies for and will be available with the admission notification. The candidate should also possess adequate knowledge of Tamil.

Availability of Application Forms:

OMR Application forms will be available at all Head Post Offices and Selected Sub-Post Offices in Tamil Nadu/Puducherry and also from TNPSC Office Sales Counter.

Candidates can also apply online through the website www.tnpsc.gov.in.

Important Dates (Tentative):

Date of Written Examination: first week of May, 2011

Availability of Application Forms: second week of November, 2010

Last date for receipt of applications/Online Application: first week of February, 2011

Selection Procedure:

There will be a written examination of 300 marks of 3 hours duration which will be divided in two parts: General Knowledge (Degree Std.) & General Tamil / General English. In second part candidates have the option to either attempt General Tamil or General English questions. Both the parts will be of 150 marks each containing 100 questions each. Syllabus will be available through the following link: TNPSC Syllabus. For the services for which oral examination is also conducted the oral test will be of 40 marks.

ONLINE REGISTRATION

SYLLABUS

விண்ணப்பிக்கும் முறை 
Contact details:

Tamil Nadu Public Service Commission
Omanthoorar Government Estate,
Anna Salai,
Chennai – 600 002
Website: http://www.tnpsc.gov.in/Index.htm

குத்திக் காட்டியது என் தமிழ்


தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!


நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்

-- நம்மை போல் ஒரு தமிழன்
(நன்றி-திரு.பன்னீர்செல்வம், Ras-Al-Khaima)

திருமதி ஜாய்ஸ் பாண்டியனுக்கு ஆழ்ந்த இரங்கல்

அப்பாவி இலங்கை தமிழர்களை சிங்கள அரசாங்கம் கொன்று குவித்தபோது அனைவரும் கை கட்டி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முதல் முதலில் போராட்டத்தை ஆரம்பித்த இந்திய பொதுவுடமைக் கட்சி செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களது துணைவியார், இன்று உயிர் நீத்த....

திருமதி ஜாய்ஸ் பாண்டியன் அவர்களது


ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

google-site-verification: google6c5a1a0d5e4b74be.html


செவ்வாய், 16 நவம்பர், 2010

NEFT & RTGS- என்ன வேறுபாடு?



NEFT & RTGS CHARGES

NEFT (in Rs.)


RTGS (in Rs.)

UPTO 1 LAKH
6
1LAKH TO LESS THAN 2LAKH
NOT PERMITTED
ABOVE 1LAKH TO 2 LAKH
17
2 LAKH TO 5 LAKH
28
ABOVE 2 LAKH  
28
ABOVE 5 LAKH
55

NEFT என்றால் National Electronic Fund Transfer அப்புறம்..
RTGS என்றால் Real Time...அய்யய்யே..இஸ்கூல் பசங்க மாதிரி இதெல்லாம் எதுக்கு?விஷயத்துக்கு வாப்பான்னு சொல்றது காதுல விழுகுது...

இப்ப உங்க கணக்கு இந்தியன் வங்கியில இருக்கு.என் கணக்கு கரூர் வைஷ்யா வங்கியில இருக்கு. நீங்க எனக்கு பணம் அனுப்பனும்னு விருப்ப படுறீங்க (ஒரு பேச்சுக்குதான்) இங்க தாங்க NEFT & RTGS பயன்படுது.


இப்ப நீங்க ரூ.2 லட்சம் இல்ல அதுக்கும் குறைவா அனுப்பனும்னு விருப்ப படுறீங்க (அய்யே..அல்பம்). இப்ப நீங்க NEFT ல அனுப்பியாகனும். இதுக்கு கட்டணம் ரூ1 லட்சம் வரைக்கும் வெறும் ரூ.6 தான்.1-2 லட்சம்கு ரூ.17.

நீங்க அனுப்புற பணம் எனக்கு அன்னைக்கே வந்தால் ஆச்சர்யம். பெரும்பாலும் அடுத்த நாள் தான் என் கணக்குக்கு வரும். இதுக்கு உங்களுக்கு என்னோட
1.வங்கி கணக்கு எண்
2. கணக்கு வகை(அதாவது சேமிப்பு கணக்கா,நடப்பு கணக்கா,கடன் கணக்கா என்பது உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்)
3.IFSCODE [ஒவ்வொரு வங்கி கிளைக்கும் ஒரு CODE நம்ம ரிசேர்வ் வங்கி குடுத்து இருக்காங்க. இப்ப KVB வங்கிக்கு KVBL என ஆரம்பிக்கும்.இது மொத்தம் 11 எழுத்துரு கொண்டு இருக்கும்)


இந்த மூன்றும் முக்கியமா தெரிஞ்சு இருக்கணும். இப்ப நீங்க அனுப்புன பணம் என் கணக்குல எப்ப வரவு வச்சாங்கன்னு உங்க அலைபேசி அல்லது மின்னஞ்சலுக்கு செய்தி வந்துடும்.


அதே நீங்க ரூ.2 லட்சத்துக்கு மேல எனக்கு குடுக்கணும்னு ஆசை படுறீங்க(அய்யா..தர்ம பிரபு.. ) இப்ப RTGS ல அனுப்பனும்.இது அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள்ள என் கணக்குக்கு வந்துடும்.

(கட்டணம் Rs. 2-5 laksh- Rs.28
ரூ.5 லட்சத்துக்கு மேல ரூ.55.)


(குறிப்பு - இது எல்லாம் உங்களுக்கும் எனக்கும் கணக்கு இந்தியாகுள்ள இருந்தால் தான் இந்த பண பரிவர்த்தனம் எல்லாம்..நீங்க குடுக்குற பணத்தை வச்சு நான் நாளைக்கே வெளிநாடு போயிட்டேன்னு வச்சுக்குங்க. அப்பொழுது இந்த NEFT,RTGS இதெல்லாம் உதவாது. கவலை படாதீங்க.. அதுக்கு SWIFT இருக்கு. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்ப RTGS ல பணம் அனுப்புங்க..)

வரட்டா ..

(NEFT AND RTGS CHARGES CHART-APPLICABLE TO ALL BANKS IN INDIA)