ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மோடியின் உளறலும் வங்கியாளர்களின் புலம்பல்களும்

 ராஜா தூங்கி எழுந்து உளறினால் அது மறுநாள் பத்திரிக்கையில் தலைப்பு செய்தி ஆகிவிடுகிறது. இந்திய பிரதமர் மக்கள் நிதிக் கணக்கு என்பதும் அது போலதான்.
(திட்டத்தின் பெயரும் இந்தியில் தான்)

அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது வரவேற்புக்கு உரியது தான். ஆனால் அதை மறுநாளே அடைந்து காட்ட வேண்டும் என்கிற நெருக்குதலும் அழுத்தமும் அந்த திட்டத்தை முற்றிலும் வெறும் புள்ளி விவர சாதனை திட்டமாகத் தான் மாற்றி உள்ளது.

எத்தனை கோடி மக்கள்.அவர்கள் புகைப்படம், இருப்பிடம். முகவரி இதை எல்லாம் சரி பார்த்து அனைவருக்கும் கணக்கு திறப்பது என்பது ஓர் இரவிற்குள் நடத்தி முடிக்கும் காரியம் இல்லை. இது போன்ற அழுத்தத்தால் நடந்தது என்ன தெரியுமா? பெரும்பாலான வங்கிகள் குடும்ப அட்டையில் உள்ள பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு "டம்மி" கணக்குகள் திறந்து...தங்கள் இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்து விட்டனர்.

இன்னும் சில வங்கியில் சாதாரண வங்கி ஊழியன் தரக்கூடிய கணக்கு புத்தகத்தை மேடை போட்டு தர எங்கோ மூலையில் இருக்கும் வங்கி போது மேலாளர் வருகிறார் (அதன் மூலம் வங்கி செலவில் சுற்றிப்பார்க்க)..எவன் அப்பன் வீட்டு காசு?

ஒருவருக்கும் உபயோகம் இல்லாமல் எத்தனை கோடி வீணாகிறது தெரியுமா?

அது...சரி. இந்த கணக்கை ஆரம்பித்து வைத்து அவர் என்ன சாதனை செய்ய போகிறார். அதற்கு எப்படி நிதி அளிக்க போகிறார். விபத்துக் காப்பீடு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது...இது எதற்கும் பதில் இல்லை.

அனைவருக்கும் ஏ.டி.எம். அட்டையாம். 5000,10000போட்டவனுக்கு ஆறாவது முறை மற்ற வங்கி இயந்திரத்தில் போய் பணம் எடுத்தல் ரூ.22.47 அபேஸ் செய்கிறாய். இவர்கள் முதியோர் ஓய்வூதியம் முழுதாக வாங்குவது உனக்கு பொறுக்கவில்லை. அதையும் பிடுங்கி உனது கார்பொரேட் முதலாளிக்கு சாசனம் எழுத சொல்ல நடத்துகிறாய் இந்த நாடகம்.

நீ உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் விஜய் மல்லையா, டெக்கான் குரோனிக்கிள் போன்ற ஏமாற்று பேர்வழிகள் வங்கிகளிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த வை...உனக்கு திறனிருந்தால்.

நீ வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை என்றால் 75%க்கு மேல் மதிப்பெண் இருந்தால் தான் வங்கியில் கல்விக் கடன் என்று அறிவி..பார்க்கலாம். முடியாது. ஏன் என்றால் கல்வி வியாபாரம் செய்பவன் உன் காலை நக்கி பிழைக்கும் நாய்களும் உனக்கு "ஸ்கெட்ச்" போட்டுக் கொடுக்கும் அரசியல் ஞானிகளும். வங்கிகளை கொள்ளை அடித்து அவர்கள் பையை நிரப்பும் வழிப்பறி அரசியல் நடக்கிறது என்பது இந்த மக்களுக்கு தெரியாத வரை உன் மோடி வித்தைகளை நாளும் நீ அரங்கேற்றலாம்.
  
வாக்குறுதிகளை அள்ளி தெளித்துவிட்டு அரியணை ஏறிய மன்னவன் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. அதற்குள் அடுத்த திட்டம் என்று ஒரு பரபரப்பை கிளப்பிவிட்டு சப்பானுக்கு சென்றுவிட்டான் கல்யாணராமன்
Read more : http://www.ehow.com/how_5946594_make-text-invisible-html-code.html(prime minister savings bank account scheme, pressure on bankers, modi's stunt)