புதன், 9 ஜூலை, 2014

முகம்மதிய தோழர்களிடம் மிகுந்து இருப்பது மத பற்றா?சமூக உணர்வா?


  • காயல்பட்டிணத்தில் இருக்கும் ரகீம் பாய் எங்கோ காசாவில் முகம்மதிய தோழர் கொல்லப்படுவதற்காக கொதித்து எழுகிறார்...இங்கு அவர் சார்ந்த சமூகம் கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக பட்டினி போராட்டம் முதல் அனைத்தும் கண்டு தோல்வியுற்ற நிலையில்...
  • செஞ்சோலையில் சிறார்கள் கொத்துக் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட போது கொதித்து எழாத;இரசாயன குண்டு வீசி உடல் எரிந்து கொத்து கொத்தாக நமது தமிழ் சொந்தங்கள் மடிந்த போது கண்டும் கானது இருந்த சாயபுகள் இலங்கையில் குரான் எரிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் இலங்கைத் தூதரகத்தை ஆவேசமாக முற்றுகை இட்ட அவர்களின் ஆக்ரோசம்...
  • தமிழ்நாட்டில் தமிழ்மாறன்,ஆந்திராவில் ஆஞ்சநேயலு..கன்னடத்தில் பெத்தநல்லி, கேரளாவில் நம்பூதிரி....ஆனால் தமிழ்நாட்டில் ரஹூப்,காஷ்மீரிலும் ரஹூப்,ஈரானிலும் ரஹூப்...தான் சார்ந்த சமூகத்தின் மொழி அவர்களுக்கு வேற்று மொழி...அவர்கள் தாய்மொழி உருது என்பதில் இருக்கும் உறுதி..
  • அப்துல் கசாப்பிற்கு தூக்கா,, அப்பாவி அப்சல் குருவிற்கு சொல்லாமல் மரண தண்டனையா..இதற்காக மொத்த தமிழரும் ஒன்றாக எதிர்த்தே குரல் எழுப்பி இருக்கிறார்கள்...ஆனால்..ஊழல்வாதி ராஜீவின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி அப்பாவி தமிழர் எழுவர் தூக்கு மேடை கொட்டடியில் தவிக்கும் போது முகம்மதிய தோழர்கள் ஒன்றாக எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லையே என்கிற ஆதங்கம்..
 பாப்புலர் பிரான்ட் நடத்தும் எழுச்சிப் பேரணிகளுக்கு பெண்டு பிள்ளைகளுடன் ஒன்றாக அணிவகுக்கும் இவர்கள் ஒற்றுமை,விளைநிலங்களை மீத்தேன் எடுக்கிறோம் என்று பாழ் படுத்துகிற அரசை எதிர்த்தோ, கெயில் குழாய் பதிப்பை எதிர்த்து உழவர் நடத்தும் போராட்டங்களுக்கோ காணப்படுவது இல்லையே?!

தான் சார்ந்த சமூகத்தில் இருந்து தள்ளியே நிற்கும் இவர்கள், அவர்களுக்கு சிறு பிரச்சனை என்றதும் அந்த சமூகம் தட்டிக்கேட்க வில்லை என்றால் கோவமுறுவது எங்கணம் நியாயம்?

தோழர்களே..ஒன்று படுவோம்..வீறு எழுவோம் அனைவரின் சமூக பாதுகாப்பிற்காகவும்.