செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கவிதை: கோரிக்கை


நீங்கா இடம் பிடித்த ஜசிகா...

முகநூல் வலைத்தளம் அனைத்திலும் ஜெசிகா ஜெசிகா என்றே பேச்சு. பர்கரும் பிசாவும் தின்று விட்டு செரிமானம் ஆக மேல்தட்டு மக்கள் பார்க்கும் தொலைகாட்சி தான் விஜய் தொ.கா. என்பதால் அதை நான் தவிர்த்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் எனக்கு ஒன்றும் புரிபடவில்லை.

நேற்று எனக்கு புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து ஒரு அழைப்பு. தமிழர் பிரச்சனை பற்றி மொழிப் பிரச்சனை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள்...ஜெசிகாவிற்கு இழக்கப்பட்ட அநீதி பற்றி ஒரு சிறு கருத்துரை கூட இல்லையே உங்களிடமிருந்து என்று ஆதங்கப்பட்டார்கள்.

   "அந்த தொ.கா வைப் பற்றி நன்கு தெரியும். தமிழினத்திற்கு என்றும் ஆதரவாக அது இருந்தது இல்லை; அப்படி இருக்கையில் உங்களை யார் அதில் கலந்து கொள்ள சொன்னார்கள்? பின்பு வஞ்சித்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள்" என்று அவர்கள் வலி உணராமல் பதிலுரைத்தேன்.

     "இந்தியா என்றால் கலைகளுக்கு முக்கியத்துவம் தரும் நாடு; பெண்களைப் போற்றும் நாடு; அங்கு தனது திறமையை நிரூபிக்க ஒரு களம் கிடைத்த மகிழ்ச்சியில் தானே அந்த குழந்தை அங்கு வந்து தனது ஒரு வருட பள்ளிப் படிப்பை விட்டு,அண்ணன் மற்றும் உறவினர்களோடு தங்கள் வேலையை விட்டுவிட்டு... தங்கி.. இவ்வளவு சிரமம் எடுத்து உழைத்து முதல் இடம் பெற அனைத்து தகுதிகள் பெற்று இருந்தும் இறுதியில் இப்படி வஞ்சித்து விட்டீர்களே ...!!!இது நாள் வரை பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றிப் பெற்றவரை அறிவித்து இருந்த நியதியை திடீரென்று மாற்றி ஏமாற்றி விட்டீர்களே" என்று குரல் தழுதழுக்க அவர் பேசிய போது தான் அந்த ஏமாற்றப்பட்ட அந்த பிஞ்சு நெஞ்சத்தின் சோகம் புரிந்தது. அவர் மேலும் சொன்னது ஆறுதலாக இருந்தது..."விஜய் தொ.கா.வை முற்றிலுமாக புறக்கனித்துவிட்டோம்..இனி பார்ப்பது இல்லை" என்று. 

புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் தொப்புள் கொடி உறவுகளே. இந்தியா என்றால் நீங்கள் ஏதோதோ கற்பனையில் இருக்கின்றீர்கள். பணத்திற்காக எதையும் செய்யும் மக்கள் நிறைந்த நாடு இது. அதில் அடிமைப்பட்டு தவிக்கும் ஒரு தேசம் தான் தமிழ் தேசம். செல்வமும் செலவாக்கும் உள்ளவர்களுக்கு தலையாட்டும் தன்னலக்கூட்டம் நிறைந்த நாடு இந்திய நாடு. இங்கு உண்மைக்கும் உரிமைக்கும் மதிப்பு கிடையாது. 

 மருத்துவ சிகிச்சை பெற வந்த 80 வயதைத் தொட்ட மூதாட்டியை தரை இறங்க கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய தேசம் இது; அதைப் பார்த்து இயலாமையில் பாதிக்கூட்டமும்;அறியாமையில் மீதிக்கூட்டமும் கலந்த கறை படிந்த தேசம் இது. AK 56 வைத்து இருந்த ஆரியன் பரோலில் வெளி வருகிறான்.ஆனால் ஒரு பாட்டரி செல் (மின்கலம்) வாங்கித் தந்ததற்காக 24 வருடங்களாக சிறைச் சுவற்றுக்குள் தன் வாழ்நாளை கழிக்கிறான் தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக. 

உனது பரிசுப்பொதி அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய அந்த உயர்ந்த உள்ளதை மிஞ்ச இங்கு யார் உளர்?

முதல் இடம் பிடித்து இருந்தால் கூட இப்படி ஒரு பேரும் புகழும் கிடைத்திருக்குமா என்பது ஐயமே. ஆரிய சூழ்ச்சி உனக்கு எந்த இடம் கொடுத்தால் என்ன..உலகத் தமிழர் அனைவர் உளத்திலும் நீ நீங்கா இடம் பிடித்து விட்டாய் தங்கையே...அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த ஒவ்வொருவர் இல்லத்திலும் நீ குடிபுகுந்துவிட்டாய் செல்லமே. 

தமிழனை தமிழன் மதிக்கும் அரசு விரைவில் வரும். அது வரை காத்திரு கண்மணியே...

விடை கொடு எங்கள் நாடே 
 கடல் வாசல் தெளிக்கும் வீடே 
 பனை மர காடே பறவைகள் கூடே 
 மறுமுறை ஒரு முறை பார்ப்போமா