ஞாயிறு, 21 ஜனவரி, 2018

திமுக+பாஜக=ஆண்டாள்

அரியாசனம் துறந்த இராமனை வைத்து அறியாசனங்களுக்கிடையே பகை மூட்டி அரியணை ஏறிய பாஜக, தமிழர்களால் நோட்டோவால் அவமானப்படுத்தப்பட்டு  இனி தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது என்கிற சூழ்நிலையில் அதே சூத்திரத்தை பயன்படுத்தி தமிழர்களுக்குள்ளே பிளவு உண்டாக்கி உள்ளே நுழைய எத்தனிக்கும் முயற்சி தான் இந்த ஆண்டாள் பிரச்சனை.

இது ஏதோ திராவிட ஆரியப் போர் என நினைத்தால் நீயும் நானும் முட்டாள். இது இந்த இருவரின் கூட்டு சதி முயற்சியே. திருக்குறளை முன்னிறுத்தி இதே வைரமுத்துவை வைத்து தருண் விஜய் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் அவர்கள் திட்டம் சுக்குநூறாகிப் போனது தமிழர் பாதியில் விழித்துக் கொண்டதால்; மதச் சண்டைக்கும் இந்த தமிழர்கள் ஒத்துழைக்கவில்லை. எனவே தான் இறுதி அஸ்திரத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் தமிழக அரசியல் பிதாமகர். கட்டுமரத்தை வைத்து கரையை உடைக்கும் முயற்சி. 

வைரமுத்துவிற்கு வக்காலத்து என்கிற மாய மானை வைத்து சீதை என்கிற தமிழ்நாட்டு சிம்மாசனத்தை அபகரிக்க அற்ப பதர்கள் நம் உணர்சிகளை வைத்து விளையாடும் ஆடு புலி ஆட்டம். இதில் நாம் தமிழர்கள் விழித்துக் கொண்டு ஒற்றுமை காத்திட வேண்டும். 

சகாராவில் கூட தாமரை மலரலாம்; ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டில் முடியாது.

சனி, 20 ஜனவரி, 2018

உரை ஓவியம்: மீன் தொட்டி

ஒவ்வொரு இல்லத்திலும்
ஒரு
சிறிய சிறைக் கூடம்