வெள்ளி, 22 ஜூலை, 2011

"இறப்பு"க்கு பின் தமிழர் தலைவர் வே.பிரபாகரனின் எழுச்சி உரை-அரிய காணொளி



1987குப் பிறகு 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் தமிழர்களின் தலைவன்,ஈழப் போர் முரசு, இறந்ததாக 'தி ஹிந்து' உள்பட பாசிச சக்திகளால் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில் தமிழ் உலகமே எழுச்சியுறும் வகையில் 1991 இல் தாகவச்சேரியில் தானைத் தலைவர் வேயன்னா.பிரபாகரன் அவர்கள் "முத்தமிழ் விழா"வில் தோன்றினார்.அலைகடலென திரண்டிருந்த மக்கள் சமுத்திரத்தின் முன்னே பங்குகொண்டு மாமனிதர்கள் பட்டமளிப்பு விழாவின்போது வீர உரை ஆற்றிய நிகழ்வின் அரிய காணொளி. தலைவனின் பிரகாசமான முகத்திற்கு முன்னே நிலவு கூட தலை கவிழ்ந்து முகில்களுக்கு இடையில் மறைந்திருக்குமோ அப்போது?

வீரத் தலைவர் ஆற்றிய எழுச்சி உரையில் சிறு துளிகள்..

"எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமீழீழ மக்களே..
தமிழீழ மண்ணின் விடுவிக்காக,தமீழீழ மக்களின் விமோசனத்திற்காக தமிழீழ தேசிய பண்பாட்டின் மறுமலர்ச்சிக்காக உழைத்தோரும் உழைத்து வருவோர்களுமான உன்னத மனிதர்களை உண்மையான மண்ணின் மைந்தர்களை மதிப்பளித்து கௌரவிப்பதற்கு எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு நான் பெருமைப்படுகிறேன்.

நற்பணி ஆற்றும் நல்ல மனிதர்களுக்கு மதிப்பளிப்பதும் கௌரவம் செலுத்துவதும் தமிழனின் பண்பாடு.இந்த சீரிய மரபிற்கேற்ப இந்த சிறப்பு வைபவத்தை ஒழுங்கு செய்த எமது இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழீழ தேசத்தின் அதி உயர்ந்த கௌரவமாக தேசிய விருது வழங்கி மாமனிதர்களென மதிப்பளிக்கிறோம். எனன்றால் இவர்கள் அனைவரும் அற்புதமான இலட்சியவாதிகள்.இனப்பற்றும் நாட்டுப்பற்றும் உடைய தேசாபிமானிகள். சுயநல வாழ்வின் குறுகிய வட்டத்திற்கு அப்பாற்பட்டு நின்று
சமூக நலத்திற்காக தேசிய நலத்திற்காக மக்கள் நலத்திற்காக சேவை ஆற்றிய அபூர்வ மனிதர்கள். இவர்களது அறிவாற்றல் படைப்பாற்றல் செயலாற்றல் அனைத்துமே தமிழீழ சமூகத்திற்கு உரமூட்டுவதாக அமைந்திருக்கிறது. இவர்களது பணி மேலும் தொடர வேண்டும்; இவர்களது தொண்டு மேலும் சிறக்க வேண்டும். இதனால் தான் இவர்களுக்கு பெருமதிப்பளித்து தேசிய விருது வழங்கி கௌரவிக்க தீர்மானித்தோம். இந்த கௌரவ பரிசளிப்பை தேசிய விருது என அர்த்தமும் முக்கியத்துவமும் இருக்கத்தான் செய்கிறது.


தமிழீழ மக்களாகிய நாம் ஒரு தேசிய கட்டமைப்பை கொண்டவர்கள். வரலாற்று ரீதியாக நாம் ஒரு தேசியமாக வாழ்ந்து வந்தோம்;தேசியமாகவே வாழ்ந்து வருகிறோம்; தேசியமாகவே வாழப் போகிறோம். எமது தேசியத்தை எதிரியானவன் ஏற்றுக் கொண்டாலும் சரி..ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி, எமது தேசிய தனித்துவமானது;என்றும் அழிக்க முடியாத யதார்த்தமான அரசியல் உண்மை என்பதை நாம் உலகிற்கு சதா பிரகடனம் செய்து கொண்டே இருப்போம். தேசிய விருது என நாம் பட்டமளிப்பதும் இப்படியான ஒரு பிரகடனமே.


இந்த தேசிய விருது அளிப்பிருக்கு ஒரு சில தேசபக்தர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தத்தில் இந்த பரிசளிப்பு எமது மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் கௌரவமாகவே கருதப்படவேண்டும்.
எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்; கௌரவிக்கப் படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்று தான் சொல்வேன். இலை மறை காயாக இருந்து விடுதலை போராட்டத்திற்க்கு தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.


நீண்ட காலமாகவே போராட்டத்தின் பெரும் பளுவை பொது மக்களே சுமந்து வருகிறார்கள்...அழிவும் பசியும் பட்டினியும் இரத்தமும் கண்ணீருமாக எமது மக்கள் எதிர்கொண்ட தாங்கொணா துன்பத்தை சொற்களில் சித்தரிக்க முடியாது.


உலகின் எல்லா விடுதலை போராட்டங்களிலும் ஒடுக்குமுறை நெருப்பில் குளிப்பது பொது சனங்களே. ஏனென்றால் அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விட பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்கவேண்டும் என்பதில் தான் அதீத அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒரு பொழுதும் வெற்றி அளிப்பதில்லை. மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது; உலக வரலாறு பகரும் உண்மை இது.ஏனென்றால் விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர் மூச்சாக இயங்குகிறது.மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சக்தியும் அதுவே. 


சிங்கள பேரினவாத அடக்குமுறையானது எமது மக்களுக்கு சாவையும் அழிவையும் தாங்கொணா துயரையும் கொடுத்தபோதும் என்றுமில்லாத வகையில் தேசிய கட்டுணர்வையும் சுதந்திர தாகத்தையும் தூண்டிவிட்டிருக்கிறது;தமிழரின் தேசிய ஆன்மாவை விழித்தெழ செய்திருக்கிறது. இன்று நாம் கொண்டாடி வரும் இந்த முத்தமிழ் விழா எமது மக்களது தேசிய எழுச்சியின் அபாரமான வெளிப்பாடு என்றே சொல்லவேண்டும். போராட்ட சூழலில் எல்லைகளில் எதிரியின் போர் முரசு கேட்கும் யுத்தக் காலத்தில் சமுத்திரம் போல் திரண்டு வந்து பல்லாயிரம் மக்கள் முத்தமிழ் விழாவில் பங்குகொள்கிறார்கள் என்றால்,அது எமது  மக்களின் திட சங்கல்பத்தை உறுதிப்பாட்டை சுதந்திர அறைகூவலை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த சுதந்திர அறைகூவல் எமது எதிரியின் காதுகளுக்கு எட்டாமல் இல்லை. சீற்றம் கொண்ட பூகம்பத்திற்கு முன்பாக எழும் இனத்தின் எழுச்சிக் குரலை சிங்கள தேசமும் சர்வதேச சமூகமும் அசட்டை செய்ய முடியாது. இலட்சியத்தால் ஒன்று பட்டு உறுதி கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள்.இந்த வரலாற்றின் படைப்பாக எமது தேசிய மண் ஒரு சுதந்திர பூமியாக பிறப்பெடுக்கும் என்பது திண்ணம்.


புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த விழாவில் சிறந்த போராட்ட இலக்கியங்களை படைத்ததற்காக சமீபத்தில் உயிர்நீத்த கவிஞர் காசி ஆனந்தனுக்கு இலக்கியத்திற்கான தமிழீழ தேசிய விருது வழங்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னே அவரிடம் காணப்பட்ட சிந்தனைகள் இன்றும் நமது போராட்டத்திற்கு அடித்தளமாகவே இருக்கிறது என்றால்,இன்றைய நிதர்சனமான உண்மைகளை வெட்ட வெளிச்சம் போட்டு அன்றே காட்டியுள்ளார் எனும்போது அவரது தொலைநோக்கு பார்வையும்,மக்கள் மீது கொண்ட மாறா அன்பும்,பரிவும் அவரை ஈழ தேசத்தின் மட்டும் அல்லாது பரந்து பட்ட தமிழர்கள் அனைவரின் நிகரில்லா தலைவராக இன்றும் என்றும் இருப்பார் என்பது திண்ணமாகிறது!!!
----------------------------------------------------------------------------------
காணொளி இணைப்பு தந்தவர்:தமிழீழ விடுதலைப் புலிகள் புலிகள்

(ltte Pirabakaran speech at thagavacherry in 1991 historic speech,Pirabakaran's speech)

இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை! – இலங்கை திட்டவட்டம்


அப்புறம் என்னங்கடா கவலை.. ?வயிற்றை நிரப்ப வேறு நேர் வழி தெரியாமல் கேடு கெட்ட காங்கிரசை நம்பி ஈனப் பிழைப்பு நடத்தும் தங்கபாலு கோஷ்டி,இளங்கோவன் கோஷ்டி,ராகுல் கோஷ்டி,சோனியா வீட்டு நாயை வெளியில் அழைத்துச் சென்று "குஷி" படுத்துவோர் கோஷ்டி நண்டு சிண்டு இளைஞர் காங்கிரசு(அப்படின்னு ஒண்ணு இருக்காமே) எல்லாம் கூவுங்கடா தமிழர்களுக்கு ஆதரவா..எலெக்சன் வருதுல்ல? அவன் தான் நீங்க என்ன கத்தினாலும் ஒரு முடி கூட _____ முடியதுன்னுட்டானே...அப்புறம் என்ன தயக்கம்...சூனியக்காரி கிட்ட இருந்து உத்தரவு வேணுமோ இதுக்கு கூட?

ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் நடத்தப்போவதை அறிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:
ஊட்டி இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி : நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிறிலங்கப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற சிறிலங்க அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன? மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், இராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை, எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா? இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்?தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் இராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?
சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய இராணுவம் பயிற்சியளிக்கிறதா? ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், இராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?
இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?
இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும். ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.
இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது.

India has agreed to help Sri Lankan army to build capacities

Submitted by Newsleaks on July 1, 2011
India has agreed to help the Sri Lankan Army in its capacity building by opening up more seats for its officers and men in its training academies and military colleges, apart from sharing experiences in counter-insurgency operations.
The agreements were arrived at during the first structured army-to-army talks that ended here Friday, an Indian Army officer said here.
Apart from deciding to enhance the scope and number of training courses for Sri Lankan officers and men, the Indian Army will also share its experience and organisational structure for humanitarian assistance and disaster relief.
For the talks, Sri Lanka had sent a five-member delegation led by its Military Secretary, Major General H.C.P. Goonetilleke. India was represented by the army’s Additional Director General for International Cooperation, Major General I.P. Singh.
The two sides will also send their military instructors to each other’s military academies. Sri Lankan, in particular, needed instructors in adventure sports and English language, which India agreed to provide, they said.
The Goonetilleke-led delegation also met Indian Army chief General V.K. Singh during the visit.
In the inaugural army-to-army staff talks, which began Wednesday, the two sides also shared their expertise in battle concepts and doctrines, particularly in tackling insurgency.
While Sri Lanka successfully ended its three-decade long civil war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) two years ago, India is battling insurgents in Jammu and Kashmir and the northeastern states.
The Sri Lankan delegation will return to Colombo Saturday.

வியாழன், 21 ஜூலை, 2011

சகிப்புத் தன்மை-கண்ணதாசானின் "கடைசி பக்கம்" நூலிலிருந்து..





சகிப்புத் தன்மை       

தற்கொலை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருக்கின்றன.  
துன்பங்களைத் தாங்க முடியாமல் இந்த முடிவுக்கு  வருகின்றவர்கள்   பலர்.

தற்கொலை பற்றி முடிவு செய்ய எவ்வளவு துணிச்சல் வேண்டும்?

அந்த துணிச்சலை மூலதனமாகக் கொண்டு வாழ்வதற்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது?

சகிப்புத் தன்மை என்பது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

"ஐயோ! என்னால் தாங்க முடியவில்லையே!" என்ற அலறல் ஒவ்வோர் உள்ளத்திலும் கேட்கிறது. சிரித்துக் கொண்டே அவற்றைச் சகித்து கொள்ளும் பழக்கம் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

காலையில் கண் விழித்ததிலிருந்து, இரவு   படுக்கைக்கு போகும் வரை துன்பங்களையே சந்திப்பவர்கள் உண்டு. இதில் சகிப்பு தன்மையை எப்படி வரவழைப்பது?

மனம் மரத்துப் போய் விட வேண்டும்; உணர்சிகளை கொன்றுவிட வேண்டும்; எந்த அடியையும் தாங்கும் உள்ளதைப் பெற்று விட வேண்டும்.

நாம் விரும்பி பிறக்காததுப் போலவே, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவையல்ல.

கோடானுகோடி மக்களுக்கு நடுவிலே- இல்லை கோடானுகோடி குணங்களுக்கு நடுவிலே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

'எல்லாம் நிறைந்ததுதான் உலகம்' என்று கண்டு கொண்டுவிட்டால் , சகிப்புத் தன்மை வந்து விடும்.

'ஒன்று நடந்தே தான் தீரும் என்றால், அதிலே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது' என்றான் மராட்டிய ஆசிரியன் காட்கரி.

இதைத்தான் 'விதி' என்று இந்து மதம் சொல்கிறது.

எனது தாயார் மரணப் படுக்கையில் இருந்த போது சென்னையின் மிகப்பெரிய லேடி டாக்டர் வந்து பார்த்தார். அப்போது மாலை மணி ஆறு.

என்னை அவர் தனியாகக் கூப்பிட்டு, " இரவு பன்னிரண்டு மணிக்கு உயிர் போய்விடும்", என்றார்.

அப்போது என் தாயார் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆறு மணி நேரம் நான் மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் நிலை எப்படி  இருந்திருக்கும்?

நடந்தே தீரப் போகிற ஒன்றுக்காக நாம் ஏன் அழ வேண்டும்?

ஏமாற்றம்; தோல்வி; நடுக்கம்; எரிச்சலூட்டும் சூழ்நிலை; இரக்கமற்ற மனிதர்கள்; இவற்றுக்கு நடுவே ஒரு மனிதன் வாழ முயற்சி செய்கிறான்; வாழ்ந்தே ஆக வேண்டும் என்று தீர்மானிக்கிறான்; வாழ்ந்து விடுவோம் என்று துணிகிறான்; அவனுக்கு சகிப்புத் தன்மை வந்து விடுகிறது.

பிறக்கும் போது வாழ்க்கைகென்று ஒரு நோக்கம் இல்லை; பிறந்த பிற்பாடு அமைகின்ற சூழ்நிலை ஒரு  நோக்கத்தை தோற்றுவித்து விடுகிறது. இதற்கு முக்கிய தேவை சகிப்புத் தன்மை.

 இப்பொழுதெல்லாம் சகிப்புத் தன்மையை வரவழைப்பதற்கு மாத்திரைகளே வந்து விட்டன.

ஒரே மாதிரி வாழ்வில் எரிச்சல் அடைந்து, மேல் நாட்டு மனிதர்கள் சீரழிந்த வாழ்கையை தொடங்கி விட்டார்கள். ஆனால், வாழ்க்கைக்கு அது வழியாகாது.

நிரந்தரமானது துன்பம்; வந்து போவது இன்பம் ; இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாகக்  கண்டு கொண்டு விட வேண்டும்.

தைரியத்திலும், நம்பிக்கையிலும் வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு ஏற்ப்பட்ட சித்ரவதைகள் கொஞ்சமல்ல.

இரக்க குணத்தாலேயே  அழிந்தவன் நான்.

சகித்துக் கொள்ளப்  பழகினேன்; இன்னும் பழகிக் கொண்டுதான் இருக்கிறேன்!

அழுவதால் பிரச்சனை தீரும் என்றால், நான் அழத் தயார். ஆனால், ஆறுதலுக்காக பல நேரங்களில் அழுவதுண்டு; முடிவில் ஒரு நம்பிக்கையை வரவழைத்துக் கொள்வேன்.

எவ்வளவு பெரிய தத்துவங்களைப் பேசுகிறவனுக்கும், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வருகின்றன.

அவநம்பிக்கையைக் குறைப்பது அல்லது போக்கடிப்பது சகிப்புத்தன்மையே .

சகிப்பு தன்மையின்   மூலம் அனுபவங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அளவு கடந்து துன்பங்களை அனுபவித்தவன் தன் வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி எழுதினால் உலகமே பயங்கரமாக காட்சி அளிக்கும்.

மேல் கிளையிலே நாகம்; கீழே வேங்கை; நடுக் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை.

கை வலிக்கும்; சகித்துக் கொள்ளுங்கள். நேரம் ஆக ஆக வேங்கை விடைபெற்றுக் கொள்ளும்.

சகிப்புத்தன்மையின் இறுதி மகிழ்ச்சிகரமான வெற்றியாக இருக்கும்.

காட்கரியின் பொன் மொழியை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

"ஒன்று நடந்துதான் தீரும் என்றால், அதில்  கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?"

கவிசக்ரவர்த்தி கண்ணதாசன்
கடைசி பக்கம் என்ற நூலிலிருந்து...................

புதன், 20 ஜூலை, 2011

கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ&குழுவினருக்கு நன்றி

ஆதாரம்:



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ குழுவினர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்துச்செய்துவிட்டு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.
இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனை ஏற்று 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
இதுகுறித்து மனோ கூறியிருப்பதாவது,
என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களைக் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரியவந்தது.
நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம்.
உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம்.
கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி. இவ்வாறு மனோ கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை பாடல்களில் சிறப்புமிக்க பாடலில்  ஒன்றான தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்  என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் என்ற படலை பாடியவர் மனோ ஆவர் .
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை
ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்.

இலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் – நாம் தமிழர்

அன்பார்ந்த தமிழ் வாக்காளர்களே!

வணக்கம்!


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச மயமாக்கப்பட்ட சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்தில முக்கியமானதாக உள்ளது. சனல் 4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்னும் ஆவணப்படம் மற்றும் ஏப்ரல் இரண்டாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்களினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கமானது பன்னாட்டு அங்கீகாரத்தை பல்வேறு வழிகளில் நாடி நிற்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.  திடீரென வடக்கில் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்களை உருவாக்கி அவற்றை வடக்கில் இருந்து வந்த சிங்களவர்களைக் கொண்டு நிறைவேற்றி வடக்கை சிங்கள மயமாக்கும் தனது மறைமுக வேலைத்திட்டத்தை அரசாங்கம் முனைப்புடன் நிறைவேற்றி வருகிறது.  மக்களாட்சிக் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு அரசாங்கமாக தன்னை பன்னாட்டு மட்டத்தில் காட்டிக் கொள்வதற்காக துப்பாக்கி முனையில் தேர்தல்களை நடாத்துவதோடு நிறைவேற்றபடப்படாத வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கி வருகின்றது.

எங்களின் தமிழ் சொந்தங்களின் சுயநிர்ணய உரிமைக் கனவுகளைக் கொடூரமாகச் சிதைத்ததோடு அது ஒரு கேள்விக்குறியாகவும் தற்போது விடப்பட்டுள்ளது.  தமிழர்களின் பாதுகாப்பு இந்த அரசுக்கு எப்போதுமே முன்னுரிமையான விடயமாக இருக்கவில்லை.  பன்னாட்டு அவதானிப்பாளர்களுக்கும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விட்டிருந்தது.  ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் இவர்களின் தமிழ் எதிர்ப்புப் போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம்.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலையில் சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதி செய்ய இயலும்?
2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 816,005 ஆக இருந்தது.  தற்போது அது 481,791 ஆக குறைக்கப்பட்டு உள்ளது  சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் 331,214 பெயர்களை பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது.  இந்த எண்ணிக்ளை மாற்றத்துக்கான எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை.
ஆயுதப் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சிங்கள மயமாக்குதல், படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்தல், தமிழ் பண்பாட்டை அவமதித்தல், சிங்கள மொழித் திணிப்பு, அடிப்படை மனிதத் தேவைகள் மறுக்கப்படுதல், பாதுகாப்பு வலயங்கள் தொடர்ச்சியாகப் பேணப்படுதல் போன்ற செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்கின்றது.  அங்கு வாழும் மக்கள் அமைதியையும் நீதியையும் சட்ட ஒழுங்குகளையும் மனிதாபிமானத்தையும் வேண்டி நிற்கின்றனர்.  இந்த அரசாங்கம் இவற்றில் எதையுமே செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இவர்களிடம் இதை எதிர்பார்ப்பதும் எமக்கு பயனுள்ளதாக இருக்கப்போவதில்லை.  இந்த அரசாங்கமானது எங்களை அடிமை நிலைக்கே இட்டுச் செல்கின்றது.  இந்த நேரத்தில் மக்களாகிய நாம் இந்த அரசாங்கத்தின் கபடத்தன்மையையும் சட்ட சீர்கேட்டையும் மனிதத்துக்கு எதிரான கொடூரத்தன்மையையும் எதிர்ப்பதற்கு ஒன்றிணைந்த சக்தியாக செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது.
முதலாவதாக போர்க் குற்றம் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்த சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்துக்கு அதற்குரிய பதிலை வழங்க வேண்டும்.  அப்படி ஒரு நாள் வரும் வரை சிங்கள அடிவருடிகளாகச் செயற்படும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நாம் முற்றாகக் புறக்கணி;க்க வேண்டும்.  தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.  ஒன்றிணைந்த சக்தியாக முழு மனதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் வாக்களிக்க வேண்டிய தருணம் இது.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம் என்பதை மனதில் நிறுத்தி நாம் வாக்களிப்போம்.

ஆடைகள் களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்; கிளிநொச்சியில் மாவை ஆவேசம்
நன்றி: தமிழ்த்தாய்.காம்http://www.tamilthai.com/

செவ்வாய், 19 ஜூலை, 2011

இனி நீங்கள் எதையும், எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்-Free Studio-இலவச மென்பொருள்

DVDVideosoft வழங்கும் Free Studio மென்பொருள் கொண்டு 43 பயன்பாடுகளை நீங்கள் பெறலாம்.

 Available languages:
English (US) English (UK) German French Italian Spanish Portuguese Dutch Chinese Japanese Korean Polish Russian

Supported OS:
Windows XP/Vista/7

Description

New Free Studio Manager is a completely redesigned all-in-one package for our programs. It contains 8 sections to bundle all free multimedia applications which have been developed by DVDVideoSoft. These sections the following: YouTube, MP3&Audio, CD-DVD-BD, DVD&Video, Photo&Images, Mobiles, Apple Devices, 3D. Thus all the programs are included in the new interface for easy access to any of them.
With this free software you can convert video and audio files between different formats and to iPod, PSP, iPhone, BlackBerry and all popular mobile phones and devices; burn and rip DVDs and audio CDs; upload and download YouTube videos and music to your computer, iPod, PSP, iPhone and BlackBerry; perform basic editing of audio and video files as well as record videos and make snapshots.
Free Studio contains no spyware or adware. It's clearly free and absolutely safe to install and run.