திங்கள், 18 ஜூலை, 2011

ஹிலாரி-ஜெயலலிதா சந்திப்பின்போது இலங்கை பிரச்சனை கட்டாயம் பங்குபெறும்-முன்னால் அமெரிக்க தூதர்

"ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜெயலலிதாவுடனான சந்திப்பின்போது இலங்கை பிரச்சினை கட்டாயம் இடம்பெறும்" என 2006-09 வரை இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்தவரும், ஒபாமாவின் அரசில் தெற்கு ஆசியாவிற்கான உதவி செயலாளருமான, ஹிலாரியின் தமிழக பயணத்தில் முக்கிய இடம்பெருபவருமான திரு.ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

"தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்கள் இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து ஆழ்ந்த கவலையில் உள்ளனர்,எனவே இலங்கை பிரச்சினை இருவரின் சந்திப்பின் போது கட்டாயம் இடம்பெறும்"  என rediff.comகிற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கான இந்திய தூதர்கள்-தில்லியின் தலையாட்டி பொம்மைகள் "வெளியுறவு கொள்கைகள் குறிப்பாக இலங்கை பிரச்சனை,பேச்சுவார்த்தையின் பொது இடம்பெறாது" என தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

இலங்கை போர்க் குற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் தலைமையிலான விசாரணைக்கு இலங்கை அனுமதிக்க வேண்டும் என்ற இலங்கையின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழக முதல்வர் இலங்கை மீதான விசாரணையை துரிதப் படுத்தி,பொருளாதார தடை கொண்டுவரவும் ஆவண செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக