திங்கள், 25 ஜூன், 2012

கவிதை: விண்மீன்கள்


உன்னை எண்ணி
நான்
தொலைத்த
இரவுகளின் எண்ணிக்கை..!!!

சனி, 23 ஜூன், 2012

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்...

"தட்சிணாமூர்த்தியின் தமிழின துரோக பட்டியல்"
-ஐயா பழ.நெடுமாறன் உரை 


சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கு
ம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும்
காரணம் என்று முதல்வர்
கருணாநிதி கடந்த சில அறிக்கையில்
தொடர்ந்து கூறி வருகிறார்.
இத்தனை நாளும் இதற்கு பதில்
தராமலிருந்த, ஈழத் தமிழ்
ஆதரவாளர்கள், இப்போது ஈழப்
போராளிகள் விஷயத்தில்
கருணாநிதி எப்படி நடந்துகொண்டார்
என்பதை மேடைகளில்
வெளியிட்டு வருகிறார்கள்.
ஈழப்
போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம்
காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான்
என்றும், தன்னை விட
பிரபாகரனையே ஈழத் தமிழர்கள்
மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும்
செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ
நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம்
சாட்டியுள்ளார்.சமீபத்தில்
சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த
கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள்
வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன்
இப்படிப் பேசினார்:
“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச்
செய்த துரோகங்கள்
குறித்து இதுவரை நான் பேசாத பல
விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.1985-
ம் ஆண்டு கருணாநிதியின்
பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச
ரூபாய்
பணத்தை போராளி இயக்கங்களுக்குப்
பங்கு போட்டுக் கொடுப்பதாக
கருணாநிதி அறிவித்தார். இந்தப்
பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம்
தேடிக் கொள்வார் என்பதால் புலிகள்
பணம் வாங்கச் செல்லவில்லை.
உடனே எரிச்சலடைந்த கருணாநிதி,
“என் பணத்தை அவர்கள் வாங்க
மாட்டார்கள். நான் பார்த்துக்
கொள்கிறேன்” எனக் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில்தான் எந்த
விளம்பரமும் இல்லாமல்
கோடிக்கணக்கான
ரூபாய்களை எம்.ஜி.ஆர்
புலிகளுக்கு வாரிக் கொடுத்துக்
கொண்டிருந்தார். தன் சொந்தப்
பணத்தையே அள்ளிக் கொடுத்தார்
அவர்.இருந்தாலும் புலிகளில் சில
தம்பிகளுக்கு கருணாநிதி மேல்
நம்பிக்கை இருந்ததால் அவரைச்
சந்தித்து பணம் கேட்கலாம்
என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர்.
சரி, அவரைப்
பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய்
கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன
ஏற்பாட்டின்படி, 26.1.85
அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.
அவரிடம் டஎங்களுக்குப்
பத்து கோடி ரூபாய் வேண்டும்’
என்று கேட்டுள்ளனர்.
அவர்களை அனுப்பிவிட்டு என்னைத்
தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன
இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’
என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர்
புலிகள் அமைப்பினரைச்
சந்திக்கும்போது
‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித்
தெரியவேண்டும் என்பதற்காகத்தான்
அவரிடம் அனுப்பினேன்’
என்று கூறினேன்.
5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம்
சென்னை கடற்கரையில் நடந்தது.
கடற்கரை மணலில்
யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள்.
அந்தப் பழியை தி.மு.க
தலைமை புலிகள் மீது போட்டது. நான்
பாலசிங்கத்தையும்,பேபியையும்
அனுப்பி உண்மையைச் சொல்ல
வைத்தேன்.
பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’
அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.
மீண்டும் கருணாநிதியை நாங்கள்
சந்தித்தபோது, ‘பிரபாகரன்
என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா?
மக்களா? என்றால் இரண்டும்
ஒன்றுதான். அந்த மக்கள்
பிரபாகரனைத்தான் தலைவனாக
நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான்
எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.
இந்தியா,-இலங்கை ஒப்பந்தம்
கையெழுத்தான சமயத்தில் தமிழர்
விடுதலை முன்னணியின்
அமிர்தலிங்கம்
உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார்.
நான் இதுகுறித்து அவரிடம்
கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின்
நெருக்குதலில்தான் நான் இந்த
அறிக்கையைக் கொடுத்தேன்.
அப்போது ‘என் அறிக்கையைக்
கண்டித்து கருணாநிதி பதில்
அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’
என்று உளவுத் துறையினரிடம்
கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம்
அறிக்கை கொடுக்க மாட்டார்’
என்று உளவுப்பிரிவினர் என்னிடம்
சொன்னார்கள். அவர்கள்
சொன்னபடியேதான் கருணாநிதியும்
நடந்து கொண்டார்’ என்று என்னிடம்
குறிப்பிட்டார்.
அதற்கு பின்
கருணாநிதியை அமிர்தலிங்கம்
சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல்
(பிரபாகரன்) அவன். இரண்டே நாளில்
இந்திய ராணுவம்
அவனது கொட்டத்தை அடக்கும்’
என்று சொல்லியிருக்கிறார்.
இது உண்மையா? இல்லையா?
இதை கருணாநிதி மறுப்பாரா?
1987-ம் ஆண்டு ஜூலை மாதம்
போடப்பட்ட ராஜீவ்-
ஜெயவர்த்தனா ஒப்பந்தம்
பற்றி ஒரு வார்த்தை கூட
இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை.
உடன்பாட்டைத்
தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர்
உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக்
கண்டித்து அனைத்துக்
கட்சித்தலைவர்களும்
அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆனால் நியூயார்க்
மருத்துவமனையில், உடல் நலம்
குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர்.
அறிக்கை வெளியிட்டார். நாங்கள்
நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர்
பொன்னையனையே அனுப்பி வைத்தார்.
ஆனால்
கருணாநிதி வாயே திறக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசம்,
கருணாநிதி செய்த இன்னொரு செயல்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது,
அதாவது 1973-ம் வருடம்
தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின்
குச்சிகளை எடுத்துச்
செல்லும்போது குட்டிமணியை போலீஸார்
பிடித்தார்கள். அவரை சிங்களப்
படையிடம் கருணாநிதிதான்
ஒப்படைத்தார்.
குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்
என்று உணர்ந்து 1983-ம்
ஆண்டு சட்டசபையில் தீர்மானம்
கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க்
கட்சித் தலைவராக இருந்த
கருணாநிதி ஒப்புக்கொண்டார்.
அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர்.
மகிழ்ச்சியடைந்த நாங்கள்
இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச்
சந்தித்தபோது அவர்,
‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித்
தெரியாது. அவர் இந்த விவகாரம்
பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக்
கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த
ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.
அந்தத் தாள்களில்
குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய
இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ்,
டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில்,
‘ஒப்படைக்கிறேன்’ என
கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த
கடிதம் என அனைத்து ஆதாரங்களும்
இருந்தன. சொன்னபடியே சட்டசபையில்
எம்.ஜி.ஆர்.அந்த
ஆதாரங்களை முழுமையாக வாசித்தார்.
இது சட்டமன்றக் கோப்புகளிலும்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய
கண்களை பார்வையில்லாத
ஒரு தமிழனுக்குக் கொடுங்கள்.
மலரப்போகும் தமிழீழத்தை அந்தக்
கண்களின் வழியாக நான் பார்க்க
விரும்புகிறேன்’,
இலங்கை வெளிக்கடைச் சிறையில்
கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன்
குட்டிமணி மரணத்தின் வாயிலில்
நின்று உகுத்த வார்த்தைகள் இவை.
இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள
ராணுவம் குட்டிமணியின் கண்களைத்
தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய
வரலாறை உலகமெங்கும்
வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள்
மறந்து விடவில்லை. ராஜீவ்
காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த
தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில்
இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான்
பெயர்களை நீக்குவதாக
அறிவித்துள்ளது. ஆனால்
அவர்களது மரணச் சான்றிதழ்கள்
இன்னமும் இலங்கை அரசால்
வழங்கப்படவில்லை.
இதற்காக பலமுறை இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரிகள்
இலங்கைக்குப் படையெடுத்தும்
பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள
இந்திய துணைத் தூதர் மற்றும்
இலங்கை அரசு கொடுத்துள்ள
தகவல்களின் அடிப்படையில் இவர்கள்
பெயர்களை வழக்கில் இருந்து நீக்க
வேண்டும்’ என்ற சி.பி.ஐ.
தலைமை விசாரணை அதிகாரியின்
அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டுஅம்மான் பெயர்கள்
நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.
வைகோ பேசுகையில்,
“என்னை வெளிநாடுகளில் பேச
அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள்.
ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த
வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…”
என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின்
துரோகங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியில் “நிறைவாக இருக்கும்
வரை மறைவாக இரு’ என
காசி ஆனந்தனின் வரிகள்,
பிரபாகரனுக்கும் பொருந்தும்!”
என்று அவர் தனது பேச்சை முடித்த
போது கூட்டம் மிகுந்த
உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

சனி, 9 ஜூன், 2012

இந்தி எதிர்ப்பை நக்கல் செய்யும் இந்தியத்தை எதிர்ப்போம்!!!

ஆளும் வர்க்கம் கோவணம் கட்டினால் அதையே நாகரீக உடை எனக் கூறி அங்ஙனமே திரியக்கூடிய பரந்த பணப்பாங்கு கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அவர்களே காங்கிரசில் இருந்தால்? காங்கிரசுக்காரன் வார்டு உறுப்பினராக பரிந்துரை செய்கிறேன் என சொன்னால் அவன் கால் அழுக்கை கூட நக்கி சுத்தப் படுத்த தயங்காத தியாக உள்ளம கொண்டவர்களாக இருப்பர். அந்த பிறப்பில் வந்த ராஜாஜியின் கலப்பினத்தில் பிறந்த எவனோ ஒருவன் இந்தி எதிர்ப்பை நக்கல் செய்து பாடப்புத்தகத்தில் சித்திரம் தீட்டி உள்ளான். 

இதுவரை இந்திய சுதந்திரம் என்பது இந்திக்கார்களால் போராடி வாங்கப்பட்டதாக குழந்தைகளை மூளைச்சலவை செய்த நாகரீக கோமாளிகள் இப்பொழுது தாய் மொழிக்காக உயிர்நீத்த ஈகிகளை நையாண்டி செய்ய துணிந்து உள்ளனர். 

இந்தி தெரிந்தால் அரசாங்க வேலை கிட்டும் என்ற மாயையை உருவாக்கி அதை குழந்தைகளின் மனதில் நஞ்சாய் கலந்து அப்பாவி மக்கள் மீது தங்கள் மொழியை சிறிது சிறிதாக திணிக்கும் திட்டம் தான் சுதந்திர இந்தியாவின் மொழிக்கொள்கையாக உள்ளது பரந்துபட்ட அனைவருக்கும் தெரியும். 

வசம்பு வைத்து தேய்த்தாலும் தங்கள் நாவில் ஆங்கிலம் தவழாது என்பதை உணர்ந்த முட்டாள் பீகாரிகளாலும், உ.பி.காரன்களாலும் இந்தியை அரசு மொழியாக்கினால் தங்களுக்கு புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளவேண்டிய பிரச்சனை ஒழியும் எனக்கருதி தங்கள் மொழியை  பரந்து விரிந்த இந்தியாவின் பழமையான மொழிகள் பேசும் மக்கள் மீதும் திணிக்க நினைப்பது களவாணித்தனம் அல்லவா?

தனக்கு தேவை என்றால் தமிழன் எந்த மொழியையும் கற்க தயங்க மாட்டான் என்பது உலகில் தமிழன் கால் பாதிக்காத நாடே இல்லை என்பதில் இருந்து அறிந்து கொள்ளலாம். அப்படிப் பட்ட தமிழன் தேவரடியாளுக்கு பிறந்த (தனக்கென்று சொந்த வார்த்தைகள் இல்லாது பல மொழி வார்த்தைகளை திருடி கொழுத்ததால் இப்படி இந்தி மொழியை அழைப்பது நியாயம் என மொழி வல்லுனர்கள் ஒத்துக் கொள்வார்கள்)இந்தி படித்தே ஆக வேண்டும் என தன் மொழியை திணிப்பது எந்த வகையில் நியாயம்?

மொழிக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ஈகிகளை ஆங்கிலம் பேச தெரியாத குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இந்திக்கார நாய்கள் கிண்டல் செய்யும்போது நாம் பார்த்துக் கொண்டு இருப்பது நியாயமா?

12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள இந்த கேலிச் சித்திரத்தை உடனே நீக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. திமுக தலைவர் கூட தன்னால் முடிந்த 'வேண்டுகோள்" விடுத்துள்ளார்.

கேலிச்சித்திரத்தை நீக்க கோரி ஜூன் -11 அன்று மதிமுக சார்பில் நடக்கும் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு நம் உணர்வுகளை பதிவு செய்து காங்கிரசின் - இந்திய நடுவத்தின் தொடரும் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேலிச்சித்திரம்-சூன் 11-இல் மதிமுக போராட்டம்.

சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் புத்தகங்களில் வெளியாகியுள்ள கேலிச் சித்திரத்தைக் கண்டித்து மதிமுக சார்பில் ஜூன் 11ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் அறிஞர்களும், இலட்சக்கணக்கான மாணவர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழக வரலாற்றின் வீரம் செறிந்த அத்தியாயம் ஆகும். ஆனால், மத்திய அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், இந்த வரலாறைத் திரித்துக் கூறி, தமிழர் மனங்களைக் காயப்படுத்தும் விதத்தில் கருத்துப்படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இதில், இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, ஆங்கிலமும் தெரியாது என்றும், ஆனால், ஆங்கிலம் வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்ததாகவும், அன்றைய மாணவர்களை இழிவுபடுத்துகிறது.
1965 இல் இந்தி எதிர்ப்பு மொழிப்புரட்சி எரிமலையாக வெடித்தபோது, அதில் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கு ஏற்றனர். அப்போது, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலப் புலமையும் உண்டு. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு விடுவோம்; எனவே, தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டும். அதுவரை, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தே போராட்டம் நடைபெற்றது.
ராஜாஜி
இந்தக் கருத்துப் படத்தில், அன்றைய தமிழக முதல் அமைச்சர் பக்தவத்சலம் படமும் இடம் பெற்று இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்கு, கொடிய அடக்குமுறையை அவர் ஏவினார் என்பதுதான் உண்மை ஆகும். 37 இல் இந்தியைத் திணித்த இராஜாஜி, அறுபதுகளில், இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.
தீக்குளிப்பு
37 போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராஜனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தாளமுத்துவும், இப்போராட்டக் களத்தில் சிறையிலேயே மாண்டனர். 64 இல் சிங்கத்தமிழன் சின்னச்சாமி, திருச்சி ரயிலடியில் இந்தியை எதிர்த்து முழங்கி, தீக்குளித்து மடிந்தார்.
1964 இல், அறிஞர் அண்ணாவின் ஆணைக்கு ஏற்ப அவரது இயக்கம், அரசியல் சட்டத்துக்குத் தீயிட்டுக் களம் கண்டது. 1965 இல், அறப்போருக்கு அறிஞர் அண்ணா அறைகூவல் விடுத்தார். சிவலிங்கம், அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகியோர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்தனர்.
1965 மாணவர் போராட்டத்தை ஒடுக்க, இந்திய இராணுவம் எண்ணற்ற தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. தமிழகம் அதுவரை வரலாறு காணாத போராட்டம், பூகம்பமாய் வெடித்தது. இதன் விளைவாகவே, 1967 இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று, முதல்வராக அறிஞர் அண்ணா, ஒருமனதாக சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினார். இந்தத் தியாக வரலாறை இழிவுபடுத்தும் நோக்கத்தில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் கேலிச்சித்திரத்தை பாடபுத்தகத்தில் அச்சிட்டு உள்ளது. மத்திய அரசு பாடத்திட்டத்தை ஏற்றுள்ள பள்ளிகளில் மட்டும் அல்லாது, இந்தியாவில் 13 மாநிலங்களில் இந்த பாடத்திட்டமே ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
எனவே, வரலாற்று உண்மையை மூடி மறைத்து, தமிழர்களையும் குறிப்பாக தமிழக மாணவர்களையும் ஏளனமாக இழிவு செய்யும் வகையில் கேலிச்சித்திரத்தை இடம் பெறச் செய்ததைக் கண்டிக்கின்ற வகையிலும், மத்திய அரசும், பயிற்சிக் கழகமும் உடனடியாக அந்தக் கேலிச்சித்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும்,
ஜூன் 11 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் வடசென்னை துறைமுகத்துக்கு எதிரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் எனது தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.அறப்போர் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.