திங்கள், 25 நவம்பர், 2013

Attention Advocates:Can PIL be filed against Govt on portrayal of soniya's picture?

Attention Advocates:

Soniya is not holding any position in the govt.
She is just a leader of ruling party. Disregrding the fact, the present govt portrays soniya's photoes in the premises of newly inaugurated Indian women's bank, hoardings of National Highway Authority of India....

Can this voolation be stopped by filing Public Interest Litigation?

ஞாயிறு, 3 நவம்பர், 2013

திரைப்படங்களுக்கு வரி விலக்கு முறை-சீர்திருத்தம் தேவை


தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்கிற தற்போதைய சட்டத்தை மாற்றி பிற  மொழி கலந்து பெயர் வைத்தால் இரட்டை வரி, பிற மொழியில் வைத்தால் மும்மடங்கு வரி என மாற்றப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் என்கிற பெயரில் இவர்கள் செய்யும் மொழிக்கொலை குறையும். 

வணிகரீதியில் படம் எடுத்து கோடிக்கணக்கில் கருப்பு பணம் சேர்க்கும் இவர்களுக்கு எதற்கு வரி விலக்கு?


வியாழன், 15 ஆகஸ்ட், 2013

வைரஸ் தாக்கிய "பென்டிரைவ்"இல் இருந்து கோப்புகளை மீட்க...


முகநூல் செய்தி..முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்...

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —


how to retrieve files from virus infected pendrive

காவல்துறைக்கே முதல் மரியாதை-ஏன்?

தமிழனிற்கு ஒன்றுக்கும் உதவாத விடுதலை நாள் கொடி ஏற்றத்தின்போது கூட காவல்துறை இயக்குனர் அவர்களே, காவல்துறையினரே என்று அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு தான் தன்னை வாழ வைக்கும் இதய தெய்வங்களை கூட நினைவு கூறுகிறார். காவல்துறையில் வேலை பார்க்கும் கடைக்கோடி ஊழியர் இறந்தால் கூட பணமுடிப்பு அளித்து அரசாணையில் வெளியிட்டு அதை சிறப்பு செய்தியாக ஒவ்வொரு ஞாயிறும் ஜெயா தொ.கா.வில் இரங்கல் செய்தியும் வெளியிடுகிறார்கள்.

அப்படி என்ன சிறப்பாக ஊழியம் செய்கிறார்கள் காவல் துறை தோழர்கள் மற்ற துறையினரை விட? வாரத்திற்கு இரண்டு நாட்களாவது வேலை செய்யும் ஆசிரியர்கள் இவர் கண்ணுக்கு புலப்படவில்லையா? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ஐநூறு என கையூட்டு வாங்கினாலும் ஏதோ வேலை செய்யும் உணவு பொருள் வழங்கு துறை, வருவாய் துறை ஊழியர்கள்,தமிழகத்தின் நிதிச் சுமையை ஒற்றை ஆளாக சுமக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் இவர்களை விட அப்படி என்ன பெரிதாக கிழிக்கிறார்கள் காவலர்கள்?

கற்பழிப்பு கொலை கொள்ளை என நாட்டில் குற்றங்கள் குறைய வேலை செய்தததாகவும் தெரியவில்லை. மாறாக தேக்கு மரத்திட்டம்,ஈமு கோழி, இணைய வேலை வைப்பகம் என நூதன கொள்ளைகளில் கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் கும்பல், ஆள் கடத்தலில் ஈடுபடும் ஓவர்நைட் ஒபமாக்கள் எண்ணிக்கை தான் பெருகி உள்ளன. 

எங்கோ கடைக்கோடியில் இருக்கும் படிக்காத பாமரன் கூட  புதிதாக நூதன கொள்ளையில் ஈடுபடும் குழுமத்தை கண்டுபிடித்து தனது மொத்த சேமிப்பையும் அடகு வைத்து ஏமாந்து போகிறான். அவனுக்கே தெரிகின்ற போது, நாடு முழுவதும் விரிந்து பரவி உள்ள,புலனாய்வு அமைப்புகள்,சிறப்பு குற்றப் பிரிவு,பொருளாதார குற்றப் பிரிவு,மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கொண்ட இவர்களால் அப்படி நூதன கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை ஏன் ஆரம்பத்திலேயே கண்டு "பிடிக்க" முடியாமல் போகிறது?

முகநூலில் மீனவனை நக்கல் செய்த சின்மயிக்கு எதிராக பின்னூட்டம் போடுபவர்களையும், திராவிட அரசை விமர்சிப்பவர்களையும் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்த அரசு,பட்டவர்த்தமாக விளம்பரம் செய்து  நகரின் நடுவில் பிரமாண்டமாய் அலுவலகம் வைத்து வெளிப்படையாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் இவர்களை பிடிக்க என்ன செய்தது? இப்பொழுது தான் சிறப்பு பிரிவு ஆரம்பித்து உள்ளார்கள்?அப்படி என்றால் இதற்கு முன்பு இருந்த பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்?இறந்த போன உடலிற்கு உடற்கூறு பரிசோதனை செய்ததை தவிர?

சர்வாதிகாரி தான் காவல் துறைக்கு முக்கியத்துவம் தருவார்கள். அப்படி என்றால் தமிழகத்தில் நடப்பது?

சனி, 15 ஜூன், 2013

இனமானத் தந்தை ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!

தமிழின விரோதிகள் 70,90 அகவைகளை கடந்தும் இருக்கையில் ஐயா மணிவண்ணன் அவர்களின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பு...

அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் !!!


உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அறியாத பாமரன்.
பயமொன்றை அறியாது உள்ளத்தில் உள்ளதை பகிரங்கமாக அறிவிப்பதில் இவர் ஒரு கரும்புலி...

பொதுவுடைமை சிந்தனைவாதி...
 
புலித்தோல் போர்த்திய வேங்கை
 

 வீரவணக்கம்...!!!
இழப்பதற்கு எதுவும் இல்லை என்றீர்..
உங்களையே இழந்து தவிக்கும் எங்களுக்கு இனி என்ன இருக்கிறது இழப்பதற்கு?!!!

உன்னதக் கலைஞனை அறிமுகம் செய்ததற்காக பெருமைப்படாது பாரதிராஜா என்கிற பொறம்போக்கு
தூற்றிய போதும் நன்றி மறவாது கண்ணீர் சிந்தும் உன் மனிதம்
இங்கு எத்தனை பேருக்கு உண்டு?

ஐயா மணிவண்ணனின் அமைதிப்படை -2 பார்க்க திரைஅரங்கு சென்றேன்.ஒரு வாரத்திற்க்குள்ளே படத்தை எடுத்து விட்டார்கள். நேற்று தான் பார்த்தேன். நிறைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அந்த படம் வெற்றி பெற்று இருந்தால் கூட அந்த மகிழ்ச்சியில் நீண்ட வருடம் நம்முடம் இருந்திருப்பார்...உண்மையில் அவர் இழப்பு நெஞ்சை பிழிகிறது.

ஞாயிறு, 26 மே, 2013

அம்மாவின் பெருந்தன்மை


  • தேர்தல் நேரத்தின் போது தேசியத் தலைவரின் படத்தை காட்டி பிச்சை கேட்டுவிட்டு இப்போது நன்றி கெட்ட தனமாக தடை செய்துவிட்டார் எனக்கூறும் தமிழின ஆதரவாளர்களே
  • 3200 தமிழ் வழிப் பள்ளிகளில் ஆங்கிலத்தை புகுத்தும், கலை அறிவியல் கல்லூரித் தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று மாற்றிய கன்னடத் தாய் எனத் தூற்றும் தமிழ் மொழிப் பற்றாளர்களே
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற நினைத்த தாயுள்ளத்தை தமிழக நிதியை விரயமாக்கும் தற்குறி எனக் குறை கூறிய நடுநிலையாளர்களே
  • வீரப்பனை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு சுட்டுப் பிடித்தோம் என மார்தட்டும் தமிழக காவல்துறையினரால் விழுப்புரம் திருக்கோவிலூரில் 4 இருளர் இனப் பெண்கள் வன்புணர்ச்சி செய்த பொது 5லட்சம் நிவாரண நிதி வழங்கிய பெண்ணுள்ளத்தை தூற்றிய பெண்ணியவாதிகளே
  • தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர் வாடிவிடும் என்பதால் விவசாயம் செய்ய வேண்டாம் என வாடிய பயிரை பார்த்த போதெல்லாம் வாடிய காவிரித் தாயை தூற்றிய டெல்டா விவசாயிகளே...
உங்களுக்கெல்லாம் அவர் எப்படிப் பட்ட பெருந்தன்மை உள்ளவர் என்பதற்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். மறுக்க முடியுமா எனப் பாருங்கள்....

"அம்மா அதிகாரம் இனி செல்லாது" என்கிற விளம்பரத்தை தடை செய்யாத இந்த பெருந்தண்மை உளத்தை எப்போது தான் நீங்கள் புரிந்து கொள்ளப் போகிறீர்களோ...

ஆங்கிலவழிக் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்-28.5.2013


தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக 
மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
==========================================

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, வரும் 28.05.2013 செவ்வாய் அன்று காலை 10 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முன், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல், சமூகவியல் ஆகிய பாடங்கள் இனி ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்விமானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்ல, பெற்றோர்கள் விரும்பினால் எல்லாப்பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்குவோம் என்று அறிவித்தார்.

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம். அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இப்போது பெரும்பாலும் வரலாறு, பொருளியல், கணக்கு, வணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர, இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்வி இயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை, கற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கிராமப்புற மாணவர்கள், அட்டவணை வகுப்பு மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்கு ஆளாவார்கள். இவர்கள் நகர்ப்புற, மற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மனப்பாதிப்பு அடைவார்கள். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

எனவே தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் திணிப்பதைக் கைவிட வேண்டும்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல், ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு, ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் முடிவை எதிர்த்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் பின் வரும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது .

1. 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2. அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள், விளையாட்டுத் திடல் போன்றவை வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3. மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில் தொடங்கினால், கிராமப்புற, அட்டவணை வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும் என்றும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

28.05.2013 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சைதை சிவா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கச் செயலர் தோழர் தியாகு, தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய இயக்கத் தோழர் செ.ப.முத்தமிழ் மணி, தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப.வேலுமணி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், கவிஞர் இன்குலாப், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் த.சுந்தரராசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் பா.கல்விமணி, உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் பா.இறையெழிலன், சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கசேந்திர பாபு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பாளர் திரு. சீ.தினேசு, தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ் மீட்புக் கூட்டமைப்பு திரு. அ.சி.சின்னப்பத்தமிழர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்ற அமைப்பாளர் கவிஞர் செவ்வியன், எண்ணம் அறக்கட்டளை திரு. கா.தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இப்போராட்த்தில், தமிழ் மீதும் கல்வி மீதும் அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமென தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

=============================================
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
==========================
9840848594

திங்கள், 29 ஏப்ரல், 2013

தமிழிசை சௌந்திரராஜன்-நீ ஒரு தமிழச்சியா?

"தமிழர் நலனில் அக்கறை கொள்ளும் கட்சியாக பாஜக விளங்குகிறது -தமிழிசை சௌந்திரராஜன்"

  • இந்தி மொழி வெறி கொண்டு மாநில மொழிகளை அழிக்கும் வேலையை முழுமூச்சாகக் கொண்டுத் திரியும் உனது காவிக் கட்சி 
  • ராஜபக்ஷவுடன் சுஷ்மா ஸ்வராஜை அனுப்பி வைத்துக் கூடிக் குலாவி மத்தியப் பிரதேசத்திற்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்ற உனது கட்சி 
  • கபிணி,ஹேமாவதியில் முழுக் கொள்ளளவு இருந்தும் தமிழகத்திற்கு சம்பா சாகுபடியை காப்பாற்ற தண்ணீர் கேட்டு போராடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என உச்ச நீதி மன்ற அறிவுரையை குப்பையில் போட்ட அராஜக கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு
உனக்கு தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சியா? தேசியச் செயலர் பதவியை உனக்கு பிச்சை போட்டார்கள் என்பதற்காக ஆடுடா ராமா ஆடு என அவர்கள் ஆட்டுவிப்பதற்கு தகுந்தாற்போல் நீ வேண்டுமானால் ஆடு..ஏன் என்றால் அது இனக் குருதியை வெளியேற்றி தேசிய சனநாயகம் என்கிற சாக்கடையை உடலில் ஏற்றிக் கொண்ட குலத்தில் பிறந்த காரணத்தால் அதை நாங்கள் கருத்தில் கொள்ளாமல் விடுகிறோம். ஆனால் அதற்காக எம் இன மக்களை நீ முட்டாளாக்கும் இது போன்ற பொய் பித்தலாட்ட அறிக்கைகளை வெளியிட்டு உனது தரத்தை நீயே தாழ்த்திக் கொள்ளாதே!!!

உண்மையிலேயே உனது கட்சி தமிழர் மீது அக்கறை கொண்ட கட்சி என்றால் இதோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 24 அடிக்கு குறைந்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய 2.5+2.5 டி.எம்.சி நீரை திறந்து விட சொல்...முழுதாக ஐந்து டி.எம்.சி கூட வேண்டாம்..அதில் பாதியை பெற்றுத் தா...பார்க்கலாம்...உனக்கு பதிலாக நாங்கள் குட்டிக்கரணம் அடிக்கிறோம்...


Dr.Thamilisai soundhirarajan National secretary BJP 

ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈனப்பிறவி இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதிலடி கொடுப்போம்


தனது குடும்பத்தை வாழ்விக்க,இத்தாலிய வெறிநாயின் காலை நக்கி பிழைக்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தந்தி தொ.கா எடுத்த பேட்டியில் எம் தலைவனை சிறுவர்களை போரில் ஈடுபடுத்தினார் எனக் கூறினான்.

"எந்த தாய் தன் மகனை போருக்கு போய் வா"என அனுப்புவாள் எனக் கேட்டான். ஒரு தமிழனை பெற்ற அன்னை அனுப்புவாளடா. உன்னை மாதிரி தறுதலையை பெற்ற அன்னை தான் நக்கி பிழைத்த குடும்பத்தை கரையேற்று என அனுப்புவாள்

600மீனவர்கள் கொல்லபட்டார்களே,என்ன பதில் எனக்கேட்டால்..இறந்தவர்கள் இறந்தவர்களே..அதை பற்றி பேசி என்ன ஆகப் போகிறது?அது தான் நட்ட ஈடு கொடுத்திருப்பார்களே என நக்கலாக சிரிக்கிறான்.

இதே பதில் ராஜீவ் கொலைக்கும் பொருந்துமா எனக் கேட்டால் அவரும் இவர்களும் ஒன்றா என்கிறான். தன்னை வருத்தி உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் மீனவரை விட,ஊரை கொள்ளை அடித்து உலையில் போடும் நீங்கள் எந்த விதத்தில் பெரியவர்கள்?

(e.v.k.s.elangovan)

புதன், 27 மார்ச், 2013

மாணவர்களை தாக்கிய காங்கிரசு போக்கிலிகளை கைது செய்!!!

ஒரு மாத  காலமாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மீது வன்முறையை திணித்துள்ளது களவாணி காங்கிரசு. உருட்டுக்கட்டைகளும் செங்கல்லையும் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இனத்தை அழிக்கும் கோடரிக் காம்பு ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரசு போக்கிலிகள்.  

ஒரு "கட்டிங்" வாங்கிக் கொடுத்தால் கூட்டிகொடுக்க கூட தயங்காத இந்த ஊழல் பேர்வழிகள் இத்தனை காலம் தம் இனமக்கள் கொன்றொழிக்கப்பட்டதை கண்டு ஆற்றாது வீறுகொண்டு சீரும்  அரிமாக்கள் மீது,இனம் காக்க எழுந்த புலிக்குட்டிகள் மீது வன்முறையை திணிக்க பார்க்கிறார்கள்.

தஞ்சைக்கு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள் என காணொளியை வைத்து தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை உடனே கைது செய்த சீர்மிகு தமிழக காவல் துறை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒரு காங்கிரசு கைக்கூலிகளை கூட ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

மாணவர்களை தாக்கிய பொறுக்கிகளை 24மணி நேரத்திற்குள் கைது செய்து  , பொய்யாக புனையப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களான வெங்கடேஷ் மற்றும் சதாசிவம் இருவரையும் உடனே விடுதலை செய்யாவிட்டால் காங்கிரசுக் கட்சி அலுவலகம் ஒன்று கூட தமிழகத்தில் இருக்காது என்ற மாணவர்களின் சீற்றம் கை மீறிச் செல்லும். அதற்கு பக்க தூணாக தோழர்கள் அனைவரும் திரள்வோம் என எச்சரிக்கை விடுப்போம்.



காங்கிரசு கைக்கூலிகளை கைது செய்யக் கூறி த.தே.பொ.கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விடுத்த அறிக்கை:



===================================================
திருச்சியில் மாணவரைத் தாக்கியக் காங்கிரசாரைக் கைது செய்க!
===================================================
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
===================================================

திருச்சியில் காங்கிரசுத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களுக்கு ஈழப்பிரச்சினை தொடர்பாகக் கருப்புக் கொடி காட்டச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களைக் காங்கிரசார் கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். முகமது ஜிப்ரி, கஜேந்திரபாபு, சத்தியகுமார் ஆகிய மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முகமது ஜிப்ரிக்குக் கால் எலும்பு முறிந்துள்ளது.

காங்கிரசுக்காரர்கள் நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடத்திய எல்.கே.எஸ்.மகாலில் ஏற்கெனவே தயாராக உருட்டுக் கட்டைகள் வைத்திருந்திருக்கிறார்கள்.

அடிபட்டுக் காயமடைந்த வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள் உள்ளிட்டு ஆறு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பிணையில் வர முடியாத பிரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். ஆனால், தொட்டியம் தொகுதியின் முன்னாள் காங்கிரசு சட்டப் பேரவை உறுப்பினர் இராசசேகரன் தம்பி இராமகிருஷ்ணன் தலைமையில் திரட்டப்பட்டு, தாக்குதலில் உருட்டுக்கட்டைகளுடன் ஈடுபட்ட குண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

அக்குண்டர்கள் மாணவர்களை அடித்தது மட்டுமில்லாமல் பேருந்துகளை உருட்டுக்கட்டையால் அடிப்பதையும் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. அவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். மதுரையில் காங்கிரசுக்காரர்கள் ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். அதன்பிறகுதான் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் பற்றி எரிந்தது. அதே போன்று ஒரு நிகழ்வைக் காங்கிரசார் திருச்சியில் தொடங்கியுள்ளார்கள்.

மாணவர்களிடமிருந்த கருப்புக் கொடியைப் பிடுங்கி வைத்திருந்த ஒரு காங்கிரஸ் இளைஞரை மாணவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டார்கள். இப்பொழுது அந்நபரை மாணவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்லி காங்கிரசார் வழக்குச் சோடித்துள்ளார்கள். இதற்குத் திருச்சிக் காவல்துறையினர் பலியானது ஏன்?

மேலும் வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் எங்கே வைத்துள்ளார்கள் என்று கேட்கச் சென்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அறவழியில் 15 நாட்களுக்கு மேல் நடந்து வந்த மாணவர் போராட்டத்தில் வன்முறையை ஏவியுள்ளது காங்கிரசுக் கட்சி.

தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய ஆணையிடுமாறும் வன்முறையில் இறங்கி மாணவர்களைத் தாக்கிய காங்கிரசார் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள் : 27.03.2013

திங்கள், 25 மார்ச், 2013

தறு"தல","தலைவா"க்கள்

அரசியல்வாதிகளுக்கு நிகராக கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் கலை வணிகர்களான திரைத்துறையினர். எங்கோ தில்லியில் வணிக ஊடகங்கள் ஆதரவில் எவனோ  நடத்தும் போராட்டத்திற்கு இங்கிருந்து விமானம் ஏறிச் சென்று போய் ஆதரவு தருவார்கள்..அப்படியாவது அகில இந்தியாவிற்கும் தன் போலி முகம் அறிமுகம் ஆகும் என்கிற நம்பிக்கையில். 

ஆனால் போகிற வழியில்...இங்கு..எவர்களின் அன்றாடச் செலவை அபகரித்து கழிவறை வரை குளிரூட்டப்பட்ட கனவு இல்லத்தில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்களோ அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு நின்று ஆதரவு தெரிவிக்க கூடத் தயங்குவார்கள். காரணம் ஸ்டாலின் வீட்டிற்கு புலனாய்வுத் துறையை அனுப்பியது போல இவர்கள் வீட்டிற்கு வருமானவரித் துறையை அனுப்பிவிடுவார்களோ என்கிற அச்சமோ?

நாங்கள் கலை வணிகர்கள். எங்கள் நோக்கம் கலையை விற்பது,,,காசு பார்ப்பது...என்று கூறி  நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். அப்படி என்றால் திரையில் வசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்வதுதானே. எதற்கு பணம் கொடுத்து ரசிகர் மன்றங்களை நீங்களே நிறுவி அதற்கு ஒரு மேலாளர் போட்டு கொள்ளை அடிக்கிறீர்கள்? சரக்கு நன்றாக இருந்தால் வியாபாரம் தானாக நடக்கும் தானே?

உங்களின் விஸ்வரூபமோ,காவலனோ திரை இடுவதில் பிரச்சனையை ஏற்பட்டால் உங்களுக்கு தமிழன் உணர்வு பீறிட்டு எழும். மற்ற நேரங்களில் நாங்கள் வணிகர்கள்..அது அரசியல் என நீங்களாகவே ஒதுக்கி வைத்து விடுவீர்கள். நல்ல நரித் தந்திரம் டா. "ழ" கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத நீங்கள் தமிழ்..தமிழன் எனக்கூறி நடிக்கும்போதே அரசியல் செய்ய பழகிக் கொண்ட நீங்கள் அரசியல் மேடையில் நடித்து அப்பாவி மக்களின் வாக்குகளையும் அபகரித்து கேப்டன் ஆகிவிடுகிறீர்கள்.

திரைத் துறையில் உள்ள அனைவரையும் நாம் இங்கு குறை கூறவில்லை. அண்ணன் சீமான் போன்றவர்களை பிரசவித்த  கலை உலகில் மு.களஞ்சியம், அமீர், தாமரை, கௌதமன், சத்யராசு, பாலு மகேந்திரா,மணிவண்ணன்,புகழேந்தி தங்கராஜ்  போன்ற தீவிர இன உணர்வாளர்களும்  நிறைந்து உள்ளனர்.



தோழர்களே...நமது போராடத்தை நாமே முன்னெடுப்போம். நாம் இன்றி இவர்களால் அணு அளவும் அசைய முடியாது என்கிற நிர்பந்தம் ஏற்படும்போது நமது பின்னால் இவர்கள் அணி வகுப்பார்கள்.


களம் புகுவோம்; நிலம் மீட்போம்!!!


ஞாயிறு, 17 மார்ச், 2013

ஒரு கடிதம் எழுதினேன்-அம்னீசியா நோயாளி கருணாவின் கண்ணீர் கடிதம்

நான்காம் தலைமுறையில் நடமாட இயலாமல் இருக்கின்ற போதும் உயிர் துறக்கும் போதும் மக்களுக்காக அரியணையில் இருந்து சேவை செய்து கொண்டே இறக்கவேண்டும்;தான் மட்டும் அல்ல தனது எள்ளுப் பேரர்கள் வரை இதையே கடைபிடிக்க வேண்டும் என்று கடமை,கண்ணியம் தவறாத,தணியாத ஆர்வம் கொண்ட ஒரே தமிழீன தலைவர் நேற்று தான் அம்னீசியா வியாதியில் இருந்து விடுபட்டார். உடனே அவர் கண்ணில் பட்டது தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலை தான். அதை பார்த்து அவர் வடித்த கண்ணீரில் கோபாலபுரத்தில் ஆழிப்பேரலை புகுந்ததோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு உவர்நீர் சூழ்ந்தது. ஐயகோ என நடுநிசியில் அலறியதை கேட்டு சென்னை மக்கள் தூக்கம் கலைந்து துக்கத்தில் ஆழ்ந்தனர்.

என்ன செய்வதென்று அறியாத தலைவர் எடுத்தார் எழுதுகோல். இந்தியாவில் பிரதம மந்திரி யார் என சோனியாவிடம் கேட்டு உடனே கடிதம் எழுதத் தொடங்கினார். "இலங்கையில் தமிழர்கள் போரில் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக அறிய நேர்ந்தேன். இதனை உடனே ராஜபக்சேவிற்கு கடிதம் எழுதி தடுத்து நிறுத்த வழி உள்ளதா என ஆலோசித்து தங்களால் இயன்றதை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்வதாகவும் தவறினால் தான் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவும் தயங்கமாட்டேன் என்பதை தங்களது மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் " கடிதம் எழுதினார். இந்த கடிதம் 2014ற்குள் தில்லியை போய்ச் சேரும் என நம்பப்படுகிறது. - இவ்வாறு திராவிடக் கட்சியின் புதிய கொள்கைப் பரப்புச் செயலாளர் குஷ்பு நிருபர்களிடம் தெரிவித்தார்.

வெள்ளி, 15 மார்ச், 2013

புரட்சிகர மாணவர்களுடன் பேசி உங்கள் ஆதரவை தாருங்கள்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?



புரட்சி மாணவப் படைகளுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்; ஊக்கப்படுத்துவோம்!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்காமல்,தொடர் பட்டினிப் போராட்டம் செய்து போராடுங்கள். போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும்; இன உணர்வு கொண்டவர்களை இனவெறியனுக்கு நரபலி கொடுப்பதையும் தடுக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டிய தருணம் இது. அவர்களை அச்சுறுத்த திராவிட நரிகள் ஊளை இடலாம்; காவலர்களை ஏவி சோர்வடைய வைக்கலாம்; கல்லூரி நிர்வாகங்கள் மூலம் மிரட்டல் விடலாம். அவர்களுக்கு ஒரு இன்னல என்றால் நாம் இருக்கிறோம் என்கிற ஆன்ம பலத்தை கொடுப்போம். தொல்லை தர நினைக்கும் துரோகிகளை விரட்டி அடிப்போம்.



தோழர்களே...மாணவர்களுக்கு பக்கபலமாக நாம் இருக்க வேண்டிய தருணம். அழைத்துப் பேசி உற்சாகப்படுத்துவோம்...

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் : நித்தியானந்தம் 9600651091

மதுரை மன்னர் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர்: வெங்கடேசு, 9095667745 

அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தொடர்புக்கு: ராபர்ட் 8883170213

தூத்துக்குடி காமராசுக் கல்லூரி தொடர்புக்கு: 9677886465.

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள்


(தகவல் தந்த முகநூல் தோழர்கள் கம்பன் தமிழ் ,ராஜ்குமார் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகள்)

திங்கள், 11 மார்ச், 2013

இலயோலா மாணவர் போராட்டத்தை நசுக்க சதி செய்த கும்பலை முறியடித்த மாணவர் படை!-த.தே.பொ.கட்சியின் பார்வையில்

இலயலோ கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த நெருப்பை மூன்று நாள்களுக்குள் அடக்க நினைத்த சர்வாதிகாரிகளை,தமிழின விரோதிகளை தோலுரித்துக் காட்டுகிறார் தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியில் இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் க.அருணபாரதி. 

ஐ.நா. மனித உரிமை அவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை  ஏற்றுக் கொள்ள மறுத்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற உண்மையை ஐ.நா. ஏற்க வேண்டுமென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர். 

உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
2. ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு
3. அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
4. பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு
5. பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
6. மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு
7. சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
8. லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

அய்க்கப் அரங்கில் தொடர்ந்து போராட்டத்தை நடத்த இலயோலா நிர்வாகத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தமிழுணர்வாளர் திருச்சி திரு. சவுந்தர்ராசன் அவர்களுக்கு உரிமையான செங்கொடி அரங்கிற்கு உண்ணாப் போராட்டம் மாற்றப்பட்டது. மாணவர்களும், இளைஞர்களும் அங்குக் குவியத் தொடங்கினர். தமிழீழக் கோரிக்கையில் உறுதியாகப் பாடுபடும் பல்வேறு அரசியல் இயக்கத்தினரும், அதன் தலைவர்களும் அங்கு மாணவர்களை வந்து நேரில் வாழ்த்தி தமது ஆதரவை வெளிப்படுத்தினர். 

இந்நிலையில், போராட்டத்தின் 3ஆம் நாளான 10.03.2013 அன்று காலை முதல் அங்கு, இலயோலா கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்புடைய ‘புதிய பேராளர்கள்’ மாணவர்களை வழி நடத்துகிறோம் என்ற பெயரில் சில அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.  

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த உண்ணாப் போராட்டத்திற்கு, அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துக் கொண்டுள்ள டெசோ இயக்கத்தினர் திடீரென வந்து சேந்தனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் தன்னோடு,  தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரை, தனது தொண்டர்கள் சூழ அழைத்து வந்தார்.

‘நல்லிணக்கம்’ – ‘மனித உரிமை மீறல்’ என சிங்களனைத் தடவிக் கொடுக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை என மாணவர்கள் பட்டினிப் போர் நடத்திக் கொண்டிருக்கும் திடலுக்குள், உப்புசப்பில்லாத அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் டெசோ கூட்டத்தினர் நுழைந்தது, அங்கிருந்த மாணவர்களுக்கும்ம், தமிழ் உணர்வாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இவர்களது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர் தமிழுணர்வாளர்கள். எனினும், டெசோ குழுவினர்  போராட்ட பந்தலுக்குள், மாணவர்களை வழிநடத்திய ‘புதிய பேராளர்கள்’ அனுமதிக்கப்பட்டனர். 

அங்கே உரையாற்றிய திரு. தொல்.திருமாவளவன் மாணவர் போராட்டம் வெல்லாது என்றும் இந்திய அரசிடம் தான் நமது கோரிக்கைகளை நாம் வைக்க வேண்டும் என்றும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். நடைமுறைக்கு வரமுடியாத கோரிக்கைகள் இவை என்று சாடினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழுணர்வாளர்களை மாணவர்களை வழிநடத்தியவர்கள் கண்டித்தனர். 

அதன் பின்னர், மதியம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள், மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அப்போது அங்கு உரையாற்றிய த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், அமெரிக்கத் தீர்மானத்தின் கேடுகளை விளக்கியும், இந்திய அரசு சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உறுதிமிக்க ஆதரவை வழங்கி வருவதையும், வெறும் சிங்கள ஆட்சி மாற்றத்திற்கான செயல்திட்டத்தையே அமெரிக்க – இந்திய சதிகார கும்பல் முன்னெடுக்கக்கூடும் என்பதையும் தனது பேச்சில் வலியுறுத்தியதானது மாணவர்களை ஈர்த்தது. 

இந்திய அரசுக்கு எதிரான ஒவ்வொரு வார்த்தைக்கும் மாணவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். இதுதான் மாணவர்களின் உண்மையான மனநிலையாக உள்ளது. 

தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பேசிய பிறகு, தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்கள் இங்கு பேசக் கூடாது என அங்கிருந்த சிலர் ஒலிவாங்கியைப் பிடிங்கினர். மாணவர்கள் தான் பேச வேண்டுமென அதற்கு அவர்கள் விளக்கமும் கூறிக் கொண்டனர். கூட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் அங்கயற்கண்ணியை இலயோலா கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி மேடையை விட்டு விரட்டினார். இலயோலா கல்லூரி மாணவர்கள் தமது உண்ணாப் போராட்டத்தை தொடர இடம் கூட தராத அக்கல்லூரி நிர்வாகம், சிலரை வைத்து அப்போராட்டத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவைத்துத் கொணர முயன்றது அப்போது தெரியவந்தது. 

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இப்போராட்டத்தை மாற்றும் முயற்சியில் திரு. திருமாவளவன் அவர்களுடன் வந்தவர்கள், ஒரு சில மாணவர்களுடன் இணைந்து ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார். 

2009இல் தமிழீழ இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சித் தலைவராக இருந்தவர் திரு. கே.வீ.தங்கபாலு. இன்றைக்கும் என்றைக்கும் தமிழீழத்தை ஆதரிக்காத காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டி பட்டினிப்போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு எந்த துணிவில் வந்து சேர்ந்தார்? டெசோ குழுவினர் கொடுத்த துணிவா அது?

தங்கபாலு வருகின்ற செய்தியறிந்து, மாணவர்களும், தமிழ் உணர்வாளர்களும் வாயிலில் சென்று கடுமையாக முழக்கமிட்டனர். வாயில் வரை வந்த தங்கபாலு, கடும் எதிர்ப்பு இருப்பதைக் கண்டும் நான் உள்ளே நுழைவேன் எனச் சொன்னார். உள்ளே போராட்டத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள், “இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக வந்தால் அதிகாரிகளுடன் வந்து பேசுங்கள். அதைவிட்டுவிட்டு காங்கிரசுத் தலைவர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம்” என அறிவித்தனர். அதன்பின், ‘தங்கபாலுவே வெளியேறு’ என்று தோழர்கள் எழுப்பிய முழக்கம் கண்டு, அச்சத்துடன் பின்வாங்கினார் தங்கபாலு. 

அதன் பின்னர், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், ஈழச்சிக்கலில் துரோகம் புரிந்து அம்பலப்பட்டவருமான பாதிரியார் ஜெகத் கஸ்பர் அங்கு உரையாற்ற வந்தார். அவருக்குப் பின் பேசிய ஒரு மாணவர், ‘ஜெகத் கஸ்பர் ஒரு மாபெரும் துரோகி அவருக்கு எப்படி இங்கு பேச அனுமதி கிடைத்தது?’ என கேள்வி எழுப்பியுடன் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தமிழ் உணர்வாளர்களின் ஞாயமான குரல்களுக்கு எதிராக மாணவர்களைத் திருப்புகின்ற கேவலமான சதியில் சிலர் ஈடுபட்டனர். தழல் ஈகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைத்த சதிச்செயல் தான், இங்கு நினைவுக்கு வந்தது. தமிழ் உணர்வாளர்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராகவே மாற்றும் சதிச் செயலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலரும், ஜெகத் கஸ்பருடன் உடன்வந்த சிலரும் மேற்கொண்டனர். 

வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, மே பதினேழு இயக்கத் தோழர் உமர், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தோழர் ராஜா ஸ்டாலின், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் இது குறித்து தனியே விவாதித்தனர். மாணவர்களுக்கு சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாட்டை பேசி சரிசெய்வதென முடிவெடுத்தனர். 

அன்றிரவு ஒரு பக்கம், மாணவர்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை எப்படி நகர்த்துவதென விவாதித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம், மாணவர்களுடன் தமிழ் உணர்வாளர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் தான், காவல்துறையினர் நள்ளிரவு 1.45 மணிக்கு, மூடியிருந்த போராட்டத்த திடலின் இரும்புக் கதவுகளை பலவந்தமாகத் தட்டினர். 

கதவை உடைத்துக் கொண்ட முன்னேறிய காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், சிகப்பு நிறச் சீரூடையிலிருந்த தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத்தின் சட்டைகளைப் பிடித்து தள்ளி, தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார். திபுதிபுவென உள்ளே நுழைந்த காவலர்கள் அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்கத் தொடங்கினர். அதைக் கண்டு ஆவேசமாக முழக்கமிட்டு நின்ற தமிழ் உணர்வாளர்களை தள்ளிவிட்டு முன்னேறிய காவல்துறையினர், அங்கு உண்ணாப் போராட்டத்தில் இருந்த 8 மாணவர்களையும், மாணவர்களின் மனிதச் சங்கிலித் தடுப்புகளையும் மீறி தடியடி நடத்தி பலவந்தமாக இழுத்துச் சென்றனர். 

தி.மு.க.வின் டெசோ குழுவினருக்கும், அதற்கு எதிராக இருப்பதாக சொல்லும் அ.தி.மு.க. அரசிற்கும் நோக்கம் ஒன்றுதான் என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. மாணவர்கள் போராட்டத்தை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்பது தான் அந்த நோக்கம்!

நள்ளிரவுக் கைதுகளுக்கும், காவல்துறை அடக்குமுறைகளுக்கும் பெயர் பெற்ற ஆரியப் பார்ப்பன பாசிஸ்டான செயலலிதா, மீண்டுமொருமுறை தனது வெறித் தனத்தைக் காட்டினார். மாணவர்களுக்கு ஆதரவாக அங்கிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி, தம் தரத்தை வெளிக்காட்டினர் காவல்துறையினர். 

உண்ணாப் போராட்டத்திலிருந்த 8 மாணவர்களும், இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் தமது உண்ணாப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர் மாணவர்கள். 

வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. வேளச்சேரி மணிமாறன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி, திரைஇயக்குநர்கள் மு.களஞ்சியம், கவுதமன், இராம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட திரளான உணர்வாளர்கள் கைது செய்யபட்டு, அரும்பாக்கத்திலுள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைக்கப்பட்டனர். 

போராட்டம் நடத்தப்பட்ட திடலை பூட்டியிருந்த காவல்துறையினர், காலை விடுதலை செய்யப்பட்டத் தோழர்களில் சிலர் தமது உடைமைகள் உள்ளிருப்பதாகக் கூறியும் கூட அதைத் திறக்காமல் அடாவடித்தனம் புரிந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. 

அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகக் காவல்துறையினரின் அரக்கத்தனத்தைக் கண்டிக்கத் துப்பில்லாத ஊடகங்கள், மாணவர் போராட்டத்தை திசை திருப்பும் வேலையை மட்டும் மேற்கொண்டு வருகின்றன. நடுநிலை என மார்தட்டும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, தமிழினத் துரோகி தங்கபாலுவை மாணவர்கள் எழுச்சியுடன் விரட்டியக் காட்சியைக் காட்டவில்லை. மாறாக, டெசோ கும்பல் வந்து போனதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. சன் தொலைக்காட்சியோ, மாணவர் போராட்டத்தை டெசொவுக்கு ஆதரவான போராட்டமாக சித்தரிக்க கடும்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

ஆனால், இவற்றையும் மீறி இலயோலா கல்லூரி மாணவர்களின் போர்க்குணமிக்க அறப்போராட்டமும், அதை தடுக்க முனைந்த காவல்துறையினரின் அடாவடித்தன நடவடிக்கையும் தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை தோற்றுவித்துள்ளது. போராட்டம் சென்னையிலிருந்து தமிழகம் முழுமைக்கும் பரவியுள்ளது. 

சென்னை இலயோலா கல்லூரி மட்டுமின்றி, அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம், மாநிலக் கல்லூரி கே.ஆர்.எம்.எம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளிலும், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி, அரியலூர் அரசுக்கல்லூரி, தஞ்சாவூர் அரசுக்கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், திருச்சி தூய வளனார் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அரசு கல்லூரி மதுரை சட்டக்கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி, காரைக்குடி ஆனந்தா கல்லூரி, பூம்புகார் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி என தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழுணர்வாளர்கள் எதிர்பார்த்த்தை போலவே, இலயோலா கல்லூரி நிர்வாகத்தின் அந்த ‘புதிய பேராளர்கள்’, இலயோலா கல்லூரியின் 8 மாணவர்களுடைய உண்ணாப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அந்த 8 மாணவர்களின் போராட்டம் இன்றைக்கு 8 கோடி தமிழ் மக்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது. 

இலயோலா கல்லூரி மாணவர்களைத் தொடர்ந்து, திருச்சி தூய வளவனார் கல்லூரி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

இந்த மாணவர் சக்தியால் தான் தமிழ் இனத்தின் உரிமைகளை மீட்க முடியும்! அதை தடுக்க முனையும் துரோகியர் கூட்டத்தையும் வீழ்த்த முடியும்! இது மாணவர் போராட்டமல்ல, தமிழ் இனத்தின் போராட்டம்! அதற்கு துணை நிற்க வேண்டியதே தமிழ்த் தேசியர்களின் கடமை!

================================
தோழர் க.அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
================================

வியாழன், 28 பிப்ரவரி, 2013

நாகப்பட்டிணம் தேவி திரை அரங்கும்- பகல் கொள்ளையும்

சில்லரையிலேயே குறியாக இருக்கும் திரை உலகில் தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தமிழராச்சே,அவர் இயக்கம் படத்தை திருட்டுத் தனமாக பார்க்கக் கூடாது,திரையில் பார்ப்பது தான் அவருக்கு வெகுமானம் என அமீரின் ஆதிபகவன் பார்க்கலாம் என நாகப்பட்டிணத்தில் உள்ள தேவி திரை அரங்கு சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அரங்கு என போட்டு குளிரூட்டியும் போட மாட்டார்கள்;அங்கொன்றும் இங்கொன்றுமாக மின் விசிறி மட்டும் சில நேரம் ஓடும்;இருக்கைகுள் மூட்டை பூச்சி கடிக்கும்.பஞ்சு குதறப்பட்டு இருக்கை பல்லை காமிக்கும்;ஒலி அமைப்பு சுத்தமாக சரி இருக்காது. வீட்டிற்கு  வந்து யுட்டூயுபில் வந்து பார்த்தால் தான்,ஓ இது தான் வசனமா என விளங்கும்.  அப்படி ஒரு அரங்கு.  

ரூ.30க்கு சீட்டு அச்சடித்து ரூ.100 என்றார். வார இறுதி என்றால் கூட பரவாயில்லை. வார நாளில் இப்படி ஒரு கொள்ளையா என சரி போகலாம் என நினைத்தேன். வாகன பாதுகாப்பு (PARKING) எனக் கூறி ஒரு சீட்டை நீட்டி ரூ.10 அபகரிக்கமுயன்றார்.(அதில் ரூ.3 என அச்சிடப் பட்டு இருந்தது) 

நாகப்பட்டிணம் போன்ற மூன்றாந்தர ஊரிலேயே இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே,சென்னை,திருச்சி,கோவையில் இவர்கள் கோவணத்தை கூட உருவி விட்டு தான் உள்ளேயே அனுமதிப்பார்கள் போல. 

ஒரு படம் எடுத்து வெளியிட எவ்வளவு கடினம்,எவ்வளவு உழைப்பு தேவை என்பதை நாங்கள் உணராமல் இல்லை.திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்கும் திரையுலக கனவான்களே...முதலில் இது போன்ற கொள்ளையர்களை தடுத்து நிறுத்துங்கள். கூட்டம் தானாக திரை அரங்கு வரும். 

(NAGAPATTINAM,DEVI THEATRE The worst theatr in Nagapattinam is Devi theatre, Avoid Thevi theatre,AMEER ADHIBAGAVAN)

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல;அவசியம்

நாகப்பட்டிணத்தில் இன்று (24/02/2013) நாம் தமிழர் கட்சி சார்பாக நாகை நகர அமைப்பாளர்கள் தங்கம் நிறை செல்வம்,ராஜேசு,மணி செந்தில்  மற்றும் விஜயன் முன்னேற்பாட்டால் பொதுக்கூட்டம் அவசரகதியில்  விளம்பரங்கள் அறிவிப்புகள் இல்லாமல் கூட்டப்பட்டதாக இருந்தாலும் ஓரளவு திரளான மக்களோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு  தோழர் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்,திருச்சி திரு.வேலுச்சாமி, நாம் தமிழர் சாகுல் ஹமீது,கல்யாண சுந்தரம்  அவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழினத் தாய்க்கு மருத்துவம் தராமல் திருப்பி அனுப்பிய, மருந்துப் பொருள்கள் ஏற்றிய கப்பலை ஈழத்திற்கு அனுப்ப இயலாத, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்து பொங்கி எழுந்த புரட்சியை அடக்கிய கருணாநிதியின் டெசோ நாடகத்தை தோலுரித்துக் காட்ட நடந்த கூட்டம்.

"கெட்டிக்காரனின் புளுகு ஏழு நாள்கள் தான்.ஆனால் இங்கு ஒருவர் எழுபது வருடங்களாக பொய்களை மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறார். முத்துக்குமரன் சனவரி 29 அன்று இறந்து மறுநாள் அழகிரியின் பிறந்தநாளின் போது கேக் வெட்டி கொண்டாடிய கருணாநிதி, விடுதலைப் புலிகளை கைகளை கட்டி முதுகில் சுட்டுக் கொன்ற புகைப்படங்களை காட்டி கருத்துக் கேட்டபோது,இந்த புகைப்படங்கள் எவ்வளவு தூரம் உண்மையோ என தெரியாது என்று கூறி விட்டு,இன்று பாலகன் பாலச்சந்திரன் புகைப்படத்தை பார்த்து விட்டு நெஞ்சு பதறுவதாக நாடகம் ஆடுகிறார்" என தோழர் கல்யாணசுந்தரம் தெலுங்கனின் தோலுரித்துக் காட்டினார்.

பாலகன் பாலச்சந்திரனையும் தீவிரவாதி என்ற ராஜீவ் கொலையாளி சுப்ரமணியசாமி தொ.கா.பேட்டியின் போது ஜெயின் கமிசன் உங்களை குற்றவாளி எனக் கூறி உள்ளதே என சுபவீ கேட்டபோது புறமுதுகு காட்டி ஓடியதை ஞாபகம் கூர்ந்த கல்யாணசுந்தரம் டெசோ மாநாட்டு அறிக்கையை ஐநாவில் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் தாக்கல் செய்த ஸ்டாலினின் தில்லுமுல்லு ஆட்டத்தையும் தோலுரித்துக் காட்டினார்.

மகனோ சிறையில்;தண்டனை அனுபவிப்பதோ தாய். ஒற்றை மகனை பெற்றெடுத்து  கார்த்திகேயன், ரகோத்தமன் இவர்களால் பொய்யாக புனையப்பெற்ற வழக்கில் 22 வருடங்களாக ஒரு தவறும் செய்யாது தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் குமுறிய போது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரின் இதயமும் குலுங்கியது உண்மை. "தவறே செய்யாவிட்டாலும் பழியை தன் மீது போட்டுக் கொள்கிற தமிழனாய் பிறந்துவிட்டோம். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டு இன உணர்வோடு வாழ்ந்தோம்,இதைத் தவிர வேறு தவறு எதுவும் செய்யவில்லை" என அந்த தாய் சிந்திய கண்ணீர் இன்னும் ஈரம மறையாமல் எங்கள் மண்ணில்.

தூக்குக் கயிற்றின் கீழே காலம் தள்ளும் மூவரை "ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கொலையாளிகள்" எனக் கூறாதீர்கள். யாராவது அப்படி பேசும்போது அவர்கள் முன்னே சென்று எனது மகன் கொலையாளி அல்ல என்று உரக்கக் கத்தவேண்டும் போல தோன்றும் எனக் கூறிய போது உன்னத மகனை பெற்றெடுத்த அந்த தாயின் வேதனை புரிந்தது. அவர்களுக்கு சார்பாக பேசும் நாம் கூட அந்த வார்த்தைகளைத் தானே இன்றும் பயன்படுத்துகிறோம். இனியாவது தவிர்ப்போம் அப்படி கூறுவதை.

"ராஜீவ் படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்" எழுதிய மானமிகுந்த ஒரே காங்கிரசுக்காரர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் தனது உரையில் ராஜீவ் காந்தி கொலையான உடனே,விசாரணை ஆரம்பிக்கும் முன்பே விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என சொன்ன அப்போதைய சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமியை இழுத்து வந்து விசாரிக்கத் தவறிய கார்த்திகேயனை சாடினார். 

1973இல் எம்ஜியாரால் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வென்ற போது,முரசொலி மாறன் "எங்கே போற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சர் ஆகி விடுவார் போல" எனக் கூறியதை நினைவு கூர்ந்தார். ஸ்டாலினைப் பற்றி அழகிரியோ,அழகிரியைப் பற்றி கனிமொழியோ பேச பயப்படுகிற காலகட்டத்தில் அனைவரையும் பற்றி தைரியமாக பேசுகிற குஷ்பு அடுத்த  முதல்வராகக் கூடிய வாய்ப்பு உள்ளது என ஆரூடம் கூறினார். மான உணர்வு அற்ற தமிழர்கள் இருக்கும் வரையில் இவர் கூறியது பலிப்பதர்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.


சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக  1500 பிரதிகளுக்கு மேலாக தனது நூல் "ராஜீவ் காந்தி படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்" விற்கப்பட்டதை வேலுச்சாமி கூறிய போது மக்களுக்கு உண்மையை அறிவதில் உள்ள ஆர்வம புரிந்தது. அந்த ஆர்வம்,உணர்வு உண்மையை உரிமையை நிலை நாட்டவும் தயங்காது முன்னெடுக்கப்படும் விரைவில்.

பஞ்சாபில் முதல்வர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவரின் தூக்கு தண்டனை அந்த மண்ணின் மக்களின் வீறுகொண்ட போராட்டத்தால் நடுவண் அரசு அடிபணிந்து நிறுத்தி வைத்தது. ஆகவே அரசாங்கத்தை நாம் குறை கூறி பலன் இல்லை;மக்கள் எப்படியோ அப்படித் தான் அரசன். எனவே மக்களின் புரட்சியே மன்னனின் நிலையை நிலைப்பாட்டை மாற்றும் சக்தி. புரட்சியை முன்னெடுப்போம்; தமிழ் தேசியம் காண்போம்.

கூட்டத்தின் முடிவில் மிக மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இறுதியில் வேலுச்சாமி பேசும்போது..."மூவர் விடுதலை பெற்று வரும்போது "அவன்" வருவான். அவன் வரும்போது இந்த துரோகிகள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள்" என்ற அவரது வார்த்தை. 

வருவான்டா பிரபாகரன்...

புதன், 13 பிப்ரவரி, 2013

சாதி வெறி ஊட்டும் பாமகவை புறந்தள்ளுவோம்

தமிழின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சியை நான் விரும்பி பார்ப்பதுண்டு.

அங்ஙனமே..கடந்த ஞாயிறு (10.02.2013) மதியம் ஒரு நிகழ்ச்சி. பாமக-அன்புமணி ராமதாசின் மனைவி பேசிக்கொண்டு இருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது.அதற்கு மேல் எனது பொறுமை எல்லை கடந்து தொலைக்காட்சியை அணைத்து விட்டு படுக்க சென்றுவிட்டேன். அவர் பேசியதின் சாராம்சம்-
நமது சமுதாய (வன்னிய சமுதாய) இளைஞர்களின் கணினி பயன்பாடு என்பது திரைப்படங்களை இணையதளங்களில் பார்க்கும் அளவில் மட்டுமே உள்ளது. நமது சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு சிறிது கூட இல்லை. சென்னையில் பயிலும் நமது சமுதாய இளைஞர்களுக்கு தாங்கள் என்ன சாதி என்றே தெரியவில்லை. நாமாக அவர்களுக்கு நாம் இந்த சாதியில் பிறந்துள்ளோம்,நமது சாதியை நாம் போற்றவேண்டும்.....தான் எந்த சாதி என்று தெரியாமலேயே இன்றைய இளைய தலைமுறை உள்ளது.இவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கமுடியும்? இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
இவ்வாறாக அந்த அம்மணி பிதற்றிக் கொண்டு இருந்தார். தனது சாதி,தனது தோழன் சாதி,பாடம் புகட்டும் ஆசிரியர் இந்த சாதி என அறிய விழையாது சமத்துவ சமுதாயமாக இருக்கும் கல்லூரியில் சாதிவெறி பற்றி எரிய வேண்டும்;அதில் இவர்கள் குளிர் காய்ந்து வாக்கு அரசியல் நடத்தவேண்டும் என் பேரவா கொண்டிருப்பதும் அதை சிறிதும் வெக்கம் இல்லாது பறை சாற்றுவதும் நா கூச வைக்கிறது.
பாமகவின் வன்னியர் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தர்மபுரி வெறியாட்டத்திற்கு பிறகு சாதி வெறியர்களுக்கு வெளிப்படையாக குரல் கொடுத்து நாடக காதல் என்ற கற்பனை வளம் சேர்த்து (நாடக காதல் எனக் கூறி தமிழ் பெண்களைத்  தான் இவர்கள் கொச்சை படுத்துகிறார்கள்) தங்கள் வாக்கு அரசியலில் காய் நகர்த்துகிறது. இப்படியாக வெளிப்படையாக வெறியாட்டம் நடத்தினால் தான்,"பிழைக்க" முடியும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள்.

2009-நாடாளுமன்ற தேர்தல்,2011-சட்டமன்ற தேர்தலில் இவர்கள் பச்சோந்திதனத்திற்கு மக்கள் போட்ட சூட்டை மறந்து இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை எடுத்து வீசுகிறார்கள் கண்களை இருக்கக் கட்டிக் கொண்டு.

தான் செய்த தொழில் ரீதியாக உருவான வர்ண பேதங்களை திரும்பவும் தூசு தட்டி புத்துயிர் அளித்து அப்பாவி மக்களை அவர்களுக்காக போராட வந்த இறைதூதர் போல நாடகம் ஆடி கிளம்பிவிட்டனர் பாமக, யாதவர் கூட்டமைப்பு,கொங்கு முன்னேற்ற கட்சி,பேரவை, போர்வர்ட் ப்ளாக்,சமத்துவ மக்கள் கட்சி என புற்றீசல் போல கிளம்பிவிட்டனர்.

இதுவரை திராவிடம் என்கிற பெயரில் தமிழ் மக்களை ஆட்டு மந்தை கூட்டங்களாக வைத்து வாரிசு,குடும்ப அரசியல் நடத்தி வந்தனர். இப்போது சாதிவாரி கட்சிகள் புற்றீசல்களாய்....

மக்களே விழித்தெழுங்கள்...நாம் அனைவரும் தமிழர்கள். நமது இனம் இந்திய தேசியத்தால் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறோம் ஒட்டுமொத்தமாக. 

சாதிக் கட்டுக்களை அறுத்தெறிந்து மூத்த குடி தமிழ்க்குடியாக ஒன்று கூடுவோம்; சாதி வெறியர்களை புறந்தள்ளுவோம்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

கவிதை:காவிரித்தாய் கைவிரித்தாள்






பாரதம் என்பது மாயை;
அங்கு 
காவிரி என்றும் காணல் நீர் தமிழனுக்கு 

கவிதை: காதலின் நம்பிக்கை

திரும்ப கிடைத்துவிடும்
என்கிற நம்பிக்கையிலேயே
பல இதயங்கள் இங்கு
பரிமாறப்படுகின்றன...!!!