வியாழன், 19 மே, 2022

ஈழத் தமிழருக்கு போகாத கப்பல் சிங்களனுக்கு மட்டும் சென்றதெப்படி?

2006இல் ஈழத் தமிழ் சொந்தங்கள் பட்டினியாலும் போராலும் இறந்துகொண்டு இருந்த போது நிவாரணம் அளிக்க மருந்து மற்றும் உணவுப் பொருள்களை மக்களிடம் நிதியாக பொருளாக திரட்டி கப்பல் மூலம் அனுப்ப திசம்பர் 2006லிருந்து 2007 செப்டெம்பர் வரை செஞ்சிலுவை சங்கங்கள், மக்கள் திரள் போராட்டம், பட்டினி போராட்டம், முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் என எந்த முயற்சிக்கும் பலன் தராமல் சேகரித்த பொருள்கள் எல்லாம் மண்ணாகிப் போனது. அதை காங்கிரசும், திமுகவும் தடுத்து நிறுத்தியது.

இன்றைக்கு சிங்களர்களுக்கு உணவுப் பற்றாக்குறை என்ற உடனே நடுவண் அரசு டீசலை கப்பலேற்றி அனுப்புகிறது ; உணவுப் பொருள்களை தமிழ்நாடு அரசு தடை இன்றி உடனே அனுப்புகிறது. 

எங்கள் செலவில் உதவ எண்ணிய போது தடைவிதித்த நடுவண், மாநில அரசுகள் இன்று அரசு நிதியை, எங்களுடைய வரிப்பணத்தை எதிரிகளுக்கு வாரி வழங்குகிறது. வழக்கம் போல நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்