புதன், 27 மே, 2015

வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியும்... சகித்துக் கொள்ளும் ஈகிகளும்

பார்த்து பயந்து விடாதீர்கள். இதற்குப் பெயர் தான் இட்லி. இதனுடன் 40 பேருக்கு ஒரே தேங்காயில் ஒரே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொழுப்பு நீக்கப்பட்ட சட்னி.

இது  சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியின் இரவு உணவு.

குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பாலியல் சமூக விரோதிகளுக்கு அஞ்சியும் விடுதியில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெரும்பாலான சகோதரிகளுக்கு. மாதம் ரூ.4600 ஐயும் கொடுத்து விட்டு இது போன்ற நஞ்சுக்களை சாப்பிட வேண்டிய கட்டாயம் விடுதிப் பெண்களுக்கு. 

இது இங்கு மட்டும் அல்ல. பெரும்பாலான பெண்கள் விடுதியின் நிலை இதுதான். காலையில் சுட்ட இட்லி..நேற்று அரைத்த சட்னி, புளித்துப் போன தோசை, கழுவாத கழிவறை, அனலை கக்கும் அறைகள்... இதை விட்டால் வேறு போக்கிடம் இப்பெண்களுக்கு இல்லை; எதையும் சகித்துக் கொள்ளும் அப்பிராணிகள் இவர்கள் என்கிற மன தைரியம் விடுதி காப்பாளர்களுக்கு.

சிறைக்கு சென்றவர்களை தியாகிகள் (ஈகிகள்) என்போம். என்னைக் கேட்டால் குடும்ப நலனுக்காக இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளும் இந்த சகோதரிகள் தான் உண்மையான ஈகிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக