செவ்வாய், 11 அக்டோபர், 2016

கீழடியில் தமிழன் காலடி




2500 ஆண்டுகளுக்கு முன் தமிழன் நாகரிகத்தின்  உச்சியில் இருந்தான் என்பதற்கான வரலாற்று சாட்சி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் கிடைத்துள்ளது.


நம் மூதாதையர் வாழ்ந்த பூமியில் என் காலடி பதிக்க வேண்டும், அவன் வாழ்ந்த சிறப்பை காணவேண்டும் என்று ஆவலில் மதுரைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டேன். கீழடி சிவகங்கை மாவட்டம் என்றாலும் மதுரையில் இருந்து ௧௨ (12)கி.மீ தொலைவில் தான் உள்ளது. மதுரை காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் கடந்தால் மதுரை -இராமேசுவரம், திருச்சி-திருநெல்வேலி சாலை  நான்காக பிரியும். அதில் இராமேசுவரம் செல்லும் சாலையில் புளியங்குளம் கடந்து சிலைமண் என்கிற ஊரில் வலப்  பக்கம் சாலை பிரியும். அதில் வழியாக ஒரு கிமீ தூரத்தில் கீழடி உள்ளது.


கீழடி அகழ்வாராய்ச்சி மிகப் பிரபல்யம் ஆகி உள்ளது என்பதற்கு சாட்சி மேலூரில் இருந்து கீழடி  வரை சிறுவர்களை கேட்டால் கூட வழி சொல்கிறார்கள் தெள்ளத் தெளிவாக. மக்கள் அனுதினமும் வந்து தமிழனின் கட்டிட வல்லமையை நாகரிகத்தின் உச்சத்தை அறிந்து உவகை பூரிக்கிறார்கள். அங்கு  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில..





























அங்கு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிசங்கள் மழையிலும் வெயிலிலும் அதன் அருமை தெரியாமல் சில்லறை வர்த்தகக் காய்கறி குவியல் போல  கிடக்கிறது. நாம், தமிழர்கள் அங்கு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கான அவசியத்தை அதிகார வர்க்கத்திடமும் வலியுறுத்தி  தமிழன் தொன்மையை  மறைக்க நினைக்கும் நடுவண் அரசின் முயற்சியும் முறியடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக