
அவள் ஒன்றும் கோழை இல்லை. போராடி நம்பிக்கை இழந்து - வாழத் தகுதி அற்ற நாடு இது என செருப்பால் அடித்துச் சென்றுள்ளாள்.
பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையில் மாநில அரசும் சட்டம் இயற்ற இயலும். அப்படி இருந்தும் 2017 பிப்ரவரி மாதமே நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததை கிடப்பில் போட்டது மட்டும் அல்லாமல் இறுதி கட்டம் வரை நீட்டிலிருந்து ஒராண்டாவது நடுவண் அரசு விலக்கு அளிக்கும் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்ப வைத்து தாலி அறுத்தார். இல்லையென்றால் கூட 199.75 பொறியியலுக்கான தகுதி மதிப்பெண் பெற்ற அனிதா அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட நுழைந்திருக்கலாம்.
மாநில பாடத்திட்டத்தில் படித்து தேறிய அவளுக்கு நடுவண் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள். அது மட்டும் அல்ல.ஒரே நாடு ஒரே தேசத்தில் ...இதே குஜராத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான கேள்விகள். தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கடினமான கேள்விகள். நாடா இது...த்தூ...
பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையில் மாநில அரசும் சட்டம் இயற்ற இயலும். அப்படி இருந்தும் 2017 பிப்ரவரி மாதமே நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததை கிடப்பில் போட்டது மட்டும் அல்லாமல் இறுதி கட்டம் வரை நீட்டிலிருந்து ஒராண்டாவது நடுவண் அரசு விலக்கு அளிக்கும் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்ப வைத்து தாலி அறுத்தார். இல்லையென்றால் கூட 199.75 பொறியியலுக்கான தகுதி மதிப்பெண் பெற்ற அனிதா அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட நுழைந்திருக்கலாம்.

ஆண்டிற்கு 150000 கோடியை தன் மக்களிடம் வழிப்பறி செய்தும் கொள்ளை அடித்தும் இந்திய நாட்டிற்கு கப்பம் கட்டும் ஒரு வளமான தமிழ் நாட்டால், 26 மருத்துவக் கல்லூரிகளும் 3377 மருத்துவ இடங்களும் உள்ள ஒரு நாட்டால் தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு பெண்ணிற்கு அவள் விரும்பிய கல்வி கிட்டவில்லை என்றால்...விடுதலை கொண்டாட்டம் ஒரு கேடா என காறி உமிழ்ந்துவிட்டு சென்றிருக்கிறாள் அந்த இளம் தளிர்.


தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்று படித்தால் முத்துக்கிருட்டிணன்களையும், சரவணன்களையும் பிணமாக்கும் வர்ணாசிரம நாடு தன் வலைக்குள்ளேயே இளந்தளிரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக