ஞாயிறு, 19 நவம்பர், 2017

வணிகர் சங்கப் பேரவையின் கவனத்திற்கு...

உணவகங்களில் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டதா என்பதை நாளை முதல் பார"தீய" சனதாக் கட்சித் தொண்டர்கள் ஆய்வு செய்வார்கள்- தமிழிசை

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? அவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? எரிவாயு உருளை மானியம் வரவில்லை என்பதற்காக நான் விநியோகம் செய்யும் கடைக்குள் சென்று ஆய்வு செய்யலாமா? நான் கொடுத்த மனு என்ன நிலையில் உள்ளது என்று மா.ஆ.தலைவர் அலுவலகத்திற்குள் சென்று சோதனை போடலாமா?

திருட்டு பட குறுந்தகடு உள்ளதா என்று விசால் ரெட்டி கோவை நகர கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்ததை கண்டிக்காது பாராது விட்டதன் தொடர்ச்சியே இந்த அத்துமீறல் அறிவிப்பு.

வணிகர் சங்க தலைவர்களே..உடனே முடிவெடுங்கள்.உங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யுங்கள்...

--இறுதியாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..பிரியாணி அண்டா பத்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக