ஞாயிறு, 25 நவம்பர், 2018

கஜா புயல்- கள ஆய்வும் மக்களின் தேவையும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விழைகிறதா மனம்? உங்கள் உதவி முழுமையானதாக இருக்க, ஒரு மூன்று நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படித்து உங்கள் சேவை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள் 

இயற்கை சீற்றம் : கஜா புயல்
நாள் : 15.11.2018 இரவு 11.30 - 16.11.2018 காலை 4.30 வரை 
காற்றின் வேகம்: தகவல் இல்லை
சேதம்: கீற்று வீடுகள், நாட்டு ஓட்டு வீடுகள், மரங்கள், மின்சாரம்
கள ஆய்வு பாதை : வேளாங்கண்ணி, பிரதாபராமாபுரம், காமேசுவரம், விழுந்தமாவடி (தென்பாதி, ஆதி திராவிடர் குடியிருப்பு), புதுப்பள்ளி (கீழையூர் ஒன்றியம்), வேட்டைக்காரன்இருப்பு(கண்டியன்காடு, போலிசு சாலை)



நான் வேளாங்கண்ணியில் இருந்து பிரதாபராமபுரம் (PR PURAM) (காமேஸ்வரம் போகும் வழிக்கு கிழக்காக) , பாரதி நகர் என்கிற ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதிக்குச் சென்றேன். அங்கு பெரும்பாலான கீற்று வீடுகள் சுவர் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளன. மரங்கள் இன்னும் அப்புறப்படுதப்படவில்லை. மேற்கொண்டு மழை பொழிந்தால் தங்கள் உடைமைகளை தற்காலிகமாக காக்க அவர்களுக்கு தார்பாய் தேவைப்படுகிறது. அங்கு 64 வீடுகள் உள்ளதாக சொன்னார்கள். அதில் பாதி வீட்டிற்காவது தேவைப்படும். 

தொடர்பு கொள்ள: 


  1. திரு. சங்கர் (9789397952)- பாரதி நகர், PR புரம் 
  2. திருமதி செல்வி - 9976430840 -பிரதாபராமபுரம் 
  3. திருமதி சந்திரோதயம் - 9585934718 கிராமத்து மேடு

விழுந்தமாவடி தென்பாதி கிராமம்-ஆதி திராவிடர் குடியிருப்பு -75 குடும்பங்கள். நான் சென்ற சமயம் தான் மரம் அறுக்கும் இயந்திரம் தொண்டு நிறுவனம் ஒன்றால் அளிக்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள், ஆடைகள் சேதம்.  
தொடர்பு : திரு குமார் - 9994042425


தென்பாதி-விழுந்தமாவடி 

புதுப்பள்ளி- கீழையூர் ஒன்றியம்
இந்த புதுப்பள்ளி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளதாம். 
தொடர்பு : மரு. ராமமூர்த்தி - 9787653543

புதுப்பள்ளி 


முகாமில் இருந்து உணவை வீட்டிற்கு வாங்கிச் செல்லும் பெரியவர் 


கண்டியான்காடு- வேட்டைக்காரன் இருப்பு. இது உள்ளார்ந்த பகுதி. மரங்கள் முக்கிய வீதிகளில் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மரம் அறுக்கும் இயந்திரம் இருந்தால் நாங்களே சீர் செய்து கொள்வோம் என்றார் திரு. அன்பு செழியன்- ஆசிரியர்- தொடர்பு :9488015289. எரிபொருள் கொண்டு மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்றின் விலை ரூ. 8500/-
 
இந்த பகுதியில் 150 வீடுகள் உள்ளன. இங்கு தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்ட உதவிப் பொருள்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, நான் அங்கு சென்ற நேரத்தில்தான், அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள் அவர்களே.

இந்த கண்டியன்காடு பகுதியில் நூற்றாண்டுகால பழமையான பொதுவெளியில் அமைந்த கட்டிடத்தில் ஓடுகள் உடைந்து கிடக்கிறது. அதற்கு தற்காலிகமாக தார்பாய் கேட்டிருந்தனர். இதோ கொண்டுவருகிறேன் என்று சொல்லிச் சென்ற அரசு அதிகாரிகள் இதுவரை வரவில்லையாம்.

வேட்டைக்காரன் இருப்பு -போலிசு சாலை 


வேளாங்கண்ணி- வேதாரண்யம் பிரதான சாலைகளில் செல்வோர் அந்த பாதைகளை தவிர்த்து உள்பகுதி வழியாக செல்லவும். இல்லை என்றால் வரும் வண்டிகளை மறிக்க இது போல சில மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு தேவையானது கிடைத்து விட்டால் தேவைப்படுவோர்களுக்கு நிவாரணம் செல்ல விடுங்கள் என்று கூறினேன். அப்படித் தான் செய்கிறோம் என்றார்கள். நம்புவோம். நாலுவேதபதி, தேத்தாக்குடி போன்ற பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேவைக்கு மிகுதியாக இருக்கிறதாம். இதுவரை நிவாரணம் செல்லாத பகுதிகளை அடையாளம் கண்டு கொண்டு சென்று உதவுங்கள்

திருக்குவளை, கொளப்பாடு போன்ற பகுதிகளில் இதுவரை யாரும் செல்லவில்லை என்று நியு இந்தியா அச்சுரன்சை சேர்ந்த திரு. தங்கமணி கூறினார். அங்கு சூரிய ஒளி விளக்குகளும், தார்ப்பாயும் தேவை என்றார்
தொடர்பு : 9443603354

நாகப்பட்டினம்- ஆலமரம்- கஜாவின் கோரம்





நிறைய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு பஞ்சமின்றி வழங்கப்படுகிறது. ஆனால் தங்குவதும், இருட்டில் விடியலை எண்ணி உறக்கத்தை தொலைத்த மக்களும் எதிர்கால அச்சம் பீடிக்கப்பட்டவர்களுமாக காணப்பட்டனர்
திருப்பூண்டி சாலை 
இங்கு பெரும்பாலும் தண்ணீர் குடுவைகள் யாருக்கும் தேவைப்படுவது இல்லை. நிலத்தடி நீரை புழங்கும் மக்கள். ஆங்காங்கு குளங்களும் உள்ளன 
பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பிற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள் பணியில் உதவுவது வேலையை விரைவு படுத்தும். 
திருப்பூண்டி அருகே. புயல் மழையின் போது நனைந்த பாடப்புத்தகங்களை காயவைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து கல்லூரி திறக்கும் போது கட்டணம் செலுத்துவது எப்படி இயலும், எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிவிட்டதே என அழும் மக்கள். உதவிகள் பணமாக கிடைத்தால் அது முழுமை அடைய வாய்ப்பு உள்ளது .
நாட்டு ஓட்டு வீடுகள் ஓரளவு புயலில் தப்பித்துவிட்டது. சீமை ஓடு எனப்படும் தட்டு ஓட்டு வீடுகள் முழுதும் சேதம் ஆகிவிட்டது. ஒரு வீட்டை சரி செய்ய குறைந்தது ரூ. 25000 முதல்
ரூ. 50000 வரை ஆகும்.

நிறைவாக :

உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எது தேவை என்பதை விடுத்து நமக்கு எது கிடைக்கிறதோ அதை வண்டிகளில் வாங்கி நிரப்பி மக்களுக்கு உதவுகிறோம் என்று உங்கள் உழைப்பையும் வீண் செய்வதைக் காட்டிலும், அந்த மக்களுக்கு அடிப்படை கட்டுமானங்களுக்கு தேவையானதை (அனைத்தையும் ஒரே ஆளோ, இயக்கமோ செய்ய இயலாது) கூட்டு முயற்சியால் எதாவது ஒரு வீட்டை தத்து எடுத்து புனர் நிர்மாணம் செய்து தரலாம். கூறை வேயலாம்; அடுத்த மழையில் இருந்து காக்க தற்காலிக தார்பாய்கள், பாத்திரங்கள், போர்வை, பாய் போன்றவைகளை வழங்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக