வெள்ளி, 16 ஜனவரி, 2015

கவிதை:புதியதோர் உலகு


Read more : http://www.ehow.com/how_5946594_make-text-invisible-html-code.html ஆரணங்கு இல்லாத
அகிலமாக மாற்றிவிடு
அதன்முன்னே 
என் அன்னையை 
ஆணாக ஆக்கிவிடு

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

கவிதை: அட்டைகத்தி காதல்




மோடி மஸ்தான் கணக்கு -PMJDY

"நான்" ஆட்சிக்கு வந்து ௧௧(11) கோடி வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மன்மோகன் ஆட்சியில் ஏழைகள் வங்கிக்கு வரமுடிந்ததா?" என பெருமை பேசுகிறார் மோடி.

உண்மை என்னவென்றால் 11 கோடி கணக்கு என்பது முழுக்க முழுக்க பொய். என்ன செய்வீர்களோ எது செய்வீர்களோ,ஜனவரி 26 க்குள் அனைவருக்கும் PMJDY வங்கி கணக்கு ஆரம்பித்து விட்டோம் என்று எனக்கு கணக்கு காட்டவேண்டும் என்று கட்டளை வங்கியாளர்கள் மீது. அதனால் ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றிய புள்ளிவிவரங்களை அள்ளித்  தெளித்த அலங்கோலம் தான் இந்த 11 கோடி எண்ணிக்கை. இந்த 11 கோடியில் ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளவர்கள் 75 விழுக்காடு இருக்கும் கண்டிப்பாக.

பிரதம மந்திரி வங்கி கணக்கு என்று குறிப்பாக எந்த கணக்கும் பொதுவாக இல்லை வங்கிகளில். அதன் சிறப்பு அம்சங்கள் ஊடகங்களில் விளம்பரமாக வந்ததே தவிர வங்கிகளுக்கு தீர்மானமான வரையரை ஏதும் இல்லை. தினம் ஒரு சுற்றறிக்கை. நேற்று வந்ததை திருத்தம் செய்து மறுநாள் ஒரு சுற்றறிக்கை. முழுக்க முழுக்க குழப்பம்.

பிரதம மந்திரி வங்கிக் கணக்கின் குளறுபடி:

  • வங்கிகளுக்கு என்று சர்வீஸ் ஏரியா உள்ளது. அதில் உள்ளவர்கள் மட்டும் தான் அந்தந்த வங்கியில் கணக்கு தொடங்கலாமா இல்லை யார் வேண்டும் என்றாலும் எந்த வங்கியில் வேண்டும் என்றாலும் தொடங்கலாமா? இரண்டாவது சரி என்றால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? 
  • கணக்கு தொடங்க பணம் தேவை இல்லை. சரி... ருப்பியா அட்டை தருகிறீர்கள். அதற்கு ஆண்டு சந்தா உண்டா இல்லையா?
  • ஆதார் அட்டை இல்லாத கை எழுத்து போடாதவர்களுக்கும் ATM அட்டை உண்டு என்றீர்கள். அவர்கள் எப்படி பணம் எடுப்பார்கள்? அவர்கள் கை விரல் ரேகையை யார் பதிவு செய்து இருக்கிறார்கள்?
  • கணக்கு தொடங்கினால் காப்பீடு இலவசம் என்று பத்திரிகையில் அறிக்கை கொடுத்துவிட்டு, அது விபத்து காப்பீடு; அந்த காப்பீடும் ATM அட்டையை  45நாள்களுக்கு ஒருமுறை இயக்குபர்களுக்கு தான் அது பொருந்தும்  என்று உள்குத்து ஏன்? 
  • இந்த காப்பீடு கணக்கு தொடங்கிய உடனே நடைமுறைக்கு வருகிறதா?எந்த காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? 
  • இறுதியாக இந்த கணக்கை தொடங்கி அவர்களுக்கு என்ன லாபம்?



NO FRILL ACCOUNTS என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் 2004 இல் தொடங்கப்பட்டு பெரும்பாலான கிராம மக்களுக்கு  குறைந்த பட்ச இருப்பு கிடையாது என்கிற அடிப்படையில்வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு விட்டது. அதில் இது போன்ற குழப்பங்கள் ஏதும் இல்லை.

உண்மைகள் இப்படி இருக்கும்போது நான் தான் செய்தேன்; என்னால் தான் முடிந்தது என்று அகம்பாவம் பிடித்து ஆணவம் தலைக்கேற அறைகூவல் விடுவது தனது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை மோடி உணரவேண்டும். மக்களுக்கு உண்மையில் பயன் தரக்கூடிய திட்டங்களை எந்த குழப்பமும் இல்லாமல் நடைமுறைபடுத்த வேண்டும். விளம்பரம் தேடிக்கொள்ள ஆரம்பிக்கும் திட்டங்கள் மக்கள் பணத்தை விரயமாக்குமே தவிர எந்த பலனும் யாருக்கும் தராது-ஆட்சியாளர்கள் உங்களை தவிர. இந்த பிரதம மந்திரி வங்கிக்  கணக்கிற்கு எத்தனை கோடி விளம்பரங்கள்;செலவீனகங்கள்? அதனால் அடைந்த லாபம் என்ன? விளக்கமுடியுமா?


திங்கள், 8 டிசம்பர், 2014

எமது தேசம் தமிழ்த் தேசம்.

எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசம் தமிழ்த் தேசம்
எமது தேசிய இலக்கு இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு...!!!

தமிழீழமும் தமிழ்த் தேசமும் உதயமாகும் நாள் வெகு தூரம் இல்லை என்கிற இலட்சியத்தை முன்னெடுத்து பயணிப்போம்....

ஆங்கிலேயனிடமும் ஆரியனிடமும் அடிமைப்பட்டு கிடந்தது போதும். சுரண்டப்படும் ஒவ்வொரு தேசிய இனமும் எழுச்சி கொள்ளும்போது மூத்த குடி தமிழ்க் குடி வாளாதிருக்குமா?

வீறுகொண்டு எழுவோம்; தளைகளை கலைவோம்; சுயாதீன அரசை படைப்போம்!!!!

ஞாயிறு, 30 நவம்பர், 2014

பழைய எண்:தமாக- புதிய எண்:தமாக(மூ)




தேசியக் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரியத் தொடங்கினால் உடனே ஒரு குட்டி போட்டு அதற்கு மறைமுகமாக தாங்களே தலைவர்களை நியமித்து, அது ஏதோ முற்றிலும் தனக்கு விரோதமான கட்சி போன்ற மாயையை மக்களிடம் தோற்றுவித்து தங்களுக்கு இருக்கும் மிச்ச சொச்சம் வாக்களர்களை தக்க வைத்துக் கொள்ளும் சம்பிரதாயம் தான் இந்த தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) உதயம். 

இது கொக்கோ கோலாவும் ஸ்பிரைட்டும் வேறு வேறு என்று காட்டிய விளம்பர உத்தி. 

1996இல் தோன்றி 2002 இல் சில அமைச்சர் பதவிக்கு பேரம் பேசி அதற்கு விலையாக அவர்களே அதை மண்ணுக்குள் போட்டு கல்லறைக்குள் புதைத்ததை புதிய வர்ணம் பூசி இத்துப்போன மிதிவண்டியில் ஏற்றி மறதி மிக்க தமிழர் சந்தையில் விற்பனை செய்ய முனைந்து இருக்கிறார்கள் இந்த நவயுக அரசியல் வியாபாரிகள். 2009இல் தாங்கள் சார்ந்த காங்கிரசு கட்சி தமிழர்களை முள்ளிவாய்க்காளில் இனப்படுகொலை செய்து புதைத்த போது வராத வீரியம், 650 தமிழ் மீனவர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது வராத கோவம், ஐ.நா வில் ஆதரவாக இந்தியா வாக்கு அளித்த போது வராத ஆத்திரம், திடீரென்று வந்துள்ளது என்றால், காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? 

வலிமையான பாரதமாம்..!!! தமிழன் குருதியை உரிந்து குடித்து அது நன்றாக கொழுத்துப் போய் தான் உள்ளது. தமிழன் தான் சப்பாணியாக இருக்கிறான். இந்த அடிப்படையை கூட உணராத இவர்கள் தமிழர்களுக்காக போராட போகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் இருந்த போது தமிழனை நட்டு நிமிர்த்து விட்டார்கள்..இப்போது தூக்கி நிமிர்த்தப் போகிறார்களாம்!!! 

2016இல் ஒரு சில தொகுதிகளை வென்றெடுத்த பிறகு தாய்க்கட்சியோடு இணைந்து விடும் இந்த பன்றிகள் கூட்டம். ஒன்று மட்டும் சொல்லிகொல்கிறோம்...

இனி காங்கிரசு தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகள் போட்டாலும்...அதற்கு தமிழன் பரிசாக தருவது கள்ளிப்பால் மட்டுமே...!!!

tamil manila congress(moopanar) TMK GK VASAN G,K.Vasan new party