வெள்ளி, 27 மார்ச், 2020

பெல் (BHEL) பங்கிற்கும் கொரானாவிற்கும் என்னங்கடா சம்பந்தம் ?


பண மதிப்பிழப்பு, சேவை வரி, பொதுத்துறை வங்கிகளை மூடல், தனியாருக்கு தாரை வார்த்தல், நாட்டின் வளங்களை சுரண்டல் என அடுத்தடுத்து கேடுகளை செய்துகொண்டே 3மாதத்தில் வெறும் 15000 உயிர்களை கொன்ற வாயில்லா பூச்சியின் மேல் பழியை போடுவது என்ன நியாயம் ஆபிசர் ?

பொறுப்பும் பொதுநலனும்


ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஏமாற்றிய சாம்சங் எம்.30 எஸ்


நான் முதலில் ஆசஸ் மேச்ப்ரோ M1 (Asus Zenfone Max Pro M1) வைத்திருந்தேன். சுயம்பி கேமரா தரம் குறைவாக உள்ளதே என்றும் ஆசஸ் மின்கலத்தை விட சக்திவாய்ந்த பேட்டரி உள்ளதே என்றும் பிராண்ட் மதிப்பிற்காகவும் சாம்சங் எம் 30எஸ் (samsung Galaxy M30s) இப்போது தான் ரூ. 15000க்கு வாங்கினேன்.

ஆனால் சாம்சங் இப்படி ஏமாற்றும் என்று நினைக்கவில்லை. 6000mAh மின்கலம் ஆசஸின் 5000mAh நிற்கும் காலம் வரைக் கூட இல்லை. 

ஆசஸ் இல் ஒரு விழுக்காடு மின் திறனில் 6 நிமிடங்கள் யூடுப் காணொளியை 3G தரவில் பார்க்கலாம். ஆனால் சாம்சங்கில் வெறும் நான்கு நிமிட காணொளி பார்க்கும்போது 1% பேட்டரி கரைகிறது

ஆசஸில் மின்கலம் ஒரு போதும் சூடேறியதில்லை. ஆனால் சம்சங்கில் கொதிக்கிறது

ஆசஸில் சுயமி காமிரா பிளாஷ் இருக்கிறது. சாம்சங்கில் அதுவும் இல்லை.

ஆசஸ் எடையை விட சாம்சங் 8கிராம் அதிகம்

ஆசஸ்  ச்னாப்ட்ராகன் ப்ராசெஸ்சர். சாம்சங்கோ கார்டெக்ஸ்

ஆசஸ் அலுமினிய பின்பக்கம். இதில் இத்துப்போன நெகிழிக் குப்பை மட்டுமன்று. அதைவிட இது மொத்தமாகவும் உள்ளது.

சாம்சங் டைப் சி துரித சார்ஜர் என்று போட்டுள்ளார்கள். அதிலும் ஏமாற்றமே.  மூன்று மணி நேரம் ஆகிறது முழுமையாக மின்னேற்றம் செய்ய.

எனவே பட்ஜெட் பிரிவில் தரமான திறன் பேசி என்று ஏமாந்து வாங்கிவிடாதீர்கள்.

ஏமாற்றம் ..பண விரயமே 




வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவ கல்லூரிக்காக தேவையா போராட்டம்?

"நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி 12.12-2019 அன்று. போராட்டமாம்"

போராடி?
நம்ம வாழிடங்களை‌ விளைநிலத்தை தாரைவார்த்து, 
நம் வரிப்பணம் இந்திய அரசு கருவூலத்திற்கு சென்றுவிடுவதால். குடிகாரர்கள் தங்கள் குடும்பத்தை அழித்து தரும் பாவக்காசை வைத்து கட்டப்படும் கல்லூரியில் உன்பிள்ளையோ என்‌பிள்ளையோவா படிக்கப்போகுது? 
அதில் 99% - 
பணத்தை வாரி இறைத்து நீட்டுக்கு படித்த மேல்தட்டு மக்களும், தில்லு முல்லு செய்த தேர்வேறிய வடநாட்டானும் படிக்கப் போகிறார்கள். நம்ம பசங்க நீட் தேர்வு எழுதவே இங்கு இடம் இல்லையாம். ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும் தூக்கி அடிக்கிறானுங்க. இங்க எழுதுபவர்கள் தாலி சங்கிலி முதற்கொண்டு கழட்டி மன உளைச்சலில் உள்ளாக்கி தேர்வு கூடத்திற்கு அனுப்புகிறார்கள்
இந்த லட்சணத்தில கட்டட நிதி. அங்கு பணியாற்ற வரும் வந்தேறிகளுக்கு சம்பளம். என தேவையற்ற நிதிச்சுமை. அதை சமாளிக்க நம்ம வீட்டுக்குள்ளேயே டாஸ்மாக் திறப்பாங்க,
எச்சரிக்கை மக்கழே

செவ்வாய், 3 டிசம்பர், 2019

வெங்காயம்

நமக்கெதுக்குங்க
இந்த அரசியல்
என
ஒதுங்கி போனவர்களையும்
கிலோ 150க்கு வாங்க வைத்தது
வெங்காயம்