ஞாயிறு, 6 டிசம்பர், 2020
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
வெள்ளி, 4 டிசம்பர், 2020
இன்பத் தமிழ் -சேக்கிழார் உவமை நயம்
அறுபது மூவர் வாழ்க்கை வரலாற்றை ஒரு வரலாற்று அறிஞராக வடவேங்கடம் முதல் தென்குமரி வரை ஆய்வு செய்த ஆய்வறிஞர்- தில்லைச் சிற்றம்பலத்தை பொன்னால் வேய்ந்த 2ஆம் குலோத்துங்க சோழனின் முதன்மைஅமைச்சர் தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரிய புராணத்தில் = திருநின்ற சருக்கத்தில் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் எனை ஈர்த்த அழகிய கற்பனை நயமிக்க பாடல்
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலையச்செய்ய தளிர் நறு விரலின் செழு முகையின் நகம் சிறப்ப
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை.
வையம் மகள்.
மலர்ச் சோலையின் மரங்கள் அவள் கரங்கள்.
அவற்றைச் சுற்றிச் சூழும் கருவண்டு குலம், அவள் கரங்களில் குலுங்கும் நீல வளையல்களாம்,
மரங்களின் செந்தளிர்கள் அவள் விரல்கள்.
நகங்கள் தளிர்களில் நீண்டு ஒளிரும் நகங்கள்.
மரங்கள் வானளாவி ஓங்குதல், நிலமகள் தன் கையை நீட்டி வானுறு மதி எனும் கண்ணாடியை அணைத்தல் தன் மெய்யொளியின் நிழற்காணுதல் பொருட்டாம்.
அவற்றைச் சுற்றிச் சூழும் கருவண்டு குலம், அவள் கரங்களில் குலுங்கும் நீல வளையல்களாம்,
மரங்களின் செந்தளிர்கள் அவள் விரல்கள்.
நகங்கள் தளிர்களில் நீண்டு ஒளிரும் நகங்கள்.
மரங்கள் வானளாவி ஓங்குதல், நிலமகள் தன் கையை நீட்டி வானுறு மதி எனும் கண்ணாடியை அணைத்தல் தன் மெய்யொளியின் நிழற்காணுதல் பொருட்டாம்.
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி -கண்ணாடியில் காணும் ஒரு பொருளின் வடிவம் பிரதி பிம்பமே. காணும் பொருளின் ஒளி நிழலே என்பதும், நிலவின் தண்ணொளி , தன்னொளி அல்ல, அது கதிரவனின் இரவல் என்கின்ற நவீன கால வானவியல் அறிஞர்கள் முயன்று கண்ட உண்மைகளை அன்றே தங்கள் ஆன்ம சக்தியால் கண்டவர்கள் தமிழர்கள் என்பதும் புலப்படுவதோடு அந்த கற்பனை நயம் நம் அகக் கண்களை திறக்கிறது
தரவுத் தகவல்: www.tamilvu.org
தரவுத் தகவல்: www.tamilvu.org
வியாழன், 26 நவம்பர், 2020
தலைவர்66
தமிழினத்தின் ஒரே தலைவன்
தரணி போற்றும் மாமனிதன்
வாழ்க பல்லாண்டு
எடுத்தவுடன் ஆயுதத்தை எந்திடவில்லை. போதுமான அவகாசம் கொடுத்தார் சமாதானத்திற்கு. ஆயுதத்தை பன்னாட்டு உலகத்தின் முன்னிலையில் சமர்ப்பித்து நிராயுதபாணியாக நின்றார் இந்த வஞ்சக உலகத்தை நம்பி.
புதன், 25 நவம்பர், 2020
கொரானா சதியா இல்லை வியாதியா?
கொரானா காலத்தில் மட்டும் ப்ளூம்பெர்க் பட்டியலில் உள்ள உலக பணக்காரர்கள் சொத்துமதிப்பு 23% உயர்ந்துள்ளது. முதல் 500பேர் 96லட்சம் கோடி சொத்துக்கள் சேகரித்து உள்ளனர்.
இப்ப சொல்லு...கொரானா ஏழைகளை ஏழையாக்கும் நோயா? லட்சாதிபதிகளை கோடீஸ்வரனாக்கும் சதியா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











