வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழனுக்கு முள்வேலி; சிங்களவனுக்கு சிவப்பு கம்பளமா?

ஏ இந்தியமே...
சிங்களவனை நோக்கி நீ போகும் ஒவ்வோர் அடியும்
எங்கள் மனதிலுருந்து வெளியேறும் ஒரு மைல்கல்.
எங்களைக் கொன்றவன் உனக்கு பங்காளி என்றால்..
துணைபோன நீ எங்களுக்கு தூர தேசமே...

நீ வழக்கம்போல அலட்சியம் செய்ய 
இது எங்கள் கோரிக்கை அல்ல
அறுதியான இறுதி எச்சரிக்கை...


தோழர்களே...

இனப்படுகொலைகாரன் ராஜபக்சேவை பார"தீய" அரசு அழைப்பு விடுக்கிறது. அவனுக்கு  வங்காளி பிரணாப் தேநீர் விருந்து அளிக்கிறான். இத்தாலிய சூனியகாரியின் கைப்பாவை மக்கள் விரோத அரசை தலைமை ஏற்று நடத்தும் மன்மோகன் இரவு விருந்து வைக்கிறான். இது தான் தனது நாட்டு மக்களுக்கு ஜனநாயக நாடு என தன்னை பறைசாற்றிக் கொள்ளும் ஒரு நாடு செய்யும் துரோகம்.

நமது எதிர்ப்பை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துவோம். மேற்கண்ட படத்தை அல்லது துண்டு சீட்டையாவது கையால் எழுதி எதிர்வரும் 21.09.2012 அன்று நம் நெஞ்சினில் தாங்கி இனப்படுகொலைகாரனுக்கும் அவனை ஆதரிக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுப்போம்.

நமது கோரிக்கையை ஏற்று இனப்படுகொலைகாரனை வெளியேற்றாத இந்திய ஏகாதிபத்திய அரசை நமது நெஞ்சிலிருந்து வெளியேற்றுவோம்

வாழ்க தமிழ் தேசியம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக