சனி, 17 ஜனவரி, 2015

மாதொருபாகன்- பெருமாள்முருகன் - இலவச பதிவிறக்கம்



mathoru baagan mathorubagan maathorubaagan mathorupaagan mathorupagan perumal murugan perumalmurugan freedownload
‪#‎மாதொருபாகன்‬

பெருமாள் முருகனை வீழ்த்திய காவிகள் ,

அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியது. குழந்தைப் பேறில்லாத தம்பதியரின் துயரங்களைக் கூறுவதாகும். வழக்கமாக நாவல் என்பது வாழ்க்கையும், கற்பனையும் கலந்த கலவை தான். 


அந்தவகையில், திருச்செங்கோடு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவை முன்வைத்து மாதொருபாகன் நாவல் எழுதப்பட்டிருந்தது 2010 எழுத பட்டது. ஆனால், அந்த நாவல் 2015ல் சர்ச்சையில் சிக்கியது. காரணம் யார் அமைதியாக இருந்தாலும் காவிகளுக்கு பிடிக்காது, எனவே கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு பிறகு அந்த நாவலில் உள்ள ஒரு சில வரிகளை வைத்து இதுபோன்று நாட்டார் வழக்கு என்று பெருமாள் முருகன் குறிப்பிடுகிறார் இது அப்பட்டமான பொய் அப்படி ஒரு வழக்கமே எங்கள் சாதியில் இல்லை என்று காவி அர்ஜுன் சம்பத் மக்களிடம் சாதிய உணர்வை தூண்டி தனது அரசியல் அறுவடையை செய்ய பார்க்கிறார் . 


மக்களை பிளவுபடுத்தி இப்போது ஆர் எஸ் எஸ் ஒரு கொலைவெறி தாக்குதலை எழுத்தாளர் பெருமாள் முருகன் மேல் நடத்த திட்டமிட்டு பெருமாள் முருகனின் வீட்டை முற்றுகையிட்டு அந்த எழுத்தாளரை ஊரை விட்டே துரத்தி அடித்து இருக்கிறது.. பதிவிட்ட நூலைகளை பெருமாள் முருகன் திரும்ப பெறவேண்டும் என்கிறது அதற்க்கு அந்த எழுத்தாளர் இன்று பலியாகி இனி நான் எழுதுவதில்லை, நான் எழுதிய அனைத்து நூல்களையும் திரும்ப பெறுகிறேன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் , இனி முருகன் மட்டுமே வாழ்வான் என்கிறார் ,, நாவலை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர் நாங்கள் இல்லை என்று ஆர் எஸ் எஸ் இதில் இருந்து தப்பித்து கொள்ளல்லாம் என்று எண்ணுகிறது ஆனால் எழுத்தாளர் முற்போக்கு கலைஞர் சங்கம் தெளிவாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறது, பெருமாள் முருகன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சமுக அவலங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டு இருக்கிறார் , சமூகத்தில் உள்ள சாதி மத ஏற்ற தாழ்வுகள் ஒழிக்க பட வேண்டும் என்று தனது எழுத்தில் சொல்லி வருகிறார் எனவே நங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று அந்த சங்கம் ஆதரவளித்தும்... 

பாஜக அர்ஜுன் சம்பத் போன்றோர் மக்களை சாதியை பற்றி குறை சொல்லி ஒரு எழுத்தாளர் சொல்லி இருக்கிறார் என்று ஐந்தாண்டுகளுக்கு பிறகு கலவரத்தை தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சித்து கொண்டு இருக்கிறது , யார் எழுத்தாளர், காவி நொன்னைங்களா ? திமிறி எழும் சமுகமாக ஒரு சமுகத்தை மாற்ற எவன் எழுத்துகள் புரட்சி செய்கிறதோ அவன் எழுத்தாளன், 
எது விமர்ச்சனம் ? 

 என்னுடை எழுத்து தவறாக இருந்தால் நீயும் அதை எதிர்த்து ஒரு நூலை வெளியிடு அதுதான் எதிர்ப்பு ,அதை விட்டு விட்டு ஒரு சமூக அக்கறை கொண்ட எழுத்தாளரை எழுத விடாமல் முடக்கம் செய்வதால் அவரின் ஒடுக்க பட்ட மக்களின் வலியும் சமுக அக்கறையும் தெரியாமலே போய்விடும் காவி அரை ட்ரவுசருங்களா. இகழ்ச்சியான இந்துமத வருணாசிரம சமுகத்தை தனது நாகரிக கருத்துக்கள் மூலமாக அடுத்த சமுதாயத்தை பண்பட்ட நாகரிக சமூகமாக மாற்றுவதே ஒரு எழுத்தாளனின் கடமை அதை செய்தால் உங்கள் காவி வெளுத்துவிடும் என்ற பயமா ?

இந்த லட்சணத்தில் திருக்குறளை தேசிய அளவில் எடுத்துகொண்டு போறானுங்க.. டேய் பகவத் கீதையின் வருணாசிரமத்தை ஒழிக்க தாண்டா திருவள்ளுவர் திருக்குறளை படைத்தார் .. எழுதுவதால் தான் இந்துமதம் சிறுமை அடைகிறது என்றால் அதன்னுள்ளே உள்ள சத்தியம் என்ன ? ஒருவன் எழுதி விட்டால் உங்கள் மதம் அதால பாதலத்திற்கு போய்விடும் என்றால் உங்கள் வருணாசிரம கருத்துகள் எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக