செவ்வாய், 20 ஜனவரி, 2015

தமிழ் தேசியவாதிக்கு உதவுமாறு ஒரு கோரிக்கை


தோழர் சுரேசுகுமார் மூலமாக தமிழ் தேசிய பேரியக்க தஞ்சை நகரத் துணைச் செயலாளர் இரா. தமிழ்ச் செல்வன் எனக்கு அறிமுகமானார். 

தமிழ் மொழிக்காகவும் இனத்திற்காகவும் த.தே.பேரியக்கத் தலைவர் தோழர்.பே.மணியரசன் அவர்களுக்கு உறுதுணையாக 13 ஆண்டுகளாக களமாடிய தோழர் தமிழ்ச் செல்வன் அவர்கள் களப் போராட்டத்தில் இருமுறை சிறை சென்றுள்ளார். 

முல்லைப்பெரியாறு போராட்டங்களின் போதும் கேரளா வணிக நிறுவனங்கள் முன்பு ஆக்ரோசமாக மறியல் போராட்டம் செய்த உணர்வாளர். தஞ்சை வந்த இனக்கொலை நடத்தி குருதிக் கறை படிந்த புத்த பிட்சுகளை பெருவுடையார் கோயிலில் இருந்து வெளியேற்றிய தோழர்களில் முன்னின்று செயல்பட்டு அதற்காக சிறை சென்றவர் தோழர் தமிழ்ச் செல்வன். அவர் இரண்டு மாதங்களாக உயிருக்கு போராடி ருபாய். ஆறு லட்சம் வரை செலவு செய்து சற்று நினைவு திரும்பி உள்ளார். இன்னும் அவர் திருச்சி தில்லை நகரில் உள்ள "நியூரோ சென்டர்"இல் சிகிச்சை பெற்று வருகிறார். 

பழைய நிலைக்கு திரும்ப, மேற்கொண்டு ரூ.2 லட்சம் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது அவர் குடும்பம். நிரந்தர ஊதியம் ஏதும் இல்லாது அவர் மனைவியும் பச்சிளம் குழந்தையுடன் திணறுகிறார் தன் கணவர் உயிரை மீட்க.

தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாக வைத்து சொந்த லாபம் பார்க்காது உழைத்த அவருக்கு உங்களால் ஒரு சிறு தொகை அளிக்க முன்வந்தால் கூட அது பேருதவியாக இருக்கும். 

கீழே அவரது சொந்த வங்கிக் கணக்கு விவரமும், அவருக்காக நிதி திரட்டும் சக தோழர் சுரேசு குமார் அவர்கள் வங்கிக் கணக்கும் தந்துள்ளேன். முடிந்தால் உதவுங்கள். 

தோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசி எண்:9487868812 & 9750248812 
தில்லை நகர் நியூரோ சென்டர் மருத்துவ மனை எண்:0431-2740815 &2740865


உதவிய உள்ளங்கள் தங்கள் பெயர் விவரங்களை  கருத்துரைப் பெட்டி (comment box)இல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பின்னூட்டம்-28.01.2015

மேல் சிகிச்சைக்கான மருத்துவச் செலவிற்கான தொகையை வாரி வழங்கிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக