ஞாயிறு, 19 மார்ச், 2017

இளையராஜா கேட்டதில் என்ன தவறு?



நான் கட்டி வைத்த மண்டபத்தில் வந்து கல்யாணம் செஞ்சிக்கிறான். வாடகை எங்கடானு கேட்டா..தாலி கட்டினது நான்; சாந்தி முகூர்த்தம் பண்ண போறது நான்...உனக்கு எதுக்கு வாடகைனு கேட்கிறான்.

தமிழன் #இளையராஜா வின் அறிவுசார் சொத்தை ஆட்டைய போட்டு கொளுத்து வளருது தெலுங்கு பாலு குடும்பம்.

தட்டி கேட்டா தப்பா?.


இசைஞானி தரப்பில் உள்ள நியாயம் :

  • காப்புரிமை சம்பந்தமாக 2014 ஆண்டு முதலாக முறையாக அறிவிப்பு செய்துள்ளார் 
  • எஸ்.பி.பாலசுப்ரமணியம் "பாலு 50" நிகழ்ச்சியை நடத்தி தான தருமம் செய்யவில்லை. அத்தனையும் பணம் கொள்ளையிடும் மேல் தட்டு மக்களுக்கான நிகழ்ச்சி. இலவச அனுமதி இல்லை. 
  • இளையராஜா பாடல்களை நம்பி பிழைப்பு நடத்தும் இசைக்குழுவை இதுவரை நெருக்கடி செய்தது இல்லை. ஆனால் அவரின் அறிவுசார் உடைமையை மூலதனமாக வைத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் போது?
  • என் பாடலை பாட நீ குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என்று ஒரு போதும் நிர்பந்திக்கவில்லை. நீ ஈட்டுவதில் உரிய பங்கை செலுத்து என்று தான் கூறப்படுகிறது.
  • இளையராஜா நண்பர் என்பதற்காக பாலு இலவசமாக எந்த பாடலையும் பாடிக் கொடுக்கவில்லை
  • காப்புரிமை மூலம் வசூலிக்கப்படும் பணம் அனைத்தையும் இளையராஜாவே எடுத்துக் கொள்ள போவதில்லை. முறையே தயாரிப்பாளர்கள்,பாடலாசிரியர்கள்,பாடகர்கள் என அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும்
  • நம் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த பூவை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தாலோ, தோட்டத்து காய்கறியை ஏழை எளிவர்களுக்கு அளித்தாலோ நாம் உரிமை கோரப்போவது இல்லை. ஆனால்..அதை வைத்து நீ காசு பார்ப்பாய் என்றால்...?

    இது பாடகருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான காப்புரிமை பிரச்சனை. ஆனால் நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு தலையை நீட்டுகிறார் என்றால்...என்ன காரணம்..பாலு..தெலுங்கன் என்பது ஒன்று மட்டும் தான்.
காப்புரிமை சட்டத்தில் தெளிவாக உள்ளது..இசை அமைப்பாளருக்கே பாடலின் மீது முழு உரிமை உள்ளது என்று. குழந்தையை பிரசவித்த தாய்க்கு தான் அது சொந்தம்..மாறாக மருத்துவமனைக்கு அல்ல. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக