ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

அடிமையாக 75ஆண்டு. வா கொண்டாடலாம் தமிழா



ஒதுக்குப்புறமான பகுதியில் வசிக்கிறோம். ஒரு நாள் மழை பொழிந்தால் பத்து நாள்கள் வீட்டுச் சிறை தான். வடிகால் வசதி இல்லாததால் பகுதி முழுவதும் நீர் சூழ்ந்துவிடும்; சாலை வசதியும் இல்லை. இதற்கு முன்பு பஞ்சாயத்திடம் முறையிட்ட போது தேர்தல் நடக்காததால் தலைவர் இல்லையே என்று காரணம் சொன்னார்கள். தேர்தல் முடிந்து இன்றும் தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருநூறு மீட்டர் தொலைவு தான். நிலைமை இப்படி இருக்க, வீட்டுக்கு வீடு மூவர்ணக் கொடியை கொடுத்து விட்டு சென்றுள்ளான். கோவணம் கட்டுவதற்கா என்று தெரியவில்லை 

ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம். அதற்கு பிறகு இந்திக்காரனிடம். ஆண்டைகள் தான் மாறி உள்ளது. இன்னும் நம் கைவிலங்கு அப்படியே தான் உள்ளது. இந்த இலட்சணத்தில் விடுதலை நாள் கொண்டாட்டம் ஒரு கேடு 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக