ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

கல்விக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு?


படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு என்று சொல்கின்ற கண்ணதாசன் , பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்றும் தன்நிலையை மாற்றுகிறார். 

64ஆவது நாயன்மாராக விளங்கக் கூடிய வாரியார் சாமிகள் அடித்து சொல்கிறார். அறிவு வேறு படிப்பு வேறு என்று. அப்படி என்றால் நாம் பாடசாலையில் படித்து உணர்வது அறிவு இல்லையா என்றால், .....இல்லை. நான் உமர்கய்யாம் பற்றி படிக்கிறேன். அவரை பற்றி படித்ததால் தான் அறிய முடிகிறது.. அவர் காலம் 1048-1131 என்று அறிகிறேன். இது அறிவு ஆகாதா என்றால் ஆகாது. இன்றைக்கு அவருடைய காலத்தை கணித்தவர்கள் நாளை அவர் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று சொன்னால், நாம் கற்றதனால் பெற்ற அறிவு தவறாகி போகிறது. 

அதே போல நமது பாடத்திட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் 1857 என்று படிக்கிறோம். ஆனால் அது பொய். திரிக்கப்பட்ட வரலாறு. ஆக படித்து அறிவது அறிவாகாது. அறிவு என்பது உள்ளொளி. அதை அறியாமை என்கிற புற இருள் மூடி உள்ளது. கல்வி என்பது அந்த புற இருளை நீக்கும் ஒரு சாதனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக