வியாழன், 17 செப்டம்பர், 2020

#BanNEET

 

இன்று தாலி
நாளை இரவிக்கை
#BanNEET

திங்கள், 14 செப்டம்பர், 2020

#BanNeet #MuteNeet

 


நீட்டி முழக்க ஏதுமில்லை இனி,
பற்றி எரிகிறது தமிழ்நாடு
எங்கள் தம்பி தங்கைகளின் 
சிதைகளோடு
மலர வேண்டிய மலர்கள் 
போதிலே கருகுகிறது  
வீதிக்கு வீதி பறையோசையை மீறி
கேட்கிறது 
ஆரியர்களின் எக்காலச் சிரிப்பு மயிரு
விதையாக வேண்டியவரை  சிதைத்தது
விதி அல்ல.
ஆரியனின் சதி 
இனியும் ஒடுங்கி கிடந்தால் 
யாருக்கோ என ஒதுங்கி நடந்தால் 
நாளை 
உன் பிள்ளைக்கும் இது தான் கதி 




ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

#ஹிந்தி_தெரியாது_போடா

 


உங்களுக்கு தான் இங்கிலிஷ், எங்களுக்கு அது ஆங்கிலம்

உங்களுக்கு தான் ஹீப்ரு, எங்களுக்கு அது எபிரேயம்

இப்படி மொழிகளையே தமிழ்ப்படுத்திய எங்களுக்கு

#ஹிந்தி_தெரியாது_போடா

வியாழன், 3 செப்டம்பர், 2020

கொரானா-வங்கி வாடிக்கையாளர்கள் நிலை என்னவாகும்?

வங்கிகளில் நடப்பு பற்றுக் கணக்கு (OD/CC) வைத்திருப்பவர்களுக்கு செப் ஒன்றாம் தேதி ஆறு மாத வட்டி ஒரே நாளில் பற்று வைக்கப்படும். அப்படி சேர்க்கப்பட்ட வட்டியை 30செப் க்குள் கட்டத் தவறினால் அது வாராக்கடனாக மாறும். அதற்காக மேலாளர்களுக்கு இந்த ஆறு மாத வட்டியை ஆறு தவணைகளாக மாற்றி 31.03.2021க்குள் கட்ட வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய சொல்லி உள்ளது. கடந்த ஆண்டு பொரூளாதார மந்தம் காரணமாக தவறிய தவணையை தனிக்கணக்காக மாற்றி தள்ளி வைத்தார்கள். இப்போது வட்டியை தள்ளி வைக்க சொல்கிறது அரசும் சேமநல வங்கியும்.

இதனால் பொருளாதாரமும், வங்கிகளும் வீழ்வதோடு வாடிக்கையாளர்களை திரும்ப திரும்ப கடனில் சிக்கவைக்கப்பட்டு இந்த நாடு நாசமாக போகும் சூழல் மிக அருகில். 2008அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தது போல இந்திய வங்கிகள் வீழும். முன்பாவது வங்கிகள் சிறு சிறு வங்கிகளாக தனித் தனியாக இருந்தது. ஆனால் வங்கி இணைப்பு என்ற பெயரில் 27 வங்கிகள் 12 வங்கிகளாக மாறியுள்ள நிலையில் அரசுத் துறை வங்கிகள் வீழ்ச்சி கண் இமைக்கும் நொடியில் அமையப் போகிறது

புதன், 17 ஜூன், 2020

இந்தியா சீனா போர்

மகாபலிபுரம் சுவரில் அடிச்ச வண்ண பூச்சு கூட காயலே. ஜின் பிங் வந்தபோது இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை என்ன, துண்டறிக்கை கூட விடவில்லை. ஏன் வந்தார் எதற்கு வந்தார் என்கிற மர்மமே விலகலே. அதுக்குள்ளே போரா? என்னடா உங்களோட அக்கப்போரா இருக்கு.
சங்கி : போர் வந்தா தெரியும். சோத்துக்கு சிங்கி அடிப்பே

 தம்பு: ஆமா..இப்ப மட்டும் நாங்க கோட்டை கட்டி ஆண்டுக்கிட்டு இருக்கோம். போவியா