ஞாயிறு, 30 நவம்பர், 2014

பழைய எண்:தமாக- புதிய எண்:தமாக(மூ)




தேசியக் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரியத் தொடங்கினால் உடனே ஒரு குட்டி போட்டு அதற்கு மறைமுகமாக தாங்களே தலைவர்களை நியமித்து, அது ஏதோ முற்றிலும் தனக்கு விரோதமான கட்சி போன்ற மாயையை மக்களிடம் தோற்றுவித்து தங்களுக்கு இருக்கும் மிச்ச சொச்சம் வாக்களர்களை தக்க வைத்துக் கொள்ளும் சம்பிரதாயம் தான் இந்த தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) உதயம். 

இது கொக்கோ கோலாவும் ஸ்பிரைட்டும் வேறு வேறு என்று காட்டிய விளம்பர உத்தி. 

1996இல் தோன்றி 2002 இல் சில அமைச்சர் பதவிக்கு பேரம் பேசி அதற்கு விலையாக அவர்களே அதை மண்ணுக்குள் போட்டு கல்லறைக்குள் புதைத்ததை புதிய வர்ணம் பூசி இத்துப்போன மிதிவண்டியில் ஏற்றி மறதி மிக்க தமிழர் சந்தையில் விற்பனை செய்ய முனைந்து இருக்கிறார்கள் இந்த நவயுக அரசியல் வியாபாரிகள். 2009இல் தாங்கள் சார்ந்த காங்கிரசு கட்சி தமிழர்களை முள்ளிவாய்க்காளில் இனப்படுகொலை செய்து புதைத்த போது வராத வீரியம், 650 தமிழ் மீனவர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது வராத கோவம், ஐ.நா வில் ஆதரவாக இந்தியா வாக்கு அளித்த போது வராத ஆத்திரம், திடீரென்று வந்துள்ளது என்றால், காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? 

வலிமையான பாரதமாம்..!!! தமிழன் குருதியை உரிந்து குடித்து அது நன்றாக கொழுத்துப் போய் தான் உள்ளது. தமிழன் தான் சப்பாணியாக இருக்கிறான். இந்த அடிப்படையை கூட உணராத இவர்கள் தமிழர்களுக்காக போராட போகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் இருந்த போது தமிழனை நட்டு நிமிர்த்து விட்டார்கள்..இப்போது தூக்கி நிமிர்த்தப் போகிறார்களாம்!!! 

2016இல் ஒரு சில தொகுதிகளை வென்றெடுத்த பிறகு தாய்க்கட்சியோடு இணைந்து விடும் இந்த பன்றிகள் கூட்டம். ஒன்று மட்டும் சொல்லிகொல்கிறோம்...

இனி காங்கிரசு தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகள் போட்டாலும்...அதற்கு தமிழன் பரிசாக தருவது கள்ளிப்பால் மட்டுமே...!!!

tamil manila congress(moopanar) TMK GK VASAN G,K.Vasan new party 

குஷ்புவிற்கு பதிலடி



கட்டியவன் முன்னே கண்டவனையும் கட்டி அணைக்கும் நடிப்பை தொழிலாக கொண்ட உனக்கு, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தன் மகன்களை, குடும்பத்தை வளமான வாழ்வை தியாகம் செய்த தேசியத் தலைவரை இறைவனாக கொண்டு நடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்  பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தொழில் செய்து சம்பாதித்ததை காப்பற்ற, மாறி மாறி அரசியல் களம் புகும் உனக்கு , 
  • "இலட்சியத்தை விட்டுவிட்டால் இயக்கத்தை தடை செய்யவில்லை என்றபோது, இலட்சியம் இல்லை என்றால் இயக்கம் எதற்கு?" என்று தமிழின விடுதலை என்கிற ஒரே  கொள்கைக்காக இறுதிவரை உறுதியாக இருந்த 
  • முதலமைச்சர் பதவி தேடி வந்த போதும் கூட, தமிழின விடுதலை என்கிற ஒற்றை தாரக மந்திரத்தை விட்டு நழுவாத தலைவனின்

 விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேச சிறு தகுதி கூட இல்லை.  எது பேசினாலும் தமிழன் கண்டுகொள்ள மாட்டான் என்று நினைத்தனையோ? அந்த காலம் மலை ஏறி விட்டது. பேசிய வார்த்தைகளுக்கு உன்னை மன்னிப்பு கேட்க வைக்கும் காலம் வரும்.


திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று சொன்ன நீ, கட்டிய கணவன் அனுமதியோடு செய்தால் விபச்சாரமும் வியாபாரம் தான் என்றும் சொல்வாய்.

இந்த பிடாரிக்கு கோயில் கட்டி காட்டேரியை கருவறைக்குள் வைத்த அந்த முட்டாள் தமிழர்களுக்கு இதுவும் தேவை தான்...!!!

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வரமா? சாபமா?


முதுகு தேய்க்க இன்னொரு கை
வைத்திருந்தால் என்னவென்று
கடவுளை வைதேன்...

ஒன்றென்ன,,இரண்டாக வைத்துக் கொள் என

மனைவியை
அனுப்பி வைத்தார்...!!!

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெயாவின் தீர்ப்பு: அதிமுகவிற்கு தூக்கு

ஜெயலலிதா தான் அதிமுக; அதிமுக தான் ஜெயா. தீர்ப்பு 4 ஆண்டுகளுக்கு மேல் என்பதால் 10 ஆண்டுகளுக்கு இனி அரியணை ஏற இயலாது அம்மையாரால்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முரியீடு செய்யலாம். ஆனால் தீர்ப்பின் விளைவை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை; நால்வர் விடுதலை; ஈழம் ஒன்றே தீர்வு என்று அதிரடியான தீர்மானங்களை சட்டமன்றத்தில் தானே கொண்டுவந்து தீர்மானத்தை எடுத்ததால் தமிழர் மனதில் ஒரு ஏற்பு உண்டானது என்னவோ உண்மை தான். ஆனால் அதில் ஒன்றும் நனவாகவில்லை என்பது கசப்பான உண்மை. 

கடந்த மாதம் தன் தந்தைக்கு உடல் நலமில்லை என்பதற்காக பிணையில் விடுவிக்க நளினி முறையீடு செய்த போது உயிருக்கு அச்சுதல் என்று கூறி கடுமையாக எதிர்த்து தமிழக அரசு. தமிழக அரசு நினைத்து இருந்தால் 23 ஆண்டுகள் சிறையில் நான்கு சுவர்களை மட்டுமே பார்த்து காலம் தள்ளிய நளினி சிறிது நாட்களாவது விடுதலை காற்றை சுவாசித்து இருக்கமுடியும்.

இதை எல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் எழுந்துள்ள தமிழின எழுச்சி அலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும், தமிழீன கருணாநிதி மீது உள்ள எதிர்ப்பு அலையை பயன்படுத்திக் கொள்ளவும் போட்ட திட்டமோ என்ற நெருடல் உண்டாகிறது.

எது எப்படியோ..பெயரளவிற்காவது ஒரு தமிழன் ஆட்சி கட்டிலில் ஏற ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது.

இனி முதல்வர் கலந்து கொள்கிறார் என்று ஊருக்கு நடுவே கொட்டாய் போட்டு ஊரில் வசிப்பவர்களை ஓரிரவிற்கு சுடுகாட்டில் படுத்துக் கொள் என நிர்பந்திக்க மாட்டார்கள்.

1996இல் 53 கோடியில் திரட்டிய சொத்தின் இன்றைய மதிப்பு 1000கோடிக்கு மேலாம். 100 கோடி தண்டத் தொகை கட்டியது போக 900 கோடி லாபம் தானே.

இந்திய நாட்டின் நீதி என்னவென்றால் ஒருவர் எவ்வளவு வேண்டும் ஆனாலும் கொள்ளை அடிக்கலாம்; சொத்து சேர்க்கலாம்..கருணாநிதி போல. ஆனால் அவற்றை எல்லாம் தன் பெயரிலேயே இருக்கவேண்டும் என்று பேராசை கொள்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம் என்பதே.

வாழ்க இந்திய சனநாயகம்!!!


ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மோடியின் உளறலும் வங்கியாளர்களின் புலம்பல்களும்

 ராஜா தூங்கி எழுந்து உளறினால் அது மறுநாள் பத்திரிக்கையில் தலைப்பு செய்தி ஆகிவிடுகிறது. இந்திய பிரதமர் மக்கள் நிதிக் கணக்கு என்பதும் அது போலதான்.
(திட்டத்தின் பெயரும் இந்தியில் தான்)

அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது வரவேற்புக்கு உரியது தான். ஆனால் அதை மறுநாளே அடைந்து காட்ட வேண்டும் என்கிற நெருக்குதலும் அழுத்தமும் அந்த திட்டத்தை முற்றிலும் வெறும் புள்ளி விவர சாதனை திட்டமாகத் தான் மாற்றி உள்ளது.

எத்தனை கோடி மக்கள்.அவர்கள் புகைப்படம், இருப்பிடம். முகவரி இதை எல்லாம் சரி பார்த்து அனைவருக்கும் கணக்கு திறப்பது என்பது ஓர் இரவிற்குள் நடத்தி முடிக்கும் காரியம் இல்லை. இது போன்ற அழுத்தத்தால் நடந்தது என்ன தெரியுமா? பெரும்பாலான வங்கிகள் குடும்ப அட்டையில் உள்ள பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு "டம்மி" கணக்குகள் திறந்து...தங்கள் இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்து விட்டனர்.

இன்னும் சில வங்கியில் சாதாரண வங்கி ஊழியன் தரக்கூடிய கணக்கு புத்தகத்தை மேடை போட்டு தர எங்கோ மூலையில் இருக்கும் வங்கி போது மேலாளர் வருகிறார் (அதன் மூலம் வங்கி செலவில் சுற்றிப்பார்க்க)..எவன் அப்பன் வீட்டு காசு?

ஒருவருக்கும் உபயோகம் இல்லாமல் எத்தனை கோடி வீணாகிறது தெரியுமா?

அது...சரி. இந்த கணக்கை ஆரம்பித்து வைத்து அவர் என்ன சாதனை செய்ய போகிறார். அதற்கு எப்படி நிதி அளிக்க போகிறார். விபத்துக் காப்பீடு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது...இது எதற்கும் பதில் இல்லை.

அனைவருக்கும் ஏ.டி.எம். அட்டையாம். 5000,10000போட்டவனுக்கு ஆறாவது முறை மற்ற வங்கி இயந்திரத்தில் போய் பணம் எடுத்தல் ரூ.22.47 அபேஸ் செய்கிறாய். இவர்கள் முதியோர் ஓய்வூதியம் முழுதாக வாங்குவது உனக்கு பொறுக்கவில்லை. அதையும் பிடுங்கி உனது கார்பொரேட் முதலாளிக்கு சாசனம் எழுத சொல்ல நடத்துகிறாய் இந்த நாடகம்.

நீ உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் விஜய் மல்லையா, டெக்கான் குரோனிக்கிள் போன்ற ஏமாற்று பேர்வழிகள் வங்கிகளிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த வை...உனக்கு திறனிருந்தால்.

நீ வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை என்றால் 75%க்கு மேல் மதிப்பெண் இருந்தால் தான் வங்கியில் கல்விக் கடன் என்று அறிவி..பார்க்கலாம். முடியாது. ஏன் என்றால் கல்வி வியாபாரம் செய்பவன் உன் காலை நக்கி பிழைக்கும் நாய்களும் உனக்கு "ஸ்கெட்ச்" போட்டுக் கொடுக்கும் அரசியல் ஞானிகளும். வங்கிகளை கொள்ளை அடித்து அவர்கள் பையை நிரப்பும் வழிப்பறி அரசியல் நடக்கிறது என்பது இந்த மக்களுக்கு தெரியாத வரை உன் மோடி வித்தைகளை நாளும் நீ அரங்கேற்றலாம்.
  
வாக்குறுதிகளை அள்ளி தெளித்துவிட்டு அரியணை ஏறிய மன்னவன் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. அதற்குள் அடுத்த திட்டம் என்று ஒரு பரபரப்பை கிளப்பிவிட்டு சப்பானுக்கு சென்றுவிட்டான் கல்யாணராமன்
Read more : http://www.ehow.com/how_5946594_make-text-invisible-html-code.html(prime minister savings bank account scheme, pressure on bankers, modi's stunt)