செவ்வாய், 24 ஜனவரி, 2012

இந்திய குடியரசு நாள் தமிழர்களுக்கு உரித்தானதா?

காவிரி,முல்லைபெரியாறு போன்ற பிரச்சனைகளில் தமிழகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறியும் அதை நடைமுறைப் படுத்த இயலாத இந்திய தேசியத்தால்...


2011-2012 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவுகள் 85685 கோடி ருபாய் இருந்தும் தமிழக திட்டங்களுக்கு நடுவண் அரசின் நிதி ஒதுக்கீடு வெறும் 23535 கோடி மட்டும்.மற்ற மாநிலங்களுக்கு நூறு விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யும்போது,தமிழ்நாட்டிற்கு வெறும் 27% மட்டும் ஒதுக்கீடு செய்து மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடக்கும் தமிழின விரோதி இந்தியாவால்..


580க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுண்டைக்காய் நாடால் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் எதிர்த்து பேச திராணியற்ற, மதுரை உயர்நீதி மன்றத்தில் அது போன்ற நிகழ்வு நடந்ததற்கு ஆதாரமே இல்லை என பதில்மனு தாக்கல் செய்த பயனற்ற இந்திய தேசியத்தால்..

தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் விவசாய நிலங்களை அபகரித்து எழுப்பப்பட்ட நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தனது அண்டை மாநிலத்திற்கு விநியோகித்து தமிழ்நாட்டை இருட்டில் ஆழ்த்தும் ஓரவஞ்சனை செய்யும் இழிந்த இந்தியாவால்...

தமிழ் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்கும் இந்தி வெறிபிடித்த இந்திய தேசத்தால்...

தமிழனுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்காத நிலையில் நான் ஏன் குடியரசு தினத்தை கொண்டாட வேண்டும்?


இப்படிக்கு
சிந்திக்க ஆரம்பித்துள்ள செந்தமிழன் 

உங்கள் எண்ணக் குமுறல்களை முகநூலில் பதியுங்கள்-
http://www.facebook.com/photo.php?fbid=257648320974732&set=a.167620739977491.43547.100001886993662&type=1

(INDIAN REPUBLIC DAY -A MEANINGLESS DAY TO TAMIL PEOPLE)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக