ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

தமிழனுக்கு பாசிச இந்தியா விடுக்கும் சவால்-"அடுத்து என்ன?"


கூடங்குள அணு உலையை எதிர்த்து இது வரை அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது களங்கம் கற்பிக்கும் அராஜக அரசியல்வாதிகளை பார்த்து திருப்பி கேள்வி கேட்டால் "பிரதமரையே விமர்சிப்பதா?" என கேட்கிறது அவரின் கைத்தடி ஒன்று. 

அவரை பார்த்து நாம் கேட்பது "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்று ஒன்று உள்ளதே அது உனக்கு தெரியுமா?அதன் மையக் கருத்து என்ன என்பதாவது உனக்குத் தெரியுமா? அதன் முன் மக்கள் அனைவரும் சமம் என்பது தெரியுமா? மக்களால் மக்களுக்கு சேவை செய்யப்பட்ட பணியாள் தான் உனது முதலாளி என்பது உனக்கு தெரியுமா?

ஏன் இதுவரை உன் எசமானன் பொய்யே சொன்னது இல்லையா? அவர் என்ன அரிச்சந்திரனுக்கு அண்ணாத்தையா? இல்லே,சீசரின் சம்சாரமா?

மக்களின் வரி பணத்தில் ஊதியம் பெரும் காவல் துறையை அடியாளாக அமர்த்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களுக்கு எதிராக வன்முறையை மக்கள் மீது திணிகிறது.இது தான் இன்றைய சனநாயகத்தின் நெறிமுறை.

"கூடங்குளம் அணுஉலையை மூடக்கொரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த தமிழ் அடியார் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். கல்பாக்கத்தில் 2 அணுஉலைகளையும் மூட தமிழ் அடியார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஏற்கனவே தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு உள்ள நிலையில் மனுவை ஏற்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி இக்பால் , நீதிபதி அருணா ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளனர்"
மக்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் அணு உலையை மூட சொல்லி மனு அளித்தால்,ஏதோ இந்த அணு உலை வந்து தான் இருண்ட தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்த போவது போல,மனுவை விசாரிக்காமலே தள்ளுபடி செய்துள்ளனர் நீதி "அரசர்கள்".

இந்த அணு உலை வந்து முழுமையாக இயங்கினால் கூட 450MW கூட கிடைக்குமா என்பதே சந்தேகம். தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை 2500-3000MW.  பாமரனுக்கு தெரிந்த புள்ளி விவரம் கூடவா அவர்களுக்கு தெரியாமல் போனது?

இந்தியனும் சிங்களவனும் இணைந்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர்.இப்போது இந்தியன் ரசியனுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டு தமிழனை உயிரோடு புதைக்க திட்டம் தீட்டுகின்றனர்.




இந்திய ஏகாதிபத்தியம் தமிழனை பார்த்து நக்கலுடன் கேட்கிறது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக