புதன், 1 பிப்ரவரி, 2012

ஜெனீவா நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்!!!

மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது.
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது.
பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது.
கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.
ஞாயிறுக்கிழமை மாலை தமிழ்வர்தக மையமான லாசப்பல் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபயணத்தில் மேற்கொண்டுள்ள விடுதலைச் செயற்ப்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான இலக்கம் : 06 27 13 87 28
1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின்இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.
2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.
3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.
ஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.
நன்றி:மீனகம் 

ஜெனீவா நோக்கிய இந்த பயணத்திற்கு தலைவர்களின் வாழ்த்து செவ்விகள்

ஐ.நா. மன்றம் நோக்கிய நீதிக்கான நடைபயணம் - பெ.மணியரசன் செவ்வி! ஈழத்தமிழர் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ள தோழர்களை வாழ்த்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அளித்துள்ள நேர்காணல்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக