ஞாயிறு, 3 மே, 2020

உலங்கு ஊர்தி மூலம் மலர் தூவல்- தொடரும் நாடகம்

மருத்துவ உயர்படிப்புகளில் இடஒதுக்கீடு கேட்ட மருத்துவர்கள் போராட்டங்களை காவல்துறை கொண்டு அடக்கி, உளவுத்துறை மூலம் பொதுமக்கள் மத்தியில் எள்ளிநகையாட வைத்து, போராட உரிமை இல்லை என்று உரிமை பறிப்பு தீர்ப்புகள் எழுதவைத்து, செவிலியர் போராட்டங்களை கொடூரமாக அடக்கி அதில் ஒரு நிபந்தனையும் ஏற்கப்படாமல் அடக்கிவிட்டு இன்று அவர்கள் சேவையை மெச்சி துருப்பிடித்த உலங்கு ஊர்திகள் மூலம் மலர் தூவுகிறார்களாம். இது என்ன அரசாங்கமா? இல்லை சரஸ்வதி நாடக சபாவா? 

உரிமைகளை பறித்து அடக்கம் செய்து விட்டு மலர்வளையம் சூடுகிறது ஏகாதிபத்தியம். இதையும் நம்பி எம் மக்கள் கை தட்டுவார்கள்; அரசனின் புகழ் பாடுவார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக