வெள்ளி, 20 பிப்ரவரி, 2015
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
செவ்வாய், 20 ஜனவரி, 2015
தமிழ் தேசியவாதிக்கு உதவுமாறு ஒரு கோரிக்கை
தமிழ் மொழிக்காகவும் இனத்திற்காகவும் த.தே.பேரியக்கத் தலைவர் தோழர்.பே.மணியரசன் அவர்களுக்கு உறுதுணையாக 13 ஆண்டுகளாக களமாடிய தோழர் தமிழ்ச் செல்வன் அவர்கள் களப் போராட்டத்தில் இருமுறை சிறை சென்றுள்ளார்.
முல்லைப்பெரியாறு போராட்டங்களின் போதும் கேரளா வணிக நிறுவனங்கள் முன்பு ஆக்ரோசமாக மறியல் போராட்டம் செய்த உணர்வாளர். தஞ்சை வந்த இனக்கொலை நடத்தி குருதிக் கறை படிந்த புத்த பிட்சுகளை பெருவுடையார் கோயிலில் இருந்து வெளியேற்றிய தோழர்களில் முன்னின்று செயல்பட்டு அதற்காக சிறை சென்றவர் தோழர் தமிழ்ச் செல்வன். அவர் இரண்டு மாதங்களாக உயிருக்கு போராடி ருபாய். ஆறு லட்சம் வரை செலவு செய்து சற்று நினைவு திரும்பி உள்ளார். இன்னும் அவர் திருச்சி தில்லை நகரில் உள்ள "நியூரோ சென்டர்"இல் சிகிச்சை பெற்று வருகிறார்.
பழைய நிலைக்கு திரும்ப, மேற்கொண்டு ரூ.2 லட்சம் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது அவர் குடும்பம். நிரந்தர ஊதியம் ஏதும் இல்லாது அவர் மனைவியும் பச்சிளம் குழந்தையுடன் திணறுகிறார் தன் கணவர் உயிரை மீட்க.
தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாக வைத்து சொந்த லாபம் பார்க்காது உழைத்த அவருக்கு உங்களால் ஒரு சிறு தொகை அளிக்க முன்வந்தால் கூட அது பேருதவியாக இருக்கும்.
கீழே அவரது சொந்த வங்கிக் கணக்கு விவரமும், அவருக்காக நிதி திரட்டும் சக தோழர் சுரேசு குமார் அவர்கள் வங்கிக் கணக்கும் தந்துள்ளேன். முடிந்தால் உதவுங்கள்.
தோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசி எண்:9487868812 & 9750248812
தில்லை நகர் நியூரோ சென்டர் மருத்துவ மனை எண்:0431-2740815 &2740865
உதவிய உள்ளங்கள் தங்கள் பெயர் விவரங்களை கருத்துரைப் பெட்டி (comment box)இல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பின்னூட்டம்-28.01.2015
மேல் சிகிச்சைக்கான மருத்துவச் செலவிற்கான தொகையை வாரி வழங்கிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.
ஞாயிறு, 18 ஜனவரி, 2015
பக்கவிளைவு இல்லாத பாட்டி வைத்தியம்
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும்.மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்.
சனி, 17 ஜனவரி, 2015
மாதொருபாகன்- பெருமாள்முருகன் - இலவச பதிவிறக்கம்
mathoru baagan mathorubagan maathorubaagan mathorupaagan mathorupagan perumal murugan perumalmurugan freedownload
#மாதொருபாகன்
பெருமாள் முருகனை வீழ்த்திய காவிகள் ,
அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியது. குழந்தைப் பேறில்லாத தம்பதியரின் துயரங்களைக் கூறுவதாகும். வழக்கமாக நாவல் என்பது வாழ்க்கையும், கற்பனையும் கலந்த கலவை தான்.
அந்தவகையில், திருச்செங்கோடு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவை முன்வைத்து மாதொருபாகன் நாவல் எழுதப்பட்டிருந்தது 2010 எழுத பட்டது. ஆனால், அந்த நாவல் 2015ல் சர்ச்சையில் சிக்கியது. காரணம் யார் அமைதியாக இருந்தாலும் காவிகளுக்கு பிடிக்காது, எனவே கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு பிறகு அந்த நாவலில் உள்ள ஒரு சில வரிகளை வைத்து இதுபோன்று நாட்டார் வழக்கு என்று பெருமாள் முருகன் குறிப்பிடுகிறார் இது அப்பட்டமான பொய்
அப்படி ஒரு வழக்கமே எங்கள் சாதியில் இல்லை என்று காவி அர்ஜுன் சம்பத் மக்களிடம் சாதிய உணர்வை தூண்டி தனது அரசியல் அறுவடையை செய்ய பார்க்கிறார் .
மக்களை பிளவுபடுத்தி இப்போது ஆர் எஸ் எஸ் ஒரு கொலைவெறி தாக்குதலை எழுத்தாளர் பெருமாள் முருகன் மேல் நடத்த திட்டமிட்டு பெருமாள் முருகனின் வீட்டை முற்றுகையிட்டு அந்த எழுத்தாளரை ஊரை விட்டே துரத்தி அடித்து இருக்கிறது.. பதிவிட்ட நூலைகளை பெருமாள் முருகன் திரும்ப பெறவேண்டும் என்கிறது அதற்க்கு அந்த எழுத்தாளர் இன்று பலியாகி இனி நான் எழுதுவதில்லை, நான் எழுதிய அனைத்து நூல்களையும் திரும்ப பெறுகிறேன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் , இனி முருகன் மட்டுமே வாழ்வான் என்கிறார் ,,
நாவலை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர் நாங்கள் இல்லை என்று ஆர் எஸ் எஸ் இதில் இருந்து தப்பித்து கொள்ளல்லாம் என்று எண்ணுகிறது ஆனால் எழுத்தாளர் முற்போக்கு கலைஞர் சங்கம் தெளிவாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறது, பெருமாள் முருகன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சமுக அவலங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டு இருக்கிறார் , சமூகத்தில் உள்ள சாதி மத ஏற்ற தாழ்வுகள் ஒழிக்க பட வேண்டும் என்று தனது எழுத்தில் சொல்லி வருகிறார் எனவே நங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று அந்த சங்கம் ஆதரவளித்தும்...
பாஜக அர்ஜுன் சம்பத் போன்றோர் மக்களை சாதியை பற்றி குறை சொல்லி ஒரு எழுத்தாளர் சொல்லி இருக்கிறார் என்று ஐந்தாண்டுகளுக்கு பிறகு கலவரத்தை தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சித்து கொண்டு இருக்கிறது ,
யார் எழுத்தாளர், காவி நொன்னைங்களா ?
திமிறி எழும் சமுகமாக ஒரு சமுகத்தை மாற்ற எவன் எழுத்துகள் புரட்சி செய்கிறதோ அவன் எழுத்தாளன்,
எது விமர்ச்சனம் ?
என்னுடை எழுத்து தவறாக இருந்தால் நீயும் அதை எதிர்த்து ஒரு நூலை வெளியிடு அதுதான் எதிர்ப்பு ,அதை விட்டு விட்டு ஒரு சமூக அக்கறை கொண்ட எழுத்தாளரை எழுத விடாமல் முடக்கம் செய்வதால் அவரின் ஒடுக்க பட்ட மக்களின் வலியும் சமுக அக்கறையும் தெரியாமலே போய்விடும் காவி அரை ட்ரவுசருங்களா.
இகழ்ச்சியான இந்துமத வருணாசிரம சமுகத்தை தனது நாகரிக கருத்துக்கள் மூலமாக அடுத்த சமுதாயத்தை பண்பட்ட நாகரிக சமூகமாக மாற்றுவதே ஒரு எழுத்தாளனின் கடமை அதை செய்தால் உங்கள் காவி வெளுத்துவிடும் என்ற பயமா ?
இந்த லட்சணத்தில் திருக்குறளை தேசிய அளவில் எடுத்துகொண்டு போறானுங்க.. டேய் பகவத் கீதையின் வருணாசிரமத்தை ஒழிக்க தாண்டா திருவள்ளுவர் திருக்குறளை படைத்தார் ..
எழுதுவதால் தான் இந்துமதம் சிறுமை அடைகிறது என்றால் அதன்னுள்ளே உள்ள சத்தியம் என்ன ? ஒருவன் எழுதி விட்டால் உங்கள் மதம் அதால பாதலத்திற்கு போய்விடும் என்றால் உங்கள் வருணாசிரம கருத்துகள் எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




