புதன், 25 ஜனவரி, 2012

மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்கம்!!!

இன்று திமுக சார்பில் எங்கள் ஊரில் நடந்த மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்க கூட்டத்திற்கு சென்று இருந்தேன். யார் நடந்தினால் என்ன, எதற்கான கூட்டம் என்பது தானே முக்கியம் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு பங்கேற்க சென்றேன், நம் மொழிக்காக இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம் செய்ய.

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி"..."பாம்பும் பல்லியும் படுத்து உறங்கும் பாளையங்கோட்டை சிறையில் வாடிய கலைஞர்" என ஹனீபா சிலாகித்து பாடிக் கொண்டு இருந்தார். மொழிப்போர் தியாகி பற்றியோ, தமிழின பெருமை சொல்லும் பாடலோ இல்லாமல் இது என்ன என்று என் மனதிற்குள் கேள்வி.

6மணிக்கு ஆரம்பம் என அறிவிப்பு செய்து, மணி 7.30ஆகியும் கூட்டமே இல்லையே..நாம் போய் இருக்கையில் அமர்ந்து ஆதரவு கொடுப்போம் என உள்ளே சென்றால் சாராய நெடி.நொறுக்கு தீனி விற்போர் அவசர அவசரமாக கடை விரிக்க ஆரம்பித்தனர்(தமிழின உணர்வு கூட்டம் என்றால்..அரங்கிற்கு வெளியே நூல்கள்,குறுந்தகடுகள் விற்பார்கள். ஆனால் கழக கூட்டங்களில் மட்டும் ஏன் நிலக்கடலையும் காரசாரமான முறுக்கும் விற்கிறார்கள் என அப்போது தான் புரிந்தது)

ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் கூட்டம் 8மணிக்கு ஆரம்பம் ஆனது. கரைவேட்டிகள் மேடை ஏறினர்.

"..வேண்டும் என்றே கைது நடவடிக்கைகள், பொய் "கேசுகள்" என ஜெயலலிதாவின் அட்டூழியம் பெருகிக் கொண்டே போகிறது,விரைவில் திமுக ஆட்சி மலரும்" என மொழிப்போர் தியாகிகள் கூட்டதிற்கு கழக உடன்பிறப்பு ஒன்று வரவேற்புரை நிகழ்த்தியது.

அடுத்து பேசியவர் "நீ ஏன் உன் கட்சி கூட்டத்தில் தலைவரின் தத்துவ பாடலை போடுகிறாய், 17வயசில இளநி விற்ற பாட்டை போடவேண்டியது தானே" என கூட்டத்தின் மையக்கருவிற்கு மக்களை இழுத்துச் சென்றார்.

இனி இங்கிருந்தால் "மொழிப் போர் என்றால் என்ன..அது எந்தெந்த கட்சிகளுக்கு இடையே,எந்த நூற்றாண்டில் யார் தலைமையில் நடந்தது" என்ற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழலாம் என அபாயம் உணர்ந்து கூட்டத்தை விட்டு கூடு நோக்கி பறந்தேன்.


முகநூலில் பின்னூட்டம் இட இதை சொடுக்கவும்:
  1. http://www.facebook.com/pulikkodi/posts/259004227505808
  2. http://www.facebook.com/groups/ulagath.tamilar.ondriyam/290716150984879/



மொழிப்போர் சிந்தனைக்காக,தன் உயிர்நீத்த ஈகிகள் நினைவேந்தளுக்காக கீழே சில கட்டுரைகள்

மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!

1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி மடிந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 25 அன்று 'மொழிப்போர் ஈகியர்' நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியரின் நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தி, தமிழ்மொழி காக்க சூளுரை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாண்டும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.



வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றிய​மையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்!” – காந்தி தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது! அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.
‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌர​விக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா? ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா?
தாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்​கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக! மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

இந்திய குடியரசு நாள் தமிழர்களுக்கு உரித்தானதா?

காவிரி,முல்லைபெரியாறு போன்ற பிரச்சனைகளில் தமிழகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறியும் அதை நடைமுறைப் படுத்த இயலாத இந்திய தேசியத்தால்...


2011-2012 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவுகள் 85685 கோடி ருபாய் இருந்தும் தமிழக திட்டங்களுக்கு நடுவண் அரசின் நிதி ஒதுக்கீடு வெறும் 23535 கோடி மட்டும்.மற்ற மாநிலங்களுக்கு நூறு விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யும்போது,தமிழ்நாட்டிற்கு வெறும் 27% மட்டும் ஒதுக்கீடு செய்து மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடக்கும் தமிழின விரோதி இந்தியாவால்..


580க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுண்டைக்காய் நாடால் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் எதிர்த்து பேச திராணியற்ற, மதுரை உயர்நீதி மன்றத்தில் அது போன்ற நிகழ்வு நடந்ததற்கு ஆதாரமே இல்லை என பதில்மனு தாக்கல் செய்த பயனற்ற இந்திய தேசியத்தால்..

தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் விவசாய நிலங்களை அபகரித்து எழுப்பப்பட்ட நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தனது அண்டை மாநிலத்திற்கு விநியோகித்து தமிழ்நாட்டை இருட்டில் ஆழ்த்தும் ஓரவஞ்சனை செய்யும் இழிந்த இந்தியாவால்...

தமிழ் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்கும் இந்தி வெறிபிடித்த இந்திய தேசத்தால்...

தமிழனுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்காத நிலையில் நான் ஏன் குடியரசு தினத்தை கொண்டாட வேண்டும்?


இப்படிக்கு
சிந்திக்க ஆரம்பித்துள்ள செந்தமிழன் 

உங்கள் எண்ணக் குமுறல்களை முகநூலில் பதியுங்கள்-
http://www.facebook.com/photo.php?fbid=257648320974732&set=a.167620739977491.43547.100001886993662&type=1

(INDIAN REPUBLIC DAY -A MEANINGLESS DAY TO TAMIL PEOPLE)

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சாந்தவேலுவை கொன்ற மலையாளிகளை திருப்பி அடி



அடங்கி கிடந்தவன் தமிழன் என்ற நிலை மாற 
அடிமை விளங்கை அறுத்தெறி-வீதி தோறும் 
வீறு கொண்டு நீ எழு
வீழ்ந்த இனம் வாழத் தலைப்படு!!!

ஏய் இந்திய இயலாமையே..மன்னிக்கவும் 
இந்திய இறையாண்மையே 
அடித்தவனை திருப்பி அடிப்பது வன்முறை என்றால் 
திருப்பி அடித்தவனை சிறையில் தள்ளும் முன்
ஆரம்பித்து வைத்தவனுக்கும் சிறையில் அறை ஒதுக்கு!!!

அப்பாவி தமிழர்க்குதிரு.சாந்தவேலுவிற்கு இழைக்கப் பட்ட இந்த அநீதியை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் (தினமணி,சத்தியம் தொ.கா.தமிழன் தொ.காவை தவிர) புறக்கணித்துவிட்ட நிலையில் இந்த மலையாள இனவெறியர்களின் படுபாதக கொலையை மக்களிடம் கொண்டு செல்வோம்!!!

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி
மலையாள இனவெறியார்களால் வெந்நீர் ஊற்றி கொல்லப்பட்ட, தமிழக அய்யப்ப பக்தர் சாந்தவேலு அவர்களுக்கு வீரவணக்கங்கள்!

திருவேற்காடில் அமைந்துள்ள தோழரின் வீட்டு எண்: 5, திருவேங்கடம் நகர்(திருவேற்காடு பேருந்து நிலையம் அருகில்)

மலையாள இனவெறிக்கு பலியான தோழருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் அவரது இல்லத்தில் திரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!

சபரிமலை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவரை, தேநீர் பாய்லரில் இருந்த கொதி நீரை ஊற்றிக் கொன்றுள்ளனர் மலையாள இனவெறியர்கள்! அவரது உடல் கோட்டயம் மருத்துவமனையிலிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது! அங்கு தற்போது, பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது...!

கீழ்ப்பாக்கத்தில் பணிபுரியும் மலையாள இன்ஸ்பெக்டர் ஒருவர் இவ்வழக்கை விபத்தாக பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்! சென்னை தமிழ் உணர்வாளர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைய வேண்மென கேட்டுக் கொள்கிறோம்!

தொடர்புக்கு: வழக்கறிஞர் கோகுல் 9444849484,
 9841949462



தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள்


சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது,பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது. கோட்டையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவருடைய மனைவியும் உறவினர்களும் ஆம்புலன்சு வண்டியில் கொண்டுவந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11.1.2012 அன்று சேர்த்துள்ளனர்.

அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை இறந்துவிட்டார். விபத்து என்ற அடிப்படையில் இவருக்குக் கோட்டையத்திலும் சென்னையிலும் சிகிச்சை அளித்துள்ளனர். இனி இதைக் கொலை வழக்காக (302) மாற்றி, வெந்நீர் ஊற்றிய மலையாள நபரையும், அதில் இன்னும் தொடர்புள்ள மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். 

சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்திரன் என்ற மலையாளி குருசாமியாக இருந்து மேற்படி சாந்தவேல் உள்ளிட்ட 80 பேரை சபரி மலைக்கு அழைத்துப்  போயுள்ளார். மேற்படி சந்திரன் உண்மை விவரங்களை முழுமையாகச் சொல்ல மறுத்து வருகிறார். சந்திரனை காவல்துறை விசாரித்து நடந்த உண்மைகளைப் பெற வேண்டும். மேலும் சாந்தவேலுடன் தமிழகத்திலிருந்து சென்ற இதர ஐயப்ப பக்தர்களையும் விசாரிக்க வேண்டும். 

இரு மாநிலங்களைச் சேர்ந்ததாக இவ்வழக்கு இருப்பதால் தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இதில் தலையிட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து, சாந்தவேல் மீது வெந்நீர் ஊற்றி சாவுக்குக் காரணமான காயங்களை உண்டாக்கிய மலையாளத் தேநீர்க் கடைக்காரர்  உள்ளிட்ட நபர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கைது செய்து வழக்கு நடத்த கேரள அரசை வலியுறுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கேரளாவில் அண்மைக் காலமாக ஐயப்ப பக்தர்கள் உள்பட அப்பாவித் தமிழர்கள் பலர் மலையாளிகளால் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது கேரள அரசு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. கேரள அரசின் இவ்வாறான மலையாள இனச் சார்பு நிலை, மலையாளிகள் மேலும் மேலும் தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதைத் தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, சாந்தவேல் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


பம்பையில் சுடுநீர் ஊற்றப்பட்ட ஐயப்ப பக்தர் சாவு




பம்பையில் சுடுநீர் ஊற்றப்பட்டு காயத்துடன் சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் சாந்தவேல் (39). இவருக்கு சித்ரா (30) என்ற மனைவியும், தக்சனா (12), சஞ்சனா (9) ஆகிய மகள்கள் இருக்கின்றனர். பிளம்பராக பணியாற்றிவந்த சாந்தவேல், முதன்முறையாக சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்தார்.
இந்நிலையில் முகப்பேரைச் சேர்ந்த சந்திரகுருசாமி தலைமையில் சாந்தவேல் உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழுவினர் ஜனவரி 6-ம் தேதி சபரிமலை புறப்பட்டனர். ஜனவரி 7-ம் தேதி பம்பையில் உள்ள டீக்கடையில் ஏற்பட்ட தகராறில் சாந்தவேல் மீது டீக்கடைக்காரர்கள் சுடுநீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த சாந்தவேல் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கேரள மாநில போலீஸார் ஜனவரி 8-ம் தேதி சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் ஜனவரி 9-ம் தேதி சித்ரா உள்பட உறவினர்கள் கோட்டயம் சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சாந்தவேலை அழைத்து வந்த உறவினர்கள் கடந்த 11-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜனவரி 15-ம் தேதி சாந்தவேல் உயிரிழந்தார்.
இதற்கிடையில் சந்திரகுருசாமி தலைமையில் சபரிமலைக்குச் சென்ற மற்றவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர். அவர் சென்ற குழுவில் சாந்தவேல் புது நபர் என்பதால் அந்தக் குழுவில் உள்ள யாரையும் இதற்கு முன்பு தெரியாதாம். இதனால் உடன் வந்த அவரைக் குறித்த தகவல் அறியாமலேயே மற்ற ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பிவிட்டதாகவும் கூறப்
படுகிறது.
இந்நிலையில் சாந்தவேலின் அண்ணன் பொன்வேல் கொடுத்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமியிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து பம்பையில் விசாரணை நடத்தும் வகையில் தேனியில் இருந்து 3 பேர் கொண்ட போலீஸ் குழு அனுப்பப்பட உள்ளதாகவும் மேற்கொண்டு கேரள போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

(SANDHAVELU MURDER,SAANDHAVELU MURUDERED)

சனி, 10 டிசம்பர், 2011

மின்னஞ்சல் அனுப்புங்கள்-த.தே.பொ.கட்சி தோழர்களை விடுவிக்க..

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தோழர் அருணபாரதி தலைமையில் சென்னை தியாகராய நகரில் மலையாளிகளின் ஜோசு ஆலுக்காஸ் நகைக் கடை முன்னே 07.12.2011 அன்று அமைதியான முறையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

அன்று மாலையே தோழர் அருணபாரதி மற்றும் த.தே.பொ.கட்சித் தோழர்கள் இதர ஐவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது தமிழக அரசின் பொறுப்பான,"வெப்பன் சப்ளையர்" என நரிக்குறவர் திரு.சேகர் அவர்களை தாம்பரத்தில் கைது செய்த அதே கடமை தவறாத சீர்மிகு காவல் துறை.

இதற்கிடையில் சைதாப்பேட்டையில் மலபார் உணவகம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் உண்மையானவர்களை கண்டுபிடிக்க முடியாததால் சிறையில் உள்ள நமது தோழர்களின் மீது அந்த குற்றச்சாட்டை சுமத்தி சிறை வாசத்தை நீட்டித்து உள்ளது தமிழக காவல் துறை.

தோழர்களே...

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான,இட்டுக் கட்டிய,ஜோடிக்கப்பட்ட வழக்கு. செய்த குற்றத்திற்கு சிறை செல்ல தயங்காதவர்கள் நமது தோழர்கள்.ஆனால் செய்யாத குற்றத்திற்காக த.தே.பொ.கட்சித் தோழர்களை சிறையில் தள்ளியதை கண்டித்து,அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசின் முதல்வர் செல்லுக்கு உடனடியாக மின்னஞ்சல் அனுப்புங்கள். 

தமிழர்களுக்காக,மூவர் உயிர்காப்பு,அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணை காப்பு அன தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடத்தி வரும் நமது கட்சி,சிறைவாசம் அனுபவிக்கும் தோழர்களை பிணையில் வெளிக் கொண்டுவரக் கூட முடியாத பொருளாதார சிக்கலில் உள்ளது. எனவே தாங்கள் அனுப்பும் மின் அஞ்சல் பேருதவியாக இருக்கும்.
------------------------
***************************************************************
பெறுதல்:  cmcell@tn.gov.in

பொருள்: பொய் வழக்கில் சிக்குண்ட தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை விடுவிக்கக் கோரி.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,


முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக அமைதியான முறையில் 07.12.2011 அன்று தி.நகரில் முற்றுகை போராட்டம் நடத்திய தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் அருணபாரதி உட்பட ஆறு பேர் , சைதாப்பேட்டை மலபார் உணவகம் சேதப்படுத்தப் பட்ட வழக்கில் பொய்யாக புனையப்பட்டு புழலில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை தாங்கள் தலையிட்டு விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு 

_____________

*******************************************************************

இதை அப்படியே நகல் எடுத்து உடனடியாக மின்னஞ்சல் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பின் நிகழ்வு:15-12-2011
ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம்- த.தே.பொ.கவினருக்கு ஜாமீன்:

இதற்கிடையே சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் நிபந்தனை 
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பில், மலையாளிகளை வெளியேறக்கோரி சென்னையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை மாளிகை முன்பு க.அருணபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் 6 பேர் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப் போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து சிறைக்காவல் ஆணை பெற்றனர்.

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே 7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூறையாடியதாகவும், அக்கடைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக்காயம் உண்டாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப் பொய்யானது, வேண்டுமென்றே காவல்துறையினரால் புனையப்பட்டது என்று ழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையினான வழக்கறிஞர் குழு 14.12.2012 எழும்பூர் நீதிமன்றத்திலும், சைதை நீதிமன்றத்திலும் வாதிட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கற்புக்கு விலை நிர்ணயம்-தமிழக அரசின் புதிய சாதனை

தமிழக பெண்களின் கற்புக்கு தமிழக அரசின் புதிய விலை நிர்ணயம்

காவல்துறையால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட இருளர் இனப் பெண்கள் நால்வருக்கு தலா ரூ.ஐந்து லட்சம் விலை பேசி தமிழக பெண்களின் கற்புக்கு அம்மா அவர்கள் புதிய விலை நிர்ணயம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிவாரணத்தை தமிழக அமைச்சர் அளித்த பொழுது அந்த அப்பாவிப் பெண்கள் தமிழக முதல்வர் "புரட்சி" தலைவிக்கு நன்றிகள் கூறிய பொழுது "நீதி" நிலைநாட்டப்பட்டதைக் கண்டு உண்மையிலேயே கண்கலங்கியது.

விவசாயியின் விளை பொருள்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய முடியாத வக்கற்ற நாடாக இந்தியா உள்ளது என கவலையுற்றிருந்தேன்.ஆனால் மாண்புமிகு தமிழக முதலவர், பெண் இனக் காவலர் தமிழக பெண்களின் கற்புக்கு ஒரு நல்ல விலை நிர்ணயம் செய்து உள்ளது பாராட்டத்தக்கது.


மக்கள் அனைவரும் சமம் எனக்கூறும் கேடுகெட்ட இந்திய சனநாயக நாட்டில் இது தான் நிவாரணமோ? 

  • நிவாரணம் அளிக்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. யாருடைய பணத்திலிருந்து இது அளிக்கப்படுகிறது? இந்த அப்பாவிப் பெண்களுக்கு யாரால் பாதிப்பு வந்ததோ அவர்களின் ஊதியத்தில் இருந்து, சொத்துக்களை பறிமுதல் செய்து அல்லவா இந்த நிவாரணம் அளிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை,காணொளிகளை விளம்பரம் செய்து இதில் கூட தங்களின் வருமானத்தைப் பார்க்கும் ஊடகங்கள்,குற்றம் சுமத்தப்பட்ட காவலர்களின் முகங்களை வெளியிடவில்லையே,ஏன்?
  • குற்றம் செய்த காவலர்கள் பணி இடை நீக்கம் மட்டும். அய்யகோ...குற்றம் சாட்டப்பட்ட தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழன் வாழ்ந்த நாட்டில் இவ்வளவு கொடிய தண்டனையா?காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அம்மா அவர்களே..மறுபரிசீலனை செய்து அவர்களுக்கு பதவி உயர்வு தாருங்கள்.
முன் நிகழ்வுகள்:
இருளர் இனப் பெண்கள் மீது பொலிஸார் வன்புணர்வு-நன்றி BBC-தமிழோசை 
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் அண்மையில் போலீசாரில் வன்புணர்ச்சிக்குள்ளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இச் சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்கியிருக்கிறது. ஆயினுங்கூட அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, மத்திய புலனாய்வுத் துறை, சிபிஐயின் விசாரணை வேண்டும் எனக்கோரி பொதுநலவழக்கொன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அது நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
போலீசாரால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறும் 20 வயதான லட்சுமி என்ற பெண், தன் கணவர் காசியை கடந்த நவம்பர் 22 அன்று ஒரு திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் முதலில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் குடிசையை சோதனையிடுவதற்காக வந்தவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்றதாகவும், காட்டுப் பகுதியில் லட்சுமி, மற்றும் அவர்களது குடும்ப்ப் பெண்கள் மூவரை, நான்கு காவலர்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனுச் செய்திருக்கிறார்.
''ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, காயம் ஏற்படுத்துதல், திருட்டு” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கச் சென்றபோது, லட்சுமியையும் மற்றவர்களையும் இரவெல்லாம் போலீசார் விசாரித்த்தாகவும், மிரட்டியதாக்வும், ஆனால் அவர்களை மருத்துவபரிசோத்னைக்கு அனுப்பவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கூறுகிறது.